29.12.04

ஜப்பானிலிருந்து கைகொடுக்கும் கை!

தமிழர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஜப்பானிய நண்பர்களுக்கு www.rajinifans.com தனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

********************************************************************************************

VANAKKAM!

sorry,I can't write English well.

All RAJINI FANCLUB JAPAN Members feel sad when we heard TSUNAMI went to
TamilNadu. We always get power from Rajini's movie and TamilNadu people kindness.
Because we want to repay the kindness.



Today We sent contributions money (US$436.50 / about Rs.20000) to
Rajinikanth E-Fans Association's Bank account.

A/C Name : Rajinikanth E-Fans Association
A/C Number : 226 (Current Account)
Bank : Indian Overseas Bank
Branch St. Thomas Mount Branch, Chennai, India

About 1 or 2 weeks after,this contributions money will reach to
Rajinikanth E-Fans Association's Bank account.

We want to heartening for TamilNadu.
My best regards.

from
All RAJINI FANCLUB JAPAN Members
http://www.osaka-rajni.net

anbudan, TETSUNOSUKE

*********************************************************************************************

Japan Rajini Fans Club joins with us

VANAKKAM!

sorry,I can't write English well.

All RAJINI FANCLUB JAPAN Members feel sad when we heard TSUNAMI went to
TamilNadu. We always get power from Rajini's movie and TamilNadu people kindness.
Because we want to repay the kindness.



Today We sent contributions money (US$436.50 / about Rs.20000) to
Rajinikanth E-Fans Association's Bank account.

A/C Name : Rajinikanth E-Fans Association
A/C Number : 226 (Current Account)
Bank : Indian Overseas Bank
Branch St. Thomas Mount Branch, Chennai, India

About 1 or 2 weeks after,this contributions money will reach to
Rajinikanth E-Fans Association's Bank account.

We want to heartening for TamilNadu.
My best regards.

from
All RAJINI FANCLUB JAPAN Members
http://www.osaka-rajni.net

anbudan, TETSUNOSUKE

28.12.04

An Appeal

அன்புடையீர்,

கிழக்கு கடற்கரையோர கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவிட www.rajinifans.com முன்வருகிறது. பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு, உடை ஏற்பாடு செய்யும் முயற்சியில் நமது இணையத்தளமும் சேவை அமைப்புகளுடன் கைகோர்க்கிறது. வழக்கம் போல அன்பர்கள் தங்களால் முடிந்த அளவு பொருளுதவியை செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவசரம் கருதி ICICI வங்கியின் கணக்கு எண்ணையையும் கொடுத்துள்ளோம்.

lease find the accout details.

ACCOUNT NAME : A.NATARAJAN

ACCOUNT NUMBER : 6026 0150 0485

BANK : ICICI - T.Nagar Branch.

மேற்கண்ட கணக்கில் டெபாசிட் செய்ய முடியாதவர்கள் www.rajinifans.com - Welfare Activities, வங்கி எண்ணுக்கு அனுப்பிவைக்கலாம்.

Demand Draft / Cheque / Bank Deposit / Internet Bank Fund Transfer to :


A/C Name : Rajinikanth E-Fans Association
A/C Number : 226 (Current Account)
Bank : Indian Overseas Bank
Branch St. Thomas Mount Branch, Chennai, India


Postal Addresses:

J.Rajini Ramki,
100/50, II Floor,
Jones Road, Saidapet,
Chennai-15
TamilNadu
Ph - 98400 95437

A.Natarajan,
"Doctors Garden"
1/243, Main Road,
Manapakkam
Chennai- 600116
TamilNadu
Ph- 98404 99887

23.12.04

தில்லு முல்லு - Cine Review

நடிகர்கள்: ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார்
ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன், மாஸ்டர் சந்திரசேகர்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வசனம்: விசு
இயக்கம்: கே.பாலச்சந்தர்




ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் 'கோல்மால்' இந்திப் படத்தின் தழுவல் தான்
என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூப்பர் ஸ்டார் படமென்றால் அது தில்லு முல்லு தான். தனது அநாயாசமான நகைச்சுவை நடிப்பின் மூலம் என் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்ட படம். எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத படம்.

