25.2.04

பழசுதான்...இருந்தாலும் எப்பவும் புதுசு!

இன்று சமுதாயத்தில் வன்முறை அதிகமாய் இருக்கிறதே! இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இன்றைக்கு இருக்கக்கூடிய தலைவர்கள் அதாவது அரசியல்வாதிகள். அடுத்தது மதத் தலைவர்கள். முன்றாவது காரணம் சினிமா. சமுதாயத்தில் நிலவி வரும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இவற்றால் கணடப்படும் இளைஞர்களை இன்றைக்கு உள்ள அரசியல்வாதிகள் 'எக்ஸபிளாயிட்' பண்ணுகிறார்கள். ஆகவே அவர்கள் வன்முறைக்கு போகிறார்கள். இது நம் நாட்டில் மட்டும்தான் என்று இல்லை. உலகம் முழுவதும் வன்முறை தலைவிரித்தாட இவைதான் காரணம்.

சினிமாவும் ஒர காரணம் என்று சொன்னீர்கள். ரஜினியின் படங்களில் வன்முறை அதிகமாகவே உண்டு. ஆக, வன்முறை கூடாது என்று சொல்லும் ரஜினிகாந்த் மறைமுகமாக சமுதாயத்தின் வன்முறைக்கு காரணமாகிவிடுகிறாரே?
முன்பே சொன்னேன். சினிமா என் தொழில். வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே நான் என்னுடைய உணர்ச்சிகளை, கொள்கைகளை சொல்ல, அடுத்தவர்களின் சினிமாவை பயன்படுத்துவது நியாயமில்லையே! நான் நினைப்பதை செயல்படுத்தணும்னா துறவியாகி, இமாலயத்துக்குத் தான் போயாகணும். படங்களில் வன்முறை இருப்பது உண்மைதான். ஆனால் அநியாயத்துக்காக வன்முறையில் ஈடுபடுவதில்லையே! வன்முறையில் முடிவில் நடப்பது நல்லதுதானே!

- ரஜினிகாந்த் - 15.1.1989 கல்கியில் வெளியான பேட்டியிலிருந்து......

17.2.04

அப்படி போடு!

"எனக்கு தெரிந்து எந்த ரஜினி ரசிகரோ, மன்றமோ பாமகவுக்கு எதிராக போஸ்டரோ, எதிர்ப்போ காட்டவில்லை."

"என்னை பொறுத்தவரை, ரஜினி நல்ல நடிகர். பழைய விசயங்களை மறந்துவிட்டேன்."

"நீங்கள் குறிப்பிடும் காலகட்டத்தில் 'மக்களுக்கு நல்ல விசயங்களை கற்று தரவும் நமது கலாச்சாரங்களை கட்டிக் காக்கவும் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும் சினிமாக்ள் பயன்படவேண்டும்' என்ற விசயங்களை முன்வைத்துதான் கருத்துக்களை வெளியிட்டேன். எந்த நடிகருக்கும் அவரது தொழிலுக்கு இடைஞ்சல் வரும் வகையில் எனது விமர்சனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை. ஆனாலும் சினிமாவுக்கு எதிரானவன் என்று என்னை சித்தரிக்க துவங்கினார்கள்"

- ஜூனியர் விகடனுக்கு கொடுத்த பேட்டியில் டாக்டர் அய்யா.

16.2.04

ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்றக் கூட்டத்தைக் கூட்டி அவர்களை ஒரே இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

இத் தகவலை அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சத்தியநாராயணா தெரிவித்தார். ஊட்டி சுதந்திர நினைவு திடலில் நீலகிரி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் வெள்ளி விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய சத்தியநாராயணா,

ரசிகர்கள் மக்களுக்கு செய்யும் நற்பணிகளை ரஜினியிடம் தெரிவித்தேன். மகிழ்ச்சி அடைந்தார். ஆரம்பத்தில் இருந்தே இதுபோல் உதவிகள் செய்து வந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் என்றார்.

இப்போதிருக்கும் சூழ்நிலையில், ரஜினியின் புகழைப் பலப்படுத்த வேண்டும். வளர்ச்சியில் சரிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரசிகர்கள் ரஜினியைச் சந்தித்து பல காலம் ஆகிவிட்டது. விரைவில் ரஜினியை ரசிகர்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

மக்களவைத் தேர்தல் வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியைத் தோற்கடித்தே தீர்வது என்று ரஜினி ரசிகர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்து வரும் நிலையில், ரசிகர்களை ரஜினி சந்திப்பது பெரும் முக்கியத்துவம் பெறுகிறது.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸூக்குப் போட்டியாக வீர வன்னியர் பேரவையை நடத்தி வரும் ஜெகத்ரட்சனுக்கு சமீபத்தில் ரஜினி வாழ்த்துச் செய்தி அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது.

