8.9.08

எந்திரன் - தி ரோபோ!


ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிக்கும் ‘எந்திரன்‘ படத்தின் படப்பிடிப்பு பெரு நாட்டில் நடக்க இருக்கிறது.

'சிவாஜி' படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்கும் படத்துக்கு ‘எந்திரன்’ என்று பெயரி டப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு 8-ம் தேதி பெரு நாட்டில் தொடங்குகிறது. இங்குள்ள புராதான மலையான மச்சு பிச்சுவில் பாடல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இதற்காக வியாழக்கிழமை ரஜினி, ஷங்கர் உட்பட படக்குழுவினர் பெரு நாட்டுக்குப் புறப்பட்டு சென்றனர்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ரத்னவேல் ஒளிப்பதிவு செய்கிறார். சாபு சிரில் அரங்கம் நிர்மாணிக்கிறார். மனிஷ் மல்ஹோத்ரா உடை அலங்காரம் செய்கிறார்.

ஹாலிவுட் படங்களான 'மென் இன் பிளாக்', 'பேட்மேன் ரிட்டர்ன்ஸ்' படங்களில் பணியாற்றிய மேரி இ.வாக் எந்திர மனிதனுக்கான உடைகளை உருவாக்குகிறார். பிரபல ஸ்டுடியோவான ஸ்டான் வின்ஸ்டனில், அனிமேஷன் பணிகள் நடக்க உள்ளது.

'ஹைடன் டிராகன்', 'மேட்ரிக்ஸ்' போன்ற படங்களுக்கு சண்டை காட்சி அமைத்த யென் ஊ பிங் ஸ்டண்ட் காட்சிகள் அமைக்கிறார். சர்வதேச புகழ்பெற்ற 3 தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றும் முதல் இந்திய படம் 'எந்திரன்' என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெஷல் எபக்ட்ஸ் பணிகளை ஹாலிவுட் கம்பெனிகளான ஐஎல்எம். திபெத், கேப் இஎப்எக்ஸ் மற்றும் ஹாங்காங் நிறுவனம் சென்ட்ரோ மற்றும் மென்ஃபோன்ட் ஆகியவை மேற் கொள்கின்றன. விஷ§வல் எபக்ட்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகளில் இந்திய தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்கின்றனர்.

>>>>>>>>>

எந்திரன் - தி ரோபோ!

இனி கோலாகல கொண்டாட்டங்கள் தொடங்கட்டும்!


ரஜினியை நேசிக்கும் ரசிகர்களுக்கும்,

அந்த செய்திகளினை சொல்லி சுவாசிக்கும் சில்லறை மனிதர்களுக்கும்!

31.8.08

விகடன் கணிப்பு

விகடனின் கருத்துக்கணிப்ப நாம் நேற்று சொன்னபடியே எதிர்பார்த்தபடி வந்திருக்கிறது.

எதிர்பாராத விஷயம் , பத்திரிக்கைகள்தான் பிரச்னைக்கே காரணம் என்று உண்மையைச் சொல்லி அவர்களே சொந்த செலவில் சூன்யம் வைத்துக்கொண்டதுதான்.

இனி என்ன பிராயச்சித்தம் போகிறார்கள் என்பதை அவர்களே சொல்வார்கள் என்று எதிர்பார்ப்போமாக.

விகடனின் கருத்துக்கணிப்பை இங்கே சுருக்கி தருகிறோம். நீங்களே படித்துககொள்ளுங்கள்

1.குசேலன் படத்துக்காக கர்நாடகாவிடம் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்டது..

சொந்த லாபத்துக்காக - 44.85%
தயாரிப்பாளருக்காகவும் கர்நாடகவாழ் ரசிகர்களுக்காகவும் - 55.14%

2.குசேலன் படத்துக்காக மன்னிப்பு கேட்டதில் ரஜினியின் இமேஜ்...

