15.3.06

டாப் - 4



4. பாபா

'உழைப்பாளி'யிலேருந்து 'பணக்காரன்' வரைக்கும் எல்லாமும் ஓடியிருக்கும்போது இது ஏன் தோத்துப்போனதுங்கிறதுக்கு இன்னிக்கு வரைக்கும் உருப்படியான பதில் கிடைக்காதது ஒரு ஆச்சரியம். 'அருணாச்சல'த்தோடு வந்திருக்கவேண்டிய படம் ரொம்ப லேட்டா வந்ததுதான் பிரச்சினையோ? ஆன்மீகம்னா ஏதோ பெரிய விஷயம்; அதுக்கெல்லாம் ரொம்ப கஷ்டப்படணும்னு சொல்லி ஓதுங்கிறவங்கதான் ஜாஸ்தி. இப்படியும் ஆன்மீகத்தை நடைமுறை வாழ்க்கையில கொண்டுவரலாம்னு ஒரு அருமையான விஷயத்தை சொல்ல வந்த படம். எந்தப் படத்திலும் இல்லாமல் இந்தப்படத்தில்தான் ரஜினி நிறைய விஷயங்களை ரசிகர்களுக்கு சொல்லி ரொம்பவும் மெனக்கெட்டிருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிஞ்சது!



3. தில்லு முல்லு

ஓரு ஆக்ஷன் ஹீரோவை நம்பி தம்மாத்துண்டு மீசையை வெச்சுக்கிட்டு ஆள்மாறாட்டம் காமெடியை இந்தியிலிருந்து இறக்குமதி பண்ணி வயிறு குலுங்க சிரிக்க வைத்த கே.பியின் வித்தியாசமான படம்! விசுவின் வசனமும் ரஜினியின் நடிப்பும் கே.பியை ஓரங்கட்டியதை சொல்லியே ஆகவேண்டும். சைலண்டாக எழுந்திரிச்சு கண்ணாடியின் முன்னாடி நின்னு உனக்கு இது தேவையான்னு கேட்டு தலையணையில் முட்டிக் கொண்டு ரஜினி காட்டும் டென்ஷன் படு நேச்சுரல்...இன்னிக்கும்!



2. பாட்ஷா

ரஜினி என்கிற தனிப்பட்ட நடிகரின் செல்வாக்கை உச்சிக்கு உயர்த்திய படம். ரஜினி ரசிகர்களின் ஓட்டுமொத்த ஒரே சாய்ஸ். 'ஹம்' அளவிற்கு பண்ணினாலே பெரிய விஷயம்னு நினைச்சிட்டிருந்தவனின் புருவத்தை உயர வைத்தது மட்டுமல்லாமல் எப்போது பார்த்தாலும் பூஸ்ட் குடிச்ச எபெக்டை தரும் ஒரே படம். ரசிகர்களை தாண்டி மக்களையும் எனர்ஜிடிக்கா உணர வைத்து இளைய தலைமுறை நடிகர்களுக்கு பெரிய இன்ஸ்பிரஷேனாக இன்னும் இருக்கும் படம்.



1. முள்ளும் மலரும்

புரட்சிகரமான கதையமைப்போ, இழுவையான காட்சிகளோ இல்லாத தமிழின் முழுமையான யதார்த்த சினிமாவாக இதைச் சொல்லலாம். சண்டைக் காட்சியிலிருந்து சோகக் காட்சி வரை எதையும் மிகைப்படுத்தாமல் எப்போது பார்த்தாலும் உறுத்தாத ஒளியமைப்பு நம்முடைய பேரனையும் நிச்சயம் ரசிக்க வைக்கும். மகேந்திரன், ரஜினிகாந்த், இளையராஜா, பாலுமகேந்திரா, ஷோபா என பல பெரிய கைகளின் திறமைக்கு முழு தீனி போட்ட படம். இதைப் பத்தி அதிகமாக எழுதவேண்டிய அவசியமேயில்லை. படத்தை ஓட வைத்ததற்கு எம்ஜிஆரிலிருந்து கமல் வரை எல்லோருக்கும் நன்றி சொல்லியாகவேண்டும்!

Courtesy - ராம்கி - http://rajniramki.blogspot.com/2004/06/10.html

3 comments:

Anonymous said...

மக்கள் காதில் பூ சுற்றலாம், ஆனால் பூக்கூடையே சுற்றினால்?பாபா படத்தில் அதுதான் நடந்தது. அட பாட்டாவது ஒழுங்கா இருக்கா? அது என்ன டிப்பு குமாரு? குப்பையை பணமாக்கனுமுன்னு நினைச்சா?

Anonymous said...

"Kadhula Poo-koodaya Suthuvathu" is an Art in which only Ks are experts in. For eg. "For Rs. 1 we will provide 3 Kg rice"; "Our Tea Expenses are Rs. 25 crores for which we used the collection from "Therthal Nidhi"; etc. etc.

I feel the reason why Baba did not do as expected in box-office was the regular/family crowd did not see the movie or rather, was not allowed to watch the movie due to the rowdyism displayed in many theatres in TN, when the movie got released. As is the norm in movie market, the way a movie opens at box-office determines its success or failure. So, irrespective of the logic or the lack of it in story, Baba bombed at box-office because of rowdies.

Arun

Simple_Sundar said...

It should be taken purely as Spirtual movie or should be as action movie. But it was a half boil of both. So it failed. And, because of Padayappa's super duper hit, fans got over expected and media over hyped it. Neither Rajini or the team said that this movie is a different one. Don't expect usual pot boiler and all. Rather than they alos hyped at their part. That's all.