Courtesy : Thats Tamil.com

13.2.04

சென்னை மாவட்ட நிர்வாகிகளின் கருத்து-களைப் பற்றி, ரஜினி தரப்பு என்ன சொல்-கிற-தென்று அறிய, அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவை ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் சந்தித்தோம். முதலில் பேட்டிக்கு மறுத்தவர், பிறகு அமைதி-யானார். பிறகு நமது கேள்விகளுக்குப் பதில் கூற ஆரம்பித்தார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் ரஜினி ரசிகர் மன்றங்-களெல்லாம் பா.ம.க. எதிர்ப்புநிலை எடுத்திருக்கிறார்களே... இதற்குத் தலைமையிடமிருந்து ஆதரவு இருக்கிறதா?
‘‘ரசிகர்கள் பா.ம.க.வை எதிர்ப்பதற்காகத் தலைமை-யிடமிருந்து எந்த உத்தரவும் கொடுக்கப்படவில்லை. நாங்கள் அவர்களை அமைதியாக இருங்கள் என்று தடுத்தாலும், அதைக் கேட்கின்ற மனநிலையில் அவர்கள் இல்லை. காரணம், தலைவரின் படம் ரிலீஸான போது, பா.ம.க.வினர் செய்த பிரச்னை காரணமாகவே அவர்கள் அனைவரும் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். இந்த நிலையையும், இதன் பின்விளைவுகளையும் நான் தலைவர் ரஜினியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.’’

இந்தத் தேர்தலில் யாருக்காவது ஆதரவு என்ற நிலை எடுப்பீர்களா?
‘‘இதுகுறித்து முடிவுசெய்ய வேண்டியவர் ரஜினிதானே தவிர, நானில்லை. இருந்தாலும் தேர்தலுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன. அதுபற்றி இப்போது பேச வேண்டியதில்லையே.’’

உங்கள் ரசிகர்களை 96_ம் ஆண்டு தேர்தல் மூலம் அரசியல்-வாதி-களாக்கிவிட்டு, இப்போது அமைதியாக இருந்தால் எப்படி?
‘‘அந்தத் தேர்தலில் ரசிகர்களை அரசியலுக்கு அழைத்தது தலைவர்தானே தவிர, நானில்லை. இனிமேலும் ரசிகர்களை அரசியலுக்குப் பயன்படுத்த வேண்டுமானால் அதை முடிவு செய்பவர் ரஜினிதான். நான் அவரின் கருத்துக்களை ரசிகர்களுக்கும், ரசிகர்களின் எண்ணங்களை அவருக்கும் எடுத்துச் சொல்கிறேன், அவ்வளவுதான்.’’

சுமார் இருபதாண்டுகளுக்கும் மேலாக ரசிகர் மன்றங்-களை நடத்திவரும் உங்கள் ஆதரவாளர்கள், தங்களுக்கு இன்னும் சரியான அரசியல் அங்கீகாரம் கிடைக்க-வில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார்களே?
‘‘இருபது வருடங்களுக்கு முன் ரசிகர் மன்றங்களைத் தொடங்கியவர்கள், ‘இருபது வருடங்கள் கழித்து ரஜினி அரசியலுக்கு வருவார்’ என்ற எதிர்பார்ப்புடன் மன்றங்-களை ஆரம்பிக்கவில்லை. தலைவரின் நடிப்பு மட்டு-மின்றி அவரின் மனிதாபிமானம், நல்ல கேரக்டர் ஆகிய அனைத்திலும் கவரப்பட்டு ஒன்று சேர்ந்-திருக்கும் கூட்டமிது. ரஜினிக்கும், ரஜினி ரசிகர்-களுக்கு-மிடையே உள்ள உறவு, ஒரு அரசியல் தலைவனுக்கும், தொண்டனுக்குமிடையே உள்ள சாதாரண உறவல்ல. அதையும் தாண்டி மிகவும் உன்னதமானது.’’

ரசிகர்கள் தங்களின் சொந்தப் பணத்தை லட்சக் கணக்கில் செலவழித்து பல்வேறு நற்பணிகளைச் செய்து வருகின்றனர். கேட்டால் ‘சிலர் குடிக்கும், பெண்-ணுக்கும், சூதாட்டத்திற்கும் அடிமையாகி பணத்தைச் செலவழிப்-பார்கள். நாங்கள் ரஜினிக்கு அடிமையாகிவிட்-டோம்’ என்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் என்ன சொல்-கிறீர்கள்?‘‘கெட்ட விஷயங்களுக்கு அடிமையாகி சமுதாயத்தைக் கெடுப்பதைவிட, நல்ல விஷயங்களுக்கு அடிமையாவது நல்லதுதானே. இதன்மூலம் அவர்களின் பெற்றோருக்கு நல்ல மகன் கிடைத்திருக்கிறான். மனைவிக்கு நல்ல கணவனும், குழந்தைகளுக்கு நல்ல தந்தையும் கிடைத்திருக்கிறான். எல்லாவற்றையும்விட, ரஜினி மூலம் நாட்டுக்கு நல்ல குடிமகன்கள் கிடைத்திருப்பது பெருமைக்-குரிய விஷயம்-தானே!’’

‘‘உங்களிடமிருந்து அரசியல் உத்தரவை எதிர்பார்க்கும் உங்கள் ரசிகர்களுக்கு...?’’‘‘ரசிகர்கள் மிகவும் வேகமானவர்கள். அதே வேகத்தில் நானும் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், அது லட்சோப லட்ச இளைஞர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும். எனவே, அவர்களை அமைதியாகவும், நேர்மையாகவும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கிருக்கிறது. எனவே, அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது.’’

ரசிகர்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார்-களே...?‘‘தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் மகிழ்ச்சி; எனக்கும் மகிழ்ச்சி. அதேநேரம் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறும் எங்கள் மன்றத்தினரை நான் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதும், அமைதியாகப் போய்-விடுவார்கள்.’’ சென்னையில் ரசிகர் மன்றம் சார்பில் வாழப்-பாடி ராமமூர்த்தியின் சிலை வைக்க இருப்ப-தாகவும், அதை ரஜினி மூலம் திறக்க இருப்பதாகவும் ரசிகர் மன்றத்தலைவர்கள் கூறுகின்றனரே!

‘‘இப்போதுதான் கூறியுள்ளனர். அதையும் தலை-வரிடம் எடுத்துச்சொல்லி அவர் என்ன சொல்கிறாரோ அதையும் மன்றத்தினரிடம் கூறுவேன்.’’

Courtesy : Kumudam Reporter

Complete Story - http://www.kumudam.com/reporter/mainpage.php

12.2.04

வைகோவுக்கு ரஜினி போன் :

பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட வைகோ 577 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அவர் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் இரவு தொலைபேசி மூலம் வைகோவிற்கு வாழ்த்து சொன்னார். நலம் விசாரித்தார். அப்போது தொலைபேசியில் ரஜினியும் வைகோவும் பேசிக் கொண்ட விவரம் வருமாறு:

ரஜினி நலம் விசாரித்த போது, ""நீங்க ஜெயில விட்டு வீட்டுக்கு வந்ததில ரொம்ப சந்தோஷங்க. ஜெயிலில் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க. உங்க ஹெல்த்தைப் பத்தி எனக்குக் கவலையா இருந்தது. நீங்க நல்ல உடல் நலத்தோட இருக்கணுங்க. எல்லா வகையிலும் நீங்க சிறப்புப் பெறணும். இரண்டு நாளுக்கு முன்பே உங்களுடன் பேச நினைத்து போனில் தொடர்பு கொண்டேன். நீங்கள் கோர்ட்டுக்கு போயிருப்பதாக சொன்னாங்க,'' என்று சொல்ல, அதற்கு வைகோ, ""ரொம்ப நன்றிங்க, நீங்க வாழ்த்துச் சொன்னது மிகவும் மகிழ்ச்சியா இருக்கிறது. உங்க ஹெல்த் நல்லாயிருக்கா?,'' என்று கேட்டார். ரஜினி அதற்கு, "நான் நல்லாயிருக்கேன்,'' என்று பதில் தெரிவித்தார்.