சரிந்துவிட்டது - 38.02%
மாற்றமில்லை - 61.89%

6.ரஜினியைத் தமிழர், கன்னடர் என்று ஒரு தரப்பினர் மாநில ரீதியாக விமர்சனம் செய்வதற்குக் காரணம்...

ரஜினியின் நடவடிக்கைகள்தான் - 46.86%
வளர்ச்சியின் மீதுதானபொறாமை மற்றும் உள்நோக்கம் தான் - 53.13%

7.ரஜினி ரசிகர்கள் அவர் மீது வைத்துள்ள அபிமானமும் செயல்பாடுகளும்....

யாரையும் பாதிக்காத சொந்த விஷயம் அதனால் நாட்டுக்கு நன்மையும் கூட 64.21 %
சமூகத்தைப் பாதிக்கும் தவறானமுன்னுதாரணம் - 35.78%

ரஜினியை இதுவரையில் சாமர்த்தியமாகப் பயன்படுத்தி அதிக பலன் அடைந்தவர்கள்...

ரசிகர் மன்றத்தினர் - 7.04%
மற்றவர்கள் - 92.94%

பின்குறிப்பு மற்றவர்களில் பத்திரிக்கைகளும் உள்ளடக்கம். மச்சான்,, விகடன் ரொம்ப நல்லவன்டான்னு ரசிகர்களிடமிருந்து அனுதாப அலை வருமென்று நினைத்திருந்தால் வெரி ஸாரி!

அவர்கள் போட்ட கணக்குதான் வேறு மாதிரியான கணக்காக மாறியிருக்கிறது. ஒத்த ஆப்ஷன்களை கூட்டுவதால் வரும் ரிச்ல்ட் நிச்சயம் பிரமிக்க வைக்கிறது... ரஜினி படத்தோடு வந்திருக்கும் அட்டைப்பட கேப்ஷன்போல.

8.8.08

O ஞாநிக்கு சில கேள்விகள்?

கருத்து சார்ந்த நிலைப்பாட்டை தாண்டிய தனிமனித காழ்புணர்ச்சியின் அடிப்படையில் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வந்திருக்கும் ஞாநி, அதை நிரூபிக்கும் வகையில் ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.

உங்கள் மேல் பரிதாபப் படுகிறேன், இன்றோடு நீங்கள் காலி, -இப்படிப்பட்ட வாசகங்களுடன் ரஜினிக்கு முடிவுரை எழுத முயன்ற முயற்சி எத்தனை காலமாக நடந்து வருகிறது. அதையும் மீறிதானே இருந்து வருகிறார் ரஜினி.உங்களுக்கு புரிபடாத இந்த ரசிக அபிமானத்தைதானே உங்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.

ரஜினி உதைப்பேன் என்று சொன்னவுடன் பூச்செண்டு கொடுத்தீர்கள். இன்று வருத்தம் தெரிவித்தவுடன் குட்டு வைக்கிறீர்கள். ரஜினியின் நிலைப்பாட்டை ஒரு சினிமா நடிகருக்கான பலவீனம் .சுயநலத்திற்காக அப்படிசெய்தார் என்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்க நான் முயலவில்லை. ஆனால் மேன்மைமிகு பத்திரிக்கை தொழில் நடத்தும் தங்களது நிலைப்பாடு என்ன..ரஜினி உதைப்பேன் என்பதற்கு பூச்செண்டு கொடுத்தீரே? உதைப்பது வன்முறைச் செயல்- நீங்கள் வன்முறையை ஆதரிக்கும் தீவிரவாதியா? ஏற்பில்லா கருத்தை சொல்லும் மனிதர்களை உதைப்பதுதான் உங்கள் நியாயமா?.

கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டதால் ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் காணாமல் போய்விட்டது என்பது உங்களது அடுத்த கண்டுபிடிப்பு. இவ்வகையான நப்பாசையுடன் உங்களை போல எத்தனை பேர் எத்தனை வருடங்களாக அலைகிறார்கள் தெரியுமா? விடிஞ்சா கல்யாணம் விமர்சனத்தில் ஆனந்த விகடன் “அடுத்த வருட சூப்பர் ஸ்டார் சத்தியராஜ்” என்று எழுதியது. இன்று 2008- சத்தியராஜின் நிலைமை என்ன? சத்தியராஜ் மேடைகளில் கைத்தட்டல் வாங்க “கேணக் கூ---” என்று பேசிக்கொண்டிருக்கிறார். நீங்களெல்லாம் இவ்வாறு எழுதுவது ரஜினி சூப்பர் ஸ்டார் ஆன பின்னணியை அறியாததால்தான்.

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் பேசிய அரசியல் வசனங்கள்தான அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வாங்கி தந்தது என்று நம்பினால் உங்களை காட்டிலும் ஏமாளி வேறு யாருமில்லை. கடந்த இரு படங்களில் (சிவாஜி, சந்திரமுகி) அரசியல் வசனமே கிடையாது. அப்படங்கள் மகத்தான வெற்றி பெற்றன. அதற்கும் சில சப்பைகட்டுகள் உங்களிடம் இருக்கின்றன- ஜோதிகா நடிப்புக்காகவும், ஸ்ரேயாவின் இடுப்புக்காவும் படம் ஓடியது என்று.

இந்த வாதத்தை முன்வைக்கும் அறிவு ஜீவிகளிடம் கேட்கிறேன். எழுபதுகளில் வந்த எம்.ஜி.ஆர் படங்களில் (உலகம் சுற்றும் வாலிபன் முதல் மீனவ நண்பன் வரை) அதீத கவர்ச்சி காட்சிகள் உண்டு. அந்த படங்களெல்லாம் ராதா சலூஜா,லதாவிற்காக ஓடியதா? எம்.ஜி.ஆரின் பங்கு ஒன்றுமேயில்லையா?

எம்.ஜி.ஆர், ரஜினி போன்ற மனிதர்களின் வெற்றியை அலசும்போது, அதன் பிண்ணனியில் உள்ள உளவியல் காரணங்களை நீங்கள் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள். ரஜினியின் வெற்றி, கறுப்பு நிற்த்தையும், வேகமான வசன உச்சரிப்பையம் மீறி,சினிமாவில் பிரகாசிக்க முடியும் என்று நிரூபித்ததில் துவங்கியது. எவ்வித பின்புலம் இல்லாமல், எதிர்ப்புகளை மீறி ஒரு சாதாரண மனிதன் தொடர் வெற்றிகளை பெற்ற போது சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. ஒரு நடிகனாவதற்கு காலகாலமாக இருந்து வந்த இலக்கணங்களை உடைததவர் ரஜினி. இந்த ரஜினிக்கு ரசிகர்களானவர்கள்தான் உண்மையான ரஜினி ரசிகர்கள். இவர்கள்தான் எண்ணிக்கையில் அதிகம்.

இந்த ரஜினி ரசிகனுக்கு, ரஜினி என்ற மனிதனை பிடிக்கும். அவனுடைய பலம் மற்றும் பலவீனங்களையும் பிடிக்கும். அவனுக்கு வேண்டியது தீபாவளி மற்றும் பொங்கலுக்கு ரஜினி படம்.முதல்நாள் டிக்கெட். அதன் பின்னால் அவன் பிழைப்பு அவனுக்கு. இத்தகைய ரஜினி ரசிகர்கள்தான் இன்று வரை ரஜினியின் வெற்றிக்கு காரணம். அரசியல் ஆசையில் பேனர் கட்ட வந்தவர்கள் எல்லாம், விஜயகாந்த் கட்சிக்கு போய் விட்டார்கள். ரஜினியின் அரசியல் நிலைப்பாடு உண்மையான ரஜினி ரசிகனை பாதிக்கலாம். ஆனால் அதன் கோபதாபங்கள் ரஜினி என்ற திரைநட்சத்திரத்தை ரசிப்பதிலிருந்து தடுக்காது. இல்லாவிடில் 1997 பாராளுமன்ற தேர்தலில் ரஜினி கருத்து தெரிவித்த போதே அவரது சூப்பர்ஸ்டார் பட்டம் காணாமல் போயிருக்க வேண்டும். சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினியின் திரை ஆளுமைக்கு கிடைத்தது. அரசியல் நிலைப்பாடுகள் அதனை பாதிக்காது. இதனால்தான் பாபாவிற்கு பின்னால் ரஜினியால் மற்றுமொரு வெற்றியை பெற முடிந்தது.


தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்ற ஜனநாயக நிலைப்பாட்டை எடுக்க சொல்கிறீர்கள்( 49 ஓ). ஆனால் ரஜினி மற்றும் பொதுப்பிரச்சனைகளில் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பது கட்டாயமா என்ன? தமிழ்நாட்டு மக்களை வைத்து சம்பாதித்ததால் அவர் கருத்து தெரிக்க வேண்டுமென்றால், ரிலையனஸும், டாடாவும் கூடத்தான் தமிழர்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏன் நீங்கள் கேட்கவில்லை. எல்லாப் பொது விசயங்களிலும் ரஜினியை கருத்து தெரிவிக்க நிர்பந்தித்து அவரை அரசியல்வாதி ஆக்குவது உங்களை போன்ற பத்திரிக்கைகாரர்கள்தான். ரசிகர்களல்ல.

பிரகாஷ் ராஜ், அர்ஜுன் ஆகியோருக்கு பிரச்சனை வருவதில்லையாம். ரஜினியின் திரை ஆளுமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லாத இந்நடிகர்களுடன் ஒப்பிடுவதிலிருந்தே உங்களது காழ்புணர்ச்சி புரிகிறது. இவர்களை போன்ற ஒரு சாதாரண நடிகனாக ரஜினியை மாற்ற வேண்டும் என்பதுதானே உங்கள் ஆசை.

ரஜினி படத்தின் ஆபாச காட்சிகளை பற்றிய உங்கள் விமர்சனம் சிரிப்பை வரவழைக்கிறது. நீங்கள் முன்பு எழுதிய விகடனிலும் சரி, தற்பொழுது எழுதும் குமுதத்திலும் சரி, இருக்கும் அரை/முக்கால் நிர்வாணப்படங்கள் உங்கள் கண்ணில் படவில்லையா? இத்தகைய பத்திரிக்கைகள் ஏற்படுத்தும் பாதிப்பை குறித்து உங்களுக்கு அக்கறை இல்லையா? நீங்கள் எழுதுவதை மட்டும் வைத்து பத்திரிக்கை விற்க முடியாது என்பதால்தானே இப்படங்களையும் பத்திரிக்கைள் வெளியிடுகின்றன.

நீங்கள் குசேலனை முழுவதும் போட்டுத் தாக்காமல் இருப்பதற்கு மறைமுகக் காரணங்கள் உண்டு. இப்படம் பிரமிட் சாய்மீராவால் விநியாகிக்கப் படுகிறது. தங்களுடைய ஒற்றைரீல் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனம் பிரமிட் என்ற காரணத்தால் மட்டுமே நீங்கள் படத்தை பாராட்டுவது போல் பாசாங்கு செய்துள்ளீர்கள்.

ரஜினி என்ற சக்தியின் வீழ்ச்சியை வேடிக்க பார்க்கும் ஆசை உங்களிடம் அதீதமாயிருக்கிறது. தங்களுக்கு தற்காலிக வெற்றியும், மகிழ்ச்சியும் கூட கிடைத்து விட்டதைப் போல் தோன்றலாம். ஆனால் அது மாயை.

