8.2.06

ரஜினி - எனக்கு பிடித்த விஷயங்கள்



எளிமை

நடிகனின் இலக்கணத்தைத் திரையில் மட்டுமன்றி திரைக்கு வெளியிலும் முறியடித்தவர். வழுக்கைத் தலை... வெள்ளைத் தாடி... இயல்பான் உடைகள்... அட இவரு நம்மாளு என்று சொல்ல வைத்த விஷயங்கள்

இறை நம்பிக்கை

தன்னோட வெற்றியைத் தனக்குன்னு கொண்டாடமல் இறைவனின் பாதம் சமர்ப்பிக்கும் அந்த குணம்.மதவாதியோன்னு நினைக்கத் தோன்றினாலும்... மதம் என்பதோடு மனதோடு என்று இவர் எப்போதோச் சொன்னதாக ஞாபகம்...

விடாமுயற்சி

அம்பதைஞ்சு வயசு ஆட்டம் கிளோஸ்... பாபாவின் டிராமா பணால்... முடிஞ்சுப் போச்சுன்னு முழுசா மூச்சடைக்க எழுதி ரஜினிங்கற பெயரெ இனி அச்சில் ஏறாதுன்னு சபதமேடுக்காத தமிழ் ஊடகங்கள் ஊதி முடித்த நேரம் மூன்று முகம் சந்திரமுகமாய் அரிதாரம் பூசி தன் தொழிலில் தான் இன்னும் சோர்ந்துப் போகவில்லை என நிருபித்தது...

போராட்டக் குணம்

வானம் உயர்ந்து இருக்கும் வரைத் தான் மதிப்பு...கொஞ்சம் இறங்குனாலும் அவ்வளவு தான்.. ஆள் ஆளுக்கு இழுத்து விளையாடுவாங்க.. இன்னும் கொஞ்சம் போனா காலுக்கு கீழேப் போட்டு மிதிச்சு விளையாடுவாங்க.. அப்படித்தான் 'ஓடிப் போடா உன் ஊரு'க்குன்னு சொல்லாமல் சொன்னாங்க...காவிரி பிரச்சனையிலே கழுத்தை நெறிக்கப் பார்த்தாங்க. இந்தாளு கொஞ்சமும் அசராமல் தனி மனிதனா மேடை ஏறுன அந்த தில்... அந்தப் போராட்டக்குணம் அது தான் அவரை இது வரைக் கூட்டிட்டு வந்து இருக்கோ? இருக்கலாம்!

கடின உழைப்பு

உழைப்பு இதில்லாம விசில் அடிச்சுகிட்டு இருந்த மனுஷன் அதாங்க கண்டக்டர் இத்தனை விசில்களுக்கு உரிமைக் கொண்டாட முடியுமா?

புடிக்காதவங்கப் படிச்சிட்டுத் திட்டி எழுதத் தான் போறீங்க.. அது முக்கியம் இல்லீங்க... பிடிக்காதவனும் படிக்கணும் நினைக்கிறான் பாருங்க அது ..அது தாங்க.. அந்த ஆளூ.... அடிச்சுப் பட்டயக் கிளப்புறார் டோய்.

D.P.K.Devnath - http://chennaicutchery.blogspot.com

6 comments:

Anonymous said...

nachu...."padikathavan padichutu thiti ezhuthadhan porrenga adhu mukiyam ila...pidikathavanum padikanumnu nenaikaran paru...adhu adhudhan andha aalu."....

idhayum padichutu yaravadhu thiti ezhudhina...sari adhan yen namale solanum...edho pavam avangalala thitadhan mudiyum....vidungalen.

Simple_Sundar said...

Chumma Nacchunu Irukku. Congrats.

நாமக்கல் சிபி said...

பிடிக்காம போனாலும் படிக்காம போக மனசு வராது. அதான் அவன் பெயரில் இருக்கும் காந்தம்.

"உன் கண்களுக்குள் காந்தம் இருக்கு உண்மைதானடா..!"

Raja said...

கலக்கலான பதிவு

Unknown said...

Thanks for ur apprecaitions on the post

Sathyaprakash Dhanabal said...

He Will Do

Tamil Nadu people, have conservative thinking about Rajini. But Sure, Rajini will break things and sacrifice his life for Tamil Nadu.

Yeah, He Will Do