அடுத்து வைகோ பேசும் போது, ""ஏராளமான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ஆதரவை நீங்கள் உங்களுக்காக எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக் கொள்ளவில்லை. அதுதான் பெரிய விஷயம். உங்கள் படம் வரவில்லையேங்கிற ஏக்கத்துல உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். "பாட்ஷா, அண்ணாமலை, முத்து மற்றும் படையப்பாவை விட இன்னும் சிறந்த படங்களை நீங்கள் கொடுக்க முடியும். ஜப்பானில் உங்கள் படங்கள் அரங்கம் நிறைந்து ஓடுவதாக கேள்விப்பட்டேன். இந்தப் பெருமை இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை. உங்கள் அலைகள் ஓய்வதில்லை என்பதை நீங்கள் நிரூபிக்க முடியும். உங்களிடம் அப்படிப்பட்ட திறமை இருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக வருடத்துக்கு ஒரு படம் தரவேண்டும்,'' என்று கூறினார்.

இதற்கு ரஜினி, ""ரொம்ப தாங்ஸ் சார். புதிய படத்தைப் பற்றித் தான் நான் சீரியஸ்சா பிளான் பண்ணிக்கிட்டிருக்கேன். சீக்கிரத்தில் ஒரு நல்ல படத்தை கொடுக்கப் போகிறேன்,'' என்றார். இத்துடன் தொலைபேசி மூலம் நலம் விசாரிப்பு முடிந்தது.

ரஜினி வைகோ தொலைபேசி பேச்சு குறித்த விவரம் ம.தி.மு.க., அலுவலகத்தின் செய்திக் குறிப்பு மூலம் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Dinamalar, dated today
நமது தமிழக அரசியல் போல் ஒரு 'மன்னிக்கும் மனப்பான்மை' கொண்ட அரசியல் நாகரீகம், இந்தியாவிலேயே எந்த மாநிலத்துக்கும் கிடையாது என்று என்னால் உறுதியாய் சொல்ல முடியும். ஒரு தேநீர் விருந்தில் சோனியாவோடு கொஞ்சியபடி, வாஜ்பாய் அமர்ந்திருந்த நாற்காலியின் கால்களைப் பதம் பார்த்த செல்வி.ஜெயலலிதா, இன்று கன்னியாகுமரிக்கு ஓடோடி சென்று அதே வாஜ்பாயிடம், 'நன்னடத்தை' சர்ட்டிபிகெட் வாங்கிப் 'பச்சையாய்' சிரிக்கிறார். தனது நாற்காலியின் மேல் குறி வைத்து, உயிரையும் எடுக்கத் துணிந்த திரு.வை.கோவோடு கலைஞர் 'அண்ணன் தம்பி உறவு' கொண்டாடி, தொல்காப்பியப் பூங்காவைப் பற்றி அளவளாவுகிறார். போன தேர்தலில், 'கோவணத்தையும் உருவிவிடுவார்' என்று நடுநடுங்கிய திரு.ராமதாஸ், இன்று இறுகக்கட்டிய வேட்டியோடு கோபாலபுரத்தில் கூட்டணி நெய்கிறார்.

சரி..கூட்டணி, கொள்கைகளை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள் - நேற்று வெளியானதொரு அரசியல்வாதியின் பேட்டி லட்சணத்தைக் கொஞ்சம் அலச வேண்டியது அவசியமாகிறது. திரு.ரஜினிகாந்த் எனும் நடிகர் ரசிகர்களின் சாயங்கால சந்தோஷங்களுக்காக...அவ்வப்போது அரசியல் வசனங்களைப் பேசி, திரை வீரராய் ஜொலித்துக் கொண்டிருந்தார். அவரது காட்டில் மழை பெய்த காலம் போய், தானுண்டு தன் வேலையுண்டு என்று ஆன்மீக ரீதியாய் அமைதியாய் இருப்பவரை, இந்த அரசியல்வாதிகள் விடுவதாய் இல்லை போலிருக்கிறது.

என்னதான் சொன்னாலும், திரு.ரஜினிகாந்த் என்பவர், தமிழ்த் திரையுலகின் பல இலக்கணங்களைத் தகர்த்தெறிந்த நடிகர் என்பதிலும், சிறந்த மனிதர் என்பதிலும் பலருக்கு ஐயமிருக்காது. அவரது பாபா படத்திற்குத் தேவையில்லாமல் பிரச்சினைகள் செய்த காலம் போய், திரு.ராமதாஸ் அவர்கள் நேற்று, 'ரஜினிகாந்த் சேற்றில் ஊறும் பன்றி' என்று அருவருக்கத்தக்க வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி வீசி இருக்கிறார். இதை விட, ஒரு அசிங்கமான வார்த்தைகள் நிரம்பிய வாக்கியம் ...ஒரு நல்ல 'மனிதரைப்' பற்றி யாராலும் பகிரங்கமாய் பேச முடியாது.

எம்.ஜி.ஆர் என்ற நடிகரும், இது போன்ற அசிங்கமான அர்ச்சனைகளால் தான் அரசியலுக்கு இழுத்து அழைத்து வரப்பட்டார். அவரும் உயிருள்ளவரை முதல்வர் பதவியில் இருந்து, 'அரசியல் சாணக்கியர்களுக்கு' சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்து வந்தார். அதே போல், திரு.ராமதாஸ் அவர்கள் பூனைக்கு மணி கட்டுவதாய் நினைத்து, புலியின் கழுத்தை தடவிக் கொண்டிருக்கிறார். இந்தப் 'புலி வருது' கதை, ராமதாஸ் அவர்களால் முற்றுப்புள்ளி அடையும் போல் தெரிகிறது.

அட...இன்றைய ஒரு சில அரசியல்வாதிகளின் லட்சணங்களைப் பார்க்கும் போது, இந்த வெள்ளை மனிதர் வந்தால் தவறில்லை தான்! ரஜினிகாந்தோ, விஜய்காந்தோ...யாரோ ஒருவர் வரட்டும். அவர்கள் நல்ல அரசியல்வாதிகளாய் நடித்தால் கூட போதுமய்யா, அரசியல் சாக்கடையின் மேல் வாசனைத் திரவியம் அடித்த சந்தோஷமாவது இருக்கும்.

- அருண் வைத்யநாதன்

Courtesy : http://arunviews.rediffblogs.com

10.2.04

சென்னை, பிப்.10- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்கடிக்க ரஜினி ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து ரஜினி தலைமை ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணன் விழுப்புரத்தில் நடந்த ரஜினி ரசிகர்கள் கூட்டத்தில் நேரடியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


விழுப்புரம் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், சிறப்புரையாற்றிய சத்யநாராயணன் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வீடு வீடாக சென்று பாமகவுக்கு எதிராக பிரசாரம் செய்யும்படியும் ரஜினி ரசிகர்களுக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.


கடந்த வாரம் ரஜினி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக சாடியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் பாமகவுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுமாறு ரசிகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ரஜினி குறித்து ராமதாஸ் விமர்சித்தையடுத்து அவரது கொடும்பாவி ஒரு சில இடங்களில் ரஜினி ரசிகர்களால் எரிக்கப்பட்டது. இதில், சில ரசிகர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ளது. சத்யநாராயணனின் உத்தரவையடுத்து, பாமக போட்டியிடும் புதுவை, திண்டிவனம், சிதம்பரம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் தீவிர எதிர்பிரசாரத்தில் ஈடுபட கடலூர், விழுப்புரம் மாவட்ட ரசிகர்கள் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மாவட்டக் கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளனர்.


ரஜினி ரசிகர்கள் பாமகவுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நிலையில், அது பாமகவின் தேர்தல் முடிவில் பாதகத்தை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது!

Courtesy : Dinamani, dated today
சாது மிரண்டால்!

ஆர்.எழுமலை கவுண்டர், திருக்கோயிலுõர், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: வன்னிய சமுதாயமே ராமதாஸ் பின்னால் செல்வதாக இப்பகுதியில் ஒரு வாசகர் எழுதி இருந்தார். அவரின் அறியாமையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

நான் ஒரு ரஜினி ரசிகன். ராமதாசின் சொந்த மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலுõர் என்னும் ஊரில், ஏறத்தாழ 200க்கும் மேலான வன்னியர்கள், ரஜினியின் தீவிர ரசிகர்களாக உள்ளனர். அவரின் சொந்த மாவட்டத்திலேயே பல லட்சம் வன்னியர்கள் ரஜினியின் ரசிகர்களாக உள்ளனர் என்றால், பிற மாவட்டத்தில் எத்தனை லட்சம் ரஜினி ரசிகர்கள் இருப்பர் என்று சிந்தித்து பாருங்கள்.

"சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்பதை ராமதாஸ் உணர வேண்டும்.

Courtesy : Ithu Ungal Idam, Dinamalar dated today

9.2.04

ரஜினி ரசி கர்களின் எதிர்ப்பை பா.ம.க.,வினர் எவ்வாறு தேர்தலில் சமாளிக்கப் போகின்றனர்?

ஏண்டா வாயைக் கொடுத்தோம் என சங்கடப்பட்டுக் கொண்டுள் ளாராம் ராமதாஸ்! பா.ம.க.,வை மட்டுமல்ல... அதன் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையுமே வீழ்த்த கங்கணம் கட்டிக் கொண் டுள்ளனர் ரஜினி ரசிகர்கள். பா.ம.க.,வுக்காக ரஜினி வாய்ஸ் கொடுத்தால் தான் பிழைக்க முடி யும்!

Courtesy : Andhumani


தாங்கள் போட்ட கிடுக்கிப் பிடியில் சினிமாக்காரர்கள் சிக்கி, விழி பிதுங்குவதைப் பார்த்து சிலிர்த்துக் கொண்டனர் டாக்டர் ராமதாசும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும். இப்போது இவர்கள் வீசிய எதிர்ப்புக் கணை, பூமராங் மாதிரி அவர்களையே தாக்க திரும்பியுள்ளது. அதாவது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் ராமதாஸை அரவணைத்துக் கொள்ளும் கூட்டணிக்கு எதிராக வேலை செய்யும்படி ரஜினி தரப்பும், கி.சாமி கைகோர்க்கும் கூட்டணிக்கு எதிரான வேலைகளைத் துவங்கும்படி கமல் தரப்பும் தங்கள் ரசிகர் மன்றங்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. குறிப்பாக, மேற்படி டாக்டர்களின் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்படும் தொகுதியில் உள்ள ரசிகர்களுக்கு இந்த ரகசிய உத்தரவு கடுமையாக பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாக பேசிக் கொள்கின்றனர். அட! முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது சரியாகத்தான் இருக்கிறது.


தன்னை இளமையாகக் காட்டிக் கொண்டு, "சாயா... சாயா...' டைப் பாட்டுக்கு ஆட்டம் போடுவது இனி எடுபடுமா? என்று ஒரு சர்வே மாதிரி, தனக்கு மிக நெருக்கமானவர்களிடம் கேட்டு வருகிறார் ரஜினி. இந்தியில் அமிதாப் பண்ணுவது மாதிரி, தன் ரியல் தோற்றமான நரைமுடி தாடியுடன் கம்பீரமான கேரக்டர் செய்தால் எப்படி இருக்கும்? என்று ஆலோசனை செய்து வருகிறார் ரஜினி. புதுப்படத்தில் ரஜினி தோற்றம் எப்படி? செயற்கையான இளமையா? இயற்கையான முதுமையா? என்று ஒரு பட்டிமன்றமே நடத்தி வருகிறது ரஜினி வட்டாரம்.

Courtesy : Dinamalar Vaaramalar
ஜாதிக்கட்சி தலைவர்களின் சமுக பிரக்ஞை!

சினிமாவில் வில்லன் கதாநாயகன் ஆவதும் கதாநாயகன் ஆவதும் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால் வில்லன் காமெடியனாவது அரசியல் வாழ்க்கையில் மட்டும்தான் பார்க்கமுடியும். சினிமா தமிழ்க் கலாசாரத்தை சீரழிக்கிறதுன்னு போர்க்கொடி து¡க்கியவர்களெல்லாம் எந்தக் கூட்டணியிலும் சேர முடியாமல் அரசியல் அனாதைகளாகிவிட்டனர். 'பாபா' பட வெளியீட்டு நேரத்தில் படப்பெட்டியை முந்திரி காட்டுக்கு கடத்திட்டு போகமளவுக்கு வெறிபிடித்து தியேட்டர்களையெல்லாம் துவம்சம் பண்ணியவர்கள் இன்று தமிழ் கலாசாரத்தை காப்பதற்காகத்தான் செய்தோம்னு சொல்றது செம ஜோக். தேர்தல் முடிந்ததும் இவர்கள் இன்னோரு வேடம் போடக்கூடும் தங்களது சமுகத்தை சேர்ந்த இளைஞர்களெல்லாம் நடிகர்களின் பின்னால் அலைவதை பொறுக்க முடியாத ஜாதிக் கட்சித்தலைவர்களின் செயல்களை சில அறிவு ஜீவிகளும் ஆதரிப்பதுதான் புரியவில்லை. இன்று ஜாதி, மத வேற்றுமை பாராட்டாத ஒரே இடம் என்று சொன்னால் அது நடிகர்களுக்கான ரசிகர் மன்றங்கள் மட்டும்தான். எல்லோருக்கும் சம உரிமை கொடுத்து எவ்வித பாகுபாடும் இல்லாமல் இரண்டரை மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார வைக்க சினிமாவால் மட்டும்தான் முடியும். கொடியேற்றுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற விடலைகளின் ஆர்வக் கோளாறுகளை அமைதி வழியில் மட்டுமே திருத்த முடியும். நடிகர்களுக்கு ஒரு படம் தோல்வியுற்றால் இன்னொரு படம். ஓரே வருடத்தில் ஜந்து படங்களை கூட கொடுத்து இழந்த பணத்தையும் புகழையும் மீட்டுவிட முடியும். ஆனால் ஜந்து ஆண்டுக்கொருமுறை வரும் தேர்தலை தவறவிடும் அரசியல் கட்சியால் தாக்குப்பிடிக்க முடியாது. ஆடும் வரை ஆடிவிட்டு தேர்தல் நேரத்தில் மிரண்டு போய் ரசிகர்களை கூல் பண்ணுவது தேவைதானா?

- ஜெ. ரஜினி ராம்கி

4.2.04

www.rajinifans.com என்றவுடன் ரஜினியின் புகழ்பாடுவது மட்டும்தான் வேலைன்னு நினைச்சு எட்டி கூட பார்க்காமல் நிறைய பேர் ஓடிப்போயிடற மாதிரிதான்னு எனக்கு தெரியுது. இங்கே ரஜினி தொடர்பான அரசியல், ஆன்மீகம்னு எல்லாத்தையும் கலந்து கட்டி அடிக்கிறோம்னு தன்னடக்கத்துடன் தெரிவிச்சுக்கிறோமுங்கோ! இது ஆரம்பிச்ச கதையை சொல்லணும்னா நிறைய சொல்லியாகணும்.

விழப்புரத்தில் அங்கீகாரம் பெற்று தான் ஆரம்பித்த 'நாட்டுக்கொரு நல்லவன்' ரஜினிகாந் நற்பணி மன்றத்தை சென்னைக்கு வந்து பின்னரும் உயிர்ப்பிக்க நினைத்த நட்டு என்கிற நடராஜீம், ஏற்கனவே ரஜினிக்கென்று தனியாக யாகூ குழுமத்தை ஆரம்பிச்சு கலக்கிட்டு இருந்த சிங்கப்பூர் Shajahan ஓன்றாக சேர நடுவே ததிமுக - தமாக கூட்டணிக்கு வாய்ஸ் கொடுத்த ரஜினி மாதிரி நானும் என்னுடைய கையை கொடுக்க, இன்னும் சில அன்பர்களின் சிந்தனையாலும் பொருளாதார உதவியாலும் பாபா வெளியான நேரத்தில் வலைத்தளத்தை இணையத்தில் ஏற்ற முடிந்தது. ரஜினியின் அபூர்வமான புகைப்படங்கள், ரஜினி படங்கள் குறித்த விமர்சனங்கள், விவாதங்கள், ரஜினி பட பாடல்கள், ரஜினியின் உரைகள், லேட்டஸ்ட் செய்திகள் என எங்களால் முடிந்ததை கொடுத்திருக்கிறோம். இதுவரைக்கும் 900 உறுப்பினர்களையும் 40 தீவிர உறுப்பினர்களையும் கொண்டிருக்கும் யாகூ குழுமத்தை பிண்ணணியில் கொண்டு இயங்கினாலும் ரஜினி பற்றி அதீத புகழ்ச்சியுரைகளையோ காழ்ப்புணர்ச்சியுடனான தனி மனித தாக்குதல்களோ இல்லாமல் குழுமத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்துவது சாதனைதான். ரஜினி பற்றிய அனைத்து சங்கதிகளும் எளிதாகவும் முழுமையாகவும் கிடைக்குமாறு செய்வதுதான் எங்களின் முதல் நோக்கமாக இருந்து வருகிறது. www.rajinifans.com வலைத்தளத்தை ஒரு தடவை பார்வையிட்டு நிறை குறைகளை தெரியப்படுத்தினால் எங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

- ஜெ. ரஜினி ராம்கி