ரஜினியின் வேலையை அறிவு ஜீவித்தனமான வாதங்களால் சிதைக்க வேண்டும் என்பதே உங்கள் முயற்சி. நீங்கள் வேண்டுமானால் மற்றவர் தொழில் நடத்துவதில் தவறு காணலாம்.. நாங்கள் அப்படியில்லை.

பாவம் நீங்கள்! உங்கள் தொழிலை நடத்துங்கள்!





நன்றி - www.rajinifans.com

10.5.08

ஆன்மீக பணியில் ரஜினிகாந்த்!


கிட்டுமோ ஞான யோகம்? கிடைக்குமோ குருவின் பாதம்?
கட்டுமோ மூல வாசி? காணுமோ கயிலை வீடு?
எட்டுமோ நாக லிங்கம்? ஏற்றுமோ தீப சோதி?
தட்டுமோ பளிங்கு மேடை தனையறியார்க்கு நெஞ்சே!

நெஞ்சறி விளக்கம்


இமயமலை அடிவாரத்தில் தன் ஆன்மீக தேடலின் ஒரு பகுதியாய்,தன் உள்ளம் நிறைந்த மகான் மஹாவதார் பாபாஜிக்கு ஆசிரம் அமைக்கும் ஆன்மீக பணியில் ரஜினிகாந்த்!

நன்றி - indiaglitz

10.4.08

நியாயத்தின் பக்கத்தில் ரஜினி! - வைகோ

ஒகேனக்கல் விவகாரத்தில் நடிகர் ரஜினியின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத் தில் என்ன நிலை எடுப்பார் என்று ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு கன்னடனும் எதிர்பார்த்திருந்த நேரம்... அவர் தெள்ளத் தெளிவாக நியாயத்தின் பக்கம் நின்றார். எதற்காகவும், யாருக் காவும் அவர் தன் உள்ளத்தில் இருப்பதைப் பூசி மெழுகவில்லை! 'ஒருவன் ரவுடித்தனம்செய்யஅத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தால் அவனை என்ன செய்வோம்? உதைக்க வேணாம் அவனை?' என்று உண்ணாவிரத மேடையில் பேசினார் ரஜினி. வீடு புகுந்து தாக்குபவர்களைத் தற்காப்புக் காக பதிலுக்குத் தாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. அதைத்தான் ரஜினி கூறியுள்ளார்.

அவருடைய பேச்சின் எதிரொலியாக ரஜினிக்கு ஏதேனும் ஆபத்தென்றால், வேடிக்கை பார்க்க மாட்டான் மானமுள்ள தமிழன்! இந்த விஷயத்தில் அவருக்கு ஒரு பிரச்னை என்றால் அவருக்காக முதலில் நிற்பது இந்த வைகோவின் இயக்கமாகத்தான் இருக்கும்!

உண்ணாவிரத போராட்டம் பாரதிராஜாவின் விளக்கம் :)


தமிழ் திரையுலகம் நடத்திய போராட்டம் பற்றி பாராதிராஜா கருத்து கூறியிருக்கிறார்.

தமிழ் திரையுலகம் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளவில்லையே?

உண்மைதான். உணர்வை காட்ட வேண்டும் என்பதற்காக எல்லாரும் ஒன்றுபட்டு நெய்வேலி போனோம். ஆனால் மறுநாள் ஒரு உண்ணாவிரதம் தனிப்பட்ட முறையில் நடந்ததே? அது ஏன் நடத்தப்பட்டது என்று பத்திரிகைகள் கூட கேட்கவில்லை. அப்படி தனியாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பதற்கு இவர்கள் பதில் கூறட்டும். பிறகு இந்த உண்ணாவிரதத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று என்னை கேட்கட்டும்.

உண்ணாவிரத்தில் சத்யராஜ் பேசியதற்கு பாராட்டு தெரிவித்தீர்களாமே?