நகைச்சுவை என்பது ஒரு கடினமான கலை என்று சொல்வார்கள். நகைச்சுவைக்
கதையோ அல்லது குறைந்த பட்சம் ஒரு ஜோக்கோ எழுதிப் ர்த்தவர்களுக்கும்,
நகைச்சுவை நாடகத்தில் நடித்துப் பார்த்தவர்களுக்கும் அந்தக் கஷ்டம் புரியும்.

அந்த வகையில் மிகத் திறமையாகக் கட்டுமானம் செய்யப்பட்ட இந்தப்
படத்திற்குத் தமிழ்த் திரையுலக வரலாற்றில் போட்டி என்ற வகையில் மிகச்
சில நகைச்சுவைப் படங்களே இருக்க முடியும்.

"என்னவும் செய்யலாம், நன்மை தான் முக்கியம்" என்ற கண்ணதாசனின் வரிகளைத்தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு, பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படம் பார்ப்பவர்கள் சிரிப்பது தான் அந்த 'நன்மை'. நகைச்சுவைக் கதைகளுக்கெல்லாம் ஆதாரமான ஆள்மாறாட்டக் குழப்பங்கள் தான் இந்தப் படத்திற்கும் கரு. ஆனாலும் சொன்ன விதத்தில் அவ்வளவு சுவாரஸ்யமும் கலக்கலும் சேர்ந்து மறக்க முடியாத ஒரு படமாக்கி விடுகின்றன.

எந்த •ப்ரேமிலும் வருகிற எந்த கதாபாத்திரமானாலும் அதை நகைச்சுவையாகப்
பயன்படுத்தியே தீருவது என்ற வைராக்கியம் படம் முழுக்கத் தெரியும். முதல் காட்சியில் பூர்ணம் விஸ்வநாதனின் மருத்துவ அறையில் வாயில் தெர்மாமீட்டர்வைத்துக் கொள்ளப் போராடும் ஒரு நோயாளி முதல், இறுதிக் காட்சியில் கமல்ஹாசனுடன் (கௌரவத் தோற்றம்) வந்து, அவர் அதிரடியாக தேங்காய்சீனிவாசன் மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் "யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ்" என்று சொல்லி மிரள வைக்கும் நாற்பது ஐம்பது போலி வக்கீல்கள் வரை.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வரும் தேங்காய் சீனிவாசனுக்கு அப்படி ஒரு
அமர்க்களமான பாத்திரம். "ஏய் ஜினுக்கு ஜிக்கா ஜிங்" போன்ற வசனங்கள்
இல்லாமல் மிகவும் குணச்சித்திரமான பாத்திரத்தில் அரசாங்கம்
நடத்தியிருப்பார். அந்த நேர்முகத் தேர்வு காட்சி பற்றி மட்டுமே
மணிக்கணக்கில் பேசலாம். சுப்பிரமணிய பாரதி என்ற பெயருடன் வருகிற
ஒருவரைக் கண்டு பெருமிதமாக நெஞ்சு விம்முவதாகட்டும், "பலக்கம் இல்லை", "கஸ்டப்படும்" என்று அவர் கூறக் கூற முகம் றுவதாகட்டும், 'எங்கே சொல்லு பார்ப்போம், ஒரு கட்டு சுள்ளியில ஒரு சுள்ளி கோண சுள்ளி' என்று சொல்லக் கேட்டு பதிலுக்கு, "வேண்டாம் சார், ரிஸ்க்கு" என்று பதில் வரவும் மூஞ்சியை ஷ்டகோணலாக்குவதாகட்டும், "ழானாவும் வராது ஷானாவும் வராது. பேரு மட்டும்சுப்பிரமணிய பாரதி!" என்று அங்கலாய்ப்பதிலாகட்டும், பதிலுக்கு, "ஷார்ட் நேம் சுப்பி சார்" என்று அவர் சொல்ல உச்சகட்ட கடுப்பில் "சுப்பியாவது குப்பியாவது, கெட் அவுட்" சொல்வதாகட்டும், அடேயப்பா..!! என்னமாய்க் கலக்கியிருக்கிறார்.

அவரைப் பற்றி அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு வரும் சூப்பர்ஸ்டார்,
'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' என்ற பெயரோடு
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு அவரை ஒவ்வொரு விஷயத்திலும்
பூரிப்படைய வைத்து 100-க்கு 987 மதிப்பெண்கள் வாங்கி ரொம்ப சுலபமாக
வேலையை வாங்கி விடுகிறார். கதாநாயகனுக்கு வயசான நோயாளி அம்மா,
அடுத்த நிமிடமே கல்யாணம் செய்தே தீர வேண்டிய தங்கை போன்ற தமிழ்த்
திரையுலகின் க்ளிஷேக்களைத் தூக்கியெறிந்து விட்டு சுதந்திரமாக உலவ
விட்ட பாத்திரப் படைப்புக்கு ஒரு சபாஷ் போட வேண்டும். "Black Peleஆ?
அப்படின்னா யாரு?" என்று கேட்டு கால்பந்தாட்டம் பற்றிய தனது
அறியாமை/பிடிப்பின்மையை வெளிப்படுத்தி வேலை வாங்கும் சூப்பர்ஸ்டார்,
கொஞ்ச நாளில் கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் நண்பர் குழாம் சூழ ஆஜராகி
இல்லாத கூத்தெல்லாம் அடிப்பது கண்டு தேங்காய் சீனிவாசன் பொங்கியெழும்
போது படம் சூடு பிடிக்கிறது.

அவரிடமிருந்து தப்பிக்க, வேலையைத் தக்கவைத்துக் கொள்ள, அரங்கேறுகிறார்
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் - சந்திரனின்
சகோதரனாக - மீசை இல்லாமல். இந்திரனே ஒரு தில்லுமுல்லு எனும்போது,
மகளுக்குப் பாடல் கற்றுத் தரும் வேலை கொடுக்கப்பட்டு தேங்காய்
சீனிவாசனால் வீட்டுக்கு வரும் 'இந்திரன்' மாதவியைக் காதலிப்பது
இன்னொரு தில்லுமுல்லு. ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்து விடும் வீட்டு வேலை செய்யும் சிறுவன் (சூப்பர் ஸ்டார் மாதிரியே தலைமுடியும் ஸ்டைலுமாய் - என்ன ஒரு கே.பி. டச்!!) அதை வெளியே சொல்லிவிடப் போவதாய் மிரட்டிப்

பணம் பறிப்பது இன்னொரு தில்லுமுல்லு. நடிப்பிலே ஆர்வம் கொண்ட 'மிஸஸ்.
மீனாட்சி துரைசாமி' சௌகார் ஜானகியை தனது தாயாக நடிக்க வைத்து
முதலாளியை ஏமாற்றுவது இன்னொரு தில்லுமுல்லு. உச்சகட்டமாய் தேங்காய்
சீனிவாசன் வழிபடும் முருகர் படம் கூட மாறுவேடத்தில் இருக்கும் விநாயகர் என்று ஒரே தில்லுமுல்லு மயம். அத்தனையும் அவ்வளவு ரசிக்கும்படியாக.

மகாத்மா காந்திக்கே சமைத்துப் போட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் என்று
சௌகார் ஜானகியை தேங்காய் சீனிவாசன் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும்,
அவரோ ஒவ்வொன்றாய் உளறி மாட்டிக் கொண்டு சமாளிப்பதுமாக சுவாரஸ்யமான
அதிர்வேட்டுக்கள். பார்ட்டி ஒன்றில் மிஸஸ் மீனாட்சி துரைசாமியை நேரில்
சந்திக்க நேர்ந்து தேங்காய் சீனிவாசன் அதிர்ந்து போவதும், சௌகார்
ஜானகி மிகுந்த முன்யோசனையுடன் அதிரடி மேல் அதிரடியாகக் கலக்கி விட்டு
அவசரமாக வெளியேறி, வீட்டுக்கு வந்து பின் சுவற்றின் வழியாக குழாயின்
மீதேறி வீட்டுக்குள் நுழைந்து அமைதியின் சொரூபமாய் காத்திருந்து,
கோபத்துடன் உணமையை ஆராய வரும் தேங்காய் சீனிவாசனை பாந்தமாய்
வரவேற்று அவரை அசரடிக்கும் காட்சிக்கு நிகர் ஏது?! "ஏய் தோட்டக்காரா,
உன் மொதலாளி இருக்கானா?" என்று இந்திரன் வேஷத்தில் இருக்கும்
தெனாவெட்டில் சூப்பர்ஸ்டார், தேங்காய் சீனிவாசனைக் கலாய்ப்பதும், ஒரு தம் பத்த வைப்பதும், பதிலுக்கு அவர் கடுப்பாவதும், "உன் அண்ணனுக்காக உன்னை சும்மா விடுறேன்" என்று அறிவிப்பதும், அசட்டையாக அதை 'இந்திரன்'
கண்டுகொள்ளாமல் மேலும் கலாய்ப்பதும் என்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கும் காட்சிகள் என்றைக்கும் நெஞ்சை அள்ளும். சூப்பர்ஸ்டாருக்கும்

மாதவிக்கும் இடையிலான காதல் காட்சிகளிலும் பெரிதாகக் குறை கண்டுவிட
முடியாது. ஆசையாக வளர்த்த மீசையை மழித்துக்கொள்ள உட்காரும்போது
சூப்பர்ஸ்டாரின் முகத்தில் வந்து குடியேறும் சோகமான ரியாக்ஷன்கள் அத்தனையும் பவுன் தங்கம்.

எம்.எஸ்.வி.யின் இசையும் அதற்கு கண்ணதாசனின் வரிகளும் பாடல்களை
அழகாக்கியிருக்கும். "ராகங்கள் பதினாறும் உருவான வரலாறு" மிகச் சுகமான ஒரு அனுபவம்.

இதைப் போலவே சூப்பர்ஸ்டார் இன்னும் நிறைய படம் நடித்திருக்கலாமே என்ற
ஏக்கம் மனதுக்குள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் அதற்கு சமாதானமும் தோன்றுகிறது. ஒரு சந்திரன், ஒரு சூரியன், ஒரு சூப்பர்ஸடார் என்பது போல் ஒரு தில்லுமுல்லு!! அது என்றைக்கும் அவரது திறமைக்கு சாட்சியம் கூறும்.

- Meenaks (m_meenaks@yahoo.com)

20.12.04

பெங்களூரில் பிறந்தநாள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக www.rajinifans.com இணையத்தளமும் பெங்களூர் பாபா ரஜினிகாந்த் நற்பணி மன்றமும் இணைந்து நடத்தும் அன்னதான நிகழ்ச்சி ஆதரவற்றோர் மற்றும் பார்வையற்றோர்களுக்கான ஸ்ரீரமண மகரிஷி அகாடமி, பெங்களூரில் வரும் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெறும். நிகழ்ச்சிக்கு பெங்களூர் வட்டார நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

Date: 24th December 2004, Friday

Time : 8.00 A.M

Venue : Shree Ramana Maharishi Academy for The Blind
3rd Cross, 3rd Phase, JP Nagar, Bangalore-560 078

17.12.04

‘பாபா’ ஆராய்ச்சி

‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாகதான் வருவேன்’ என்று ரஜினி தன்னைப்பற்றி கூறினாலும், அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் லேட்டஸ்டாகதான் இருக்கின்றன.

லயோலா கல்லூரியின் ‘விஷ¨வல் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட்’டின் ‘Factors influencing Film viewing' என்ற ஆராய்ச்சியும் அப்படிதான். ரஜினியின் ‘பாபா’ படத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆராய்ச்சியை செய்து முடித்திருக்கிறார்கள். பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் நாற்பது விஷ¨வல் கம்யூனிகேஷன் மாணவர்கள் அடங்கிய குழு பாபா படம் பற்றிய விஷயங்கள், ரஜினியின் அரசியல் பிரவேசம், ஆன்மிக வாழ்க்கை என எல்லாவற்றையும் சர்வே செய்திருக்கிறார்கள். இதற்கென சென்னையில் எல்லா பகுதிகளையும் கவர் செய்யும்விதமாக பாபா திரையிடப்பட்டிருக்கும் ஐந்து திரையரங்குகளில் இந்த சர்வேயை செய்திருக்கிறார்கள். பாபா படம் பார்த்த இரண்டாயிரத்து ஐநூறு பேர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி பற்றிய கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார்கள்.

‘‘விஷ¨வல் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் என்பதால் நாங்க பல ரிசர்ச் பண்றோம். அந்த வகையிலதான்ஆராய்ச்சியை பண்ணியிருக்கிறோம். இந்த நேரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பாபா படத்தை ஆராய்ச்சி செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம்’’ என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரும், ஆராய்ச்சி குழு தலைவருமான ராஜநாயகம்.

கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என்பதால் கருத்தரங்கில் ரஜினி ஸ்டைலில் இளமைத்துள்ளல் அதிகமாகவே இருந்தது. சாம்பிளுக்கு, ‘அசந்தால் பேசுறது இவங்க பாலிஸி. அசராமல் பேசுறது என் பாலிஸி’ என்று ஒரு இளைஞர். பெண்களைப் பார்த்து சொல்ல செம அப்ளாஸ். இளைய தலைமுறை கலகலப்பாக இருந்தாலும் ரஜினி பற்றிய ஆய்வு என்பதால் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஓ.கே. பாபா படம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் என்னதான் சொல்கின்றன? பாபா படம் பார்க்கும்போது ஆடியன்ஸின் செய்கைகளை கூர்ந்து கவனித்தபோது பல புதிய விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. ரஜினி என்ற சூப்பர்ஸ்டார் செய்யும் எந்த விஷயங்களும் நம்பமுடியாதவைகளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மக்களிடம் சின்னச்சின்ன மாற்றங்கள். ஒரு பாட்டில் சாராயத்தை ஒரே மூச்சில் ரஜினி குடிப்பதைப் பற்றி மந்திரி மகனுடன் மோதும் வாலிபால் சண்டைக்காட்சியில் உள்ள அதிகப்படியான கிராஃபிக்ஸ் என சில காட்சிகளை சூப்பர் ஸ்டாரே செய்தாலும் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாமல் தங்களது கருத்துகளை ஆடியன்ஸ் முணுமுணுத்திருக்கிறார்கள். ரஜினி விஷயத்தில் ஏற்பட்டிராத புதுமாற்றம் இது.

இது ஒரு பக்கமிருந்தாலும் ரஜினியின் மவுசு இன்னும் குறையவில்லை. உதாரணமாக பாபா படத்தில் ரஜினி நடிக்கமாலிருந்தால் இந்த படத்தை நீங்கள் பார்க்க வந்திருப்பீர்களா என்று ஆடியன்ஸிடம் கேட்டபோது அறுபத்தைந்து சதவீதம் பேர் ‘இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். வெறும் பன்னிரெண்டு சதவீதத்தினர் மட்டுமே ரஜினி நடிக்காவிட்டாலும் பாபா படம் பார்த்திருப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

‘பாபா’ படம் பற்றிய ஆராய்ச்சிதான் என்றாலும், ரஜினி என்பதால் அவருடைய பல பரிமாணங்களைப் பற்றி கேள்விகளும், அதுசம்பந்தமாக ரசிகர்கள், பொதுமக்களின் எண்ணங்களும், கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘பாபா நன்றாக ஓடினால் இதுதான் கடைசிப் படம்’ என்று ரஜினி சொன்னதால், அவருடைய சினிமா வாழ்க்கை பற்றி ரசிகர்கள் தங்களது கருத்துகளை இந்த ஆராய்ச்சியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். ரஜினி தொடர்ந்து நடிக்க வேண்டுமென்பதே எண்பத்தொரு சதவீத பேரின் கருத்து. ஆசை, இந்த மெஜாரிட்டியில் எழுபத்திநான்கு சதவீதம் ரஜினி நடிகராக தொடரவேண்டும் என்கிறார்கள். மீதமுள்ள ஏழு சதவீதம் நடிகராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஸ்டோரி டைரக்டராக சினிமா வாழ்க்கையை தொடரவேண்டுமென விரும்புகிறார்கள்.

ரஜினி தொடர்ந்து சினிமாவில் நடித்தாலும், அவரை ரசிகர்கள் பழைய ரஜினியை அதாவது பாடஷா போலவோ அல்லது படையப்பா போன்றோ திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. முக்கியமாக இது ரஜினியின் கவனத்திற்கு ரஜினியை ‘பாட்ஷா’ போன்ற ரோலில் நடிக்க வற்புறுத்தும் ரசிகர்கள் மட்டும் அறுபத்தொரு சதவீதத்தினர் இருக்கிறார்கள். படையப்பா போன்ற ரோலை விரும்பினாலும் அவர்கள் பதினைந்து சதவீதம் மட்டும்தான்.

இப்படி தங்களது சூப்பர்ஸ்டாரை ‘பாட்ஷா’ போல பார்க் விரும்பும் கூட்டம் அதிகமாக இருந்தாலும், ரஜினி டி.வி.க்கு வருவதை ஆதரிக்கும் கூட்டமும் இருக்கிறது. இருபத்தாறு சதவீதத்தினர் ரஜினி டிவிக்கு வந்தால் ரஜினி என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழலால் _ அதற்கும் பதினாறு சதவீதத்தினர் ஒரு ஐடியாவை தங்களது கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது அமிதாப்பச்சனைபோல ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்கலாம் என்பதுதான் அவர்களின் ஐடியா.

அடிக்கடி இமயமலைக்கு போகும் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் இன்னும் தொடர்ந்தாலும், ரஜினியின் பிரவேசத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேநேரம் ரஜினியின் ஆன்மிகவாதி இமேஜிக்கு அதிக வரவேற்பில்லை. வெறும் இரண்டு சதவீதத்தினர் மட்டுமே ரஜினி நடிப்பதை விட்டு ஆன்மிகப் பாதையில் செல்வதை விரும்புவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்புகிறவர்களில் நாற்பத்தொரு சதவீதத்தினர் அவர் தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்குள் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பத்தொன்பது சதவீதத்தினர் தொடர்ந்து நடித்தபடியே ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தரலாம் என்றும் பன்னிரெண்டு சதவீதத்தினர் ஏதாவது கட்சியிலும் சேரலாம் என்கிறார்கள். மொத்தத்தில் ரஜினி தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதை ஐம்பத்தைந்து சதவீத ரசிகர்கள் ஆதரிக்கின்றனர். இதையே பொதுமக்களில் முப்பத்தொன்பது சதவீத பேர் ஆதரிக்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விஷயத்தில் மிகவும் சுவாரஸ்யமானது. பாபா படம் மூலம் அவருக்கு ஆதரவு அதிகரித்ததுதான். பாபா படம் பார்த்தபின்பு மேலும் ஆறு சதவீத பேர் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்து இருக்கிறார்கள். இப்படி பல விஷயங்களில் பாபா படம் முக்கியமான ரோல் எடுத்து கொண்டாலும், படம் பார்த்த ரஜினி ரசிகர்களில் நாற்பத்தேழு சதவீத ரசிகர்களை மட்டுமே திருப்தியடைய செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பாபா’ ரஜினி பற்றிய எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடன் வெளியாயிருக்கு ஆவரேஜ் படம். அதுவும் ரஜினி ‘காந்தம்’ ஈர்ப்பதால் மட்டுமே.

ரஜினி இதுவரை நூற்றைம்பது படங்களில் நடித்திருந்தாலும், ஒன்பது படங்கள் மட்டும் அதிகமுறை விரும்பிப் பார்த்த படங்களாக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதலிடம் பாட்ஷாவுக்கும் இப்படம் மிகவும் அதிகமுறை, மிக விருப்பமுடன் பார்க்கப்பட்ட படமாக தெரியவந்திருக்கிறது. இது தவிர தளபதி, தனிக்காட்டு ராஜா, ராஜாதிராஜா, நல்லவனுக்கு நல்லவன், ஆறிலிருந்து அறுபதுவரை, படிக்காதவன், அண்ணாமலை, முள்ளும்மலரும் போன்ற படங்கள்தான் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ரிபிட் ஆடியன்ஸ் வரகாரணம்

ரஜினிக்காக _ 49%
நண்பர்களுக்காக _ 26%
படத்திற்காக _ 20%

பாபா படம் பற்றிய கருத்து

திருப்தி _ 33%
டைம்பாஸ் _ 41%
(மெஜாரிட்டி)
திருப்தி இல்லை _ 26%

பாபா படம் எந்த வகை

ஆன்மிக, மேஜிக்கல் படம் _ 55%
அரசியல் படம் _ 27%
மீதியுள்ளவர்கள் குழந்தைகளுக்கான படம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

பாபா இமேஜ் ரஜினிக்கு ஓ.கே.

ரஜினி ரசிகர்கள் _ 47%
பொதுமக்கள் _ 32%

Courtesy : Kumudam Cinema

13.12.04

பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு www.rajinifans.com - ரஜினி ரசிகர்களுக்கான இணையத்தளம் சார்பில் இலவச ரத்ததான முகாம் சென்னையில் நடைபெற்றது. முகாமில் சென்னையை சேர்ந்த 46 ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தளபதி சத்தியநாராயணா ரத்ததான முகாமை பார்வையிட்டு விழாவை நிறைவு செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை www.rajinifans.com இணையத்தள நிர்வாகிகளும் ஸ்ரீராமசந்தந்திரா மெடிக்கல் மிஷன் ரத்ததான கிளை அங்கத்தினர்களும் இணைந்து செய்திருந்தனர்.



சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்த நாளை ஜப்பானிய ரசிகர்களும் நேற்று கொண்டாடினர். ஓசாகா நகரத்தில் குழுமிய ஜப்பானிய ரசிகர்கள் ரஜினிகாந்த் நலம் பெற சர்வமதப் பிரார்த்தனையும் அதைத் தொடர்ந்து கேளிக்கை விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானிலும் ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.




9.12.04

இரத்ததான முகாம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 55வது பிறந்த நாளை முன்னிட்டு www.rajinifans.com சார்பில் ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் மிஷனின் ஒத்துழைப்புடன் இலவச ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. விபரங்கள் பின்வருமாறு

Venue: Shakespeare Matriculation School,
# 52A, South Sivan Koil Street,
Vadapalani Chennai-600 026

Date: 12th Dec 2004

Timing: 10AM to 1PM


ஆர்வமுள்ள உறுப்பினர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் info@rajinifans.com, தொலைபேசி எண்கள்: ராம்கி (98400 95437) நடராஜ் (98404 99887)

6.12.04

சி.எம். ரஜினி!

சூப்பர் ஸ்டார் "சந்திரமுகி' வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், நடிகர் சங்கம் நடத்திய விழா, அவரது மகள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து அவரது ரசிகர்கள் இன்ட்டர்நெட்டில் சுவையாக விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

"ரஜினி ஃபேன்ஸ் கிளப்'(www.rajinifans.com) என்ற பெயரில் உள்ள வெப்ûஸட்டில் ஜெயலலிதாவை ரஜினி பாராட்டியது குறித்து சுவையான விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு ரசிகர் மட்டும், ""ஜெயலலிதாவை "தைரியலட்சுமி' என்று தலைவர் எப்படிச் சொல்லலாம்?'' என நீண்ட கேள்வி எழுப்ப, அடுத்தடுத்து ரசிகர்கள் அவருக்குக் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் ஜெயலலிதாவைப் பாராட்டி பதில் கொடுத்து வருகின்றனர்.

இந்த வெப்ûஸட்டில் முன்பெல்லாம் ரஜினியை எஸ்.எஸ். (சூப்பர் ஸ்டார்) என்று சுருக்கமாக அழைத்து வந்த ரசிகர்கள், இப்போது அவரை சி.எம். (சந்திரமுகி) என்று அழைப்பது சுவாரஸ்யமான தகவல்

Courtesy : Tamilan Express

C.M Rajini!

சி.எம். ரஜினி!

சூப்பர் ஸ்டார் "சந்திரமுகி' வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், நடிகர் சங்கம் நடத்திய விழா, அவரது மகள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து அவரது ரசிகர்கள் இன்ட்டர்நெட்டில் சுவையாக விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

"ரஜினி ஃபேன்ஸ் கிளப்'(www.rajinifans.com) என்ற பெயரில் உள்ள வெப்ûஸட்டில் ஜெயலலிதாவை ரஜினி பாராட்டியது குறித்து சுவையான விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு ரசிகர் மட்டும், ""ஜெயலலிதாவை "தைரியலட்சுமி' என்று தலைவர் எப்படிச் சொல்லலாம்?'' என நீண்ட கேள்வி எழுப்ப, அடுத்தடுத்து ரசிகர்கள் அவருக்குக் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் ஜெயலலிதாவைப் பாராட்டி பதில் கொடுத்து வருகின்றனர்.

இந்த வெப்ûஸட்டில் முன்பெல்லாம் ரஜினியை எஸ்.எஸ். (சூப்பர் ஸ்டார்) என்று சுருக்கமாக அழைத்து வந்த ரசிகர்கள், இப்போது அவரை சி.எம். (சந்திரமுகி) என்று அழைப்பது சுவாரஸ்யமான தகவல்

Courtesy : