4.4.06

Flash Back - வுடு ஜூட்!

இன்னிக்கு நக்கல் நாராயணனிடம் மாட்டியவர் பாமக தலைவர் ஜி.கே. மணி!

வாயில்லாத மக்களின் குரலை ஒலித்து வந்தது மட்டுமன்றி, அவர்களுக்காகப் பல்வேறு போராட்டங்களையும் நடத்திச் சிறை சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸக்கும், பாமகவுக்கும் வன்முறைச் சாயம்பூசி களங்கப்படுத்தும் முயற்சி முடுக்கி விடப்பட்டு வந்திருக்கிறது.

வாயில்லாத மக்களா? ஆனாலும் 'அந்த' ஜாதி ஆட்களை ரொம்பத்தான் கம்மியா சொல்லிட்டார்! மரத்தை வெட்டிப் போட்டு சாலை மறியல் பண்ணி தமிழ்நாட்டை கலக்கினபோது அரெஸ்ட் ஆனதுக்கப்புறம் வேற எந்த சந்தர்ப்பத்திலும் அய்யா ஜெயிலுக்கெல்லாம் போன மாதிரி தெரியலையே!

"பாபா' படம் தோல்வி அடைந்ததற்கும் பாமகவுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?

சமூக நீதிக்கும் டாக்டர் அய்யாவுக்கும் உள்ள சம்பந்தம்தான்! ஹி...ஹி.....பலு¡னில் ஊசி குத்துறதா நினைச்சுக்கிட்டு உங்க கண்ணுலேயே குத்திக்கிட்டீங்க! பூம்புகாரில் அரை மப்பில் அடிச்சு வுட்ட மேட்டர் இப்படி பத்தி எரியும்னு யார் கண்டா?

67 கோடி பேர் வாக்களிக்கும், உலகின் மிகப்பெரிய தேர்தலை நடத்துகிற பொறுப்பிலுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர், 5 நிமிஷம் நேரம் ஒதுக்கி அவரைச் சந்தித்திருக்கிறார் என்பதைத் தவிர புகாரில் சத்து ஏதுமில்லை.

சத்தோ, குத்தோ... வெறும் ·பார்மாலீட்ஸ¥க்கே இப்படி ·பீவரில் கிடந்த மாதிரி ஆயிட்டீங்களே!

காவிரி நீருக்காக நெய்வேலியில் போராட்டம் நடத்தினால் கர்நாடகத்தில் தமிழர்களைச் சும்மா விடுவார்களா என்று குதர்க்கம் பேசியது அகிம்சா வழியா?

ரஜினி சொன்னால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல கர்நாடக மக்களும் கேட்பாங்கன்னு ஓவர் நம்பிக்கையில விசிலடிச்சான் குஞ்சான்ஸையும் ஓவர்டேக் பண்ணிட்டீங்க சபாஷ்!

இதையெல்லாம் ஆறரை கோடி தமிழ் மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

அதிருக்கட்டும், மொதல்ல ஆறு தொகுதிகளில் இருக்குறவங்களுக்கு தெரிஞ்சாத்தான் கட்சியை காப்பாத்த முடியும்!

ராமதாஸக்கு எதிராக ஆபாசமான, அருவருப்பான சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் யார்? அதைக் கண்டு கொள்ளாமலும் கண்டிக்காமலும் இருந்தவர்கள் யார்?

பாவம் கலைஞர்... கிளைமாக்ஸ் நேரத்துல போகிற போக்கில் யார் யாரோ பன்ச் குடுக்குறாங்களேன்னு கன்னத்துல கை வெச்சிருப்பார்!

விருதுநகர் மாநாட்டுக்குச் சென்றபோது ராமதாஸக்குக் கருப்புக் கொடி காட்டக் கட்டளையிட்டவர்கள் யார்? என்பதையெல்லாம் தமிழக மக்கள் நிச்சயம் எண்ணிப் பார்ப்பார்கள்.

அட ஆமா, மதுரை மேட்டரில் விருதுநகரை எல்லோரும் வுட்டுட்டாங்களே! அங்கே கூட தொரத்தி தொரத்தி அடிச்ச பெருமை அய்யாவுக்குதானே!

ஜனநாயகத்திலும் அறவழியிலும் நம்பிக்கை வைத்துள்ள கட்சி பாமக. மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள கட்சி.

(எங்க ஜாதி) மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள கட்சின்னு சொல்லுங்கோ...கை தட்டுறோம்!

எனவே, அடிப்படையற்ற கற்பனையான சந்தேகங்களைக் கிளப்பி வீண்பழி சுமத்துவதன் மூலம் மக்களைத் திசைதிருப்பிவிட முடியாது. பாமகவின் வெற்றியைத் தடுக்கவும் முடியாது.

மணி அய்யா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்னு சில்லுண்டிகளெல்லாம் அசெம்பளி எலெக்ஷனில் ஆப்பு வெச்சிரலாம்னு முடிவு பண்ணிடப் போறாங்க... ஜாக்கிரதை!

Courtesy :- http://rajinifans.blogspot.com/2004/04/blog-post_28.html

1 comment:

Anonymous said...

எனக்கு என்னமோ இது பா.ம.க வை ஆதரிச்சு போட்ட மாதிரி தெரியுது..தி.மு.க வென்றாலும் அதிமுக வென்றாலும் பா.ம.க நிறைய தொகுதிகளை வெல்லும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஜீ.கே.மணியும் நல்லாத்தான் பேசறார்.