டி.வி யில் பார்த்துக் கொண்டிருந்தேன். சத்யராஜ் பேச்சை கேட்டதும் கைதட்டினேன். உடனே போன் செய்து சில கருத்துக்களுக்காக பாராட்டினேன். அதே நேரத்தில் அவர் கூறிய சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். விமர்சனம் என்பது முறையாக இருக்க வேண்டும். சக தோழன் மேல் எச்சிலை காறி துப்பிவிடக் கூடாது. சொன்ன கருத்து நியாயமாக இருந்தாலும், அதை நாகரீகமாக சொல்லியிருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார்.'

நெய்வேலியில் போராட்டம் வேண்டாம்; சென்னையில் எப்படிப்பட்ட போராட்டம் வேண்டுமானாலும் நடத்தலாம். முதல் ஆளாய் நிற்கிறேன் என்று ரஜினி சொன்னதை பாரதி ராஜா கேட்கவில்லை. நெய்வேலிக்கு சினிமாவுலகத்தை அழைத்துக்கொண்டு போய் தானும் அவமானப்பட்டு மற்றவர்களையும் அவமானப்பட வைத்தார் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இந்த முறை தமிழ் சினிமா பாரதிராஜாவை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி அவருக்கு தோன்றியதை பேசியிருக்கிறார் என்று சொன்னால் மற்றவர்களெல்லாம் டயலாக் ஸ்கிரிப்ட் எழுதி வைத்துக்கொண்டு ரிகர்சல் பார்த்துவிட்டு பேசியிருக்கிறார்களா என்று புன்னகையோடு கேள்விக்கணை தொடுக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

4.4.08

தலைவர் பேச்சு - வீடியோ காட்சி

அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள் - ரஜினி


கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டதற்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் மக்கள் மீதான வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டிக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பே ஒகேனக்கல்லின் ஒரு பகுதி கர்நாடகாவுக்கும், மறுபகுதி தமிழகத்துக்கும் என ஒதுக்கப்பட்டது. தனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளத் தமிழகத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்... உதைக்க வேண்டாமா, இதை எதிர்ப்பவர்களை?

நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? அரசு, சுப்ரீம் கோர்ட் எல்லாம் இருக்கிறதா...? மக்கள் யார் பேச்சைக் கேட்கிறார்கள்...? யார் சொன்னால் கேட்பார்கள்...? புரியவில்லை. என்ன நடந்தாலும் கைகட்டி வேடிக்கைப் பார்க்க எதற்கு அரசாங்கம்? இந்த வட்டாள்... நாராயணகவுடாவை எல்லாம் விடுங்கள். கொஞ்சம் பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்குப் பேசுவோம்.

கர்நாடகத்தைச் சேர்ந்த நான் மிகவும் மதிக்கிற ஒரு தலைவர் அவர். ஒரு பெரிய கட்சியின் சார்பில் முதல்வராகக் கூட இருந்தவர். சில தினங்களுக்கு முன் அவர் கர்நாடக மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் பேசியிருக்கிறார். இதை அந்தக் கட்சி சும்மா வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

காரணம் அங்கே விரைவில் வரப் போகிற சட்டசபைத் தேர்தல். அரசியல் ஆதாயத்துக்காக அப்படிச் செய்கிறார்கள். மக்கள் என்ன முட்டாள்களா.. அவர்களுக்கு ஒன்றுமே தெரியாதா...? எல்லாவற்றையும் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கடவுளுக்குச் சமமானவர்கள் மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. உண்மையாகப் பேச வேண்டும். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நடந்துகொள்ள வேண்டாம்.

மக்களுக்கு ஒரு நாள் நீங்கள் பதில் சொல்லியே தீர வேண்டும். நான் கர்நாடகத்திலிருக்கும் மதிப்புக்குரிய தேவ கெளடா, குமாரசாமி, எடியூரப்பா, சித்தராமையா போன்றவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அரசியலுக்காக ஆட்டம் போடாதீர்கள்... அப்புறம் நீங்கள் இருக்க மாட்டீர்கள். அழிந்து போவீர்கள்.

இந்த பிரச்னைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். நகத்தால் கிள்ளி எறிய வேண்டிய இந்தப் பிரச்னைக்கு இப்போது தீர்வு காணாவிட்டால், பிறகு கோடாலி கொண்டும் வெட்டித் தீர்வு காண முடியாது. இந்த அரசியல் விளையாட்டில் பாதிக்கப்படுவது மிகச் சாதாரண மக்கள் தான். இதனால் உண்மையைப் பேசுங்கள், அரசியல் லாபத்துக்காக எதையும் பேசாதீர்கள்.

களமிறங்கிய மன்னன்!


ஆண்டவன் தமிழ் ரசிகர்கள் வடிவத்தில் தமிழ் மக்கள் வடிவத்தில் வந்து என் மேல் அன்பையும்,செல்வத்தையும் பொழிஞ்சு என்னை இவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்னு நான் நினைக்கிறேன். தமிழ் மக்களுக்கு சோசியல் சர்வீஸ் மாதி என்னால் முடிந்த்தை கண்டிப்பாக செய்வேன்!

- ரஜினிகாந்த்

நன்றி - வண்ணத்திரை

18.1.08

NDTV - Entertainer of the Year award

2007 ஆம் ஆண்டின் என்.டி.டி.வி என்டர்டெயினர் ஆப் த இயர் விருதை தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கிய என்.டி.டி.வி நிறுவனத்தினருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம்.

உலக இந்தியர்களின் இதயத்தில் உனக்கொரு இடமிருக்கு என்பதற்கு இன்னொரு சாட்சி இந்த விருது....

இந்தியக் கலைவுலகின் முதல்வனே...

உனக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.

மேலும் செய்திகளுக்கு

9.1.08

ரோபோ பற்றி சூப்பர் ஸ்டார்

ஷங்கருடன் படம் செய்வது பற்றி நான் பேசிக்கொண்டிருப்பதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. அது உண்மைதான். அந்தப்படத்துக்கு 'ரோபோ' என்று பெயர். ஷங்கர் இயக்கி அதில் நான் நடித்தால் நிச்சயம் அந்தப்படம் ஐம்பது வாரம் ஓடும். ஆனால் அதற்கு ஐம்பது கோடி செலவாகும். படத்தை முடிக்க இரண்டு வருஷம் ஆகிவிடும். காலமும், நேரமும் சரியாக இருந்து அந்த ஆண்டவனின் ஆசிர்வாதமும் இருந்தால் ரோபோ நிச்சயம் வரும்.

- பாய்ஸ் படத் தொடக்க விழாவில் சூப்பர் ஸ்டார், 15.4.2002

8.1.08

2008 - ரஜினியின் படங்கள் :)


ஐங்கரன் இண்டர் நேஷனல் மற்றும் எரோஷ் மல்டி மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

ரஜினி + ஷங்கர் + ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் ரோபோ!

இந்திய சினிமா உலகையே கலக்கப்போகும்வித்த்தில்,தமிழ்,தெலுங்கு & ஹிந்தியில் படம் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

இரண்டு வருட கால பட வேலைகளுடன் களமிறங்க போகிறது ரோபோ!

அதற்குள்ளாகவே குறுகிய கால திட்டத்தில் பி வாசுவின் இயக்கத்தில்,கவிதாலயாவின் தயாரிப்பில் மலையாள சூப்பர் ஹிட் "கத பறையும்போல்" ரீமேக்காக தமிழில் வெளியாகப்போவதற்கான சாத்தியகூறுகள் அதிகமிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

2008 ல் என்ன படம் வெளியாகப்போகிறது என்று எதிர்பார்த்திருந்த வேலையில் படங்களாக வந்து கலக்கப்போவது உறுதியாகிக்கொண்டிருக்கிறது!


மேலும் தகவல்களுக்கு...!
http://www.hindu.com/2008/01/08/stories/2008010858240200.htm

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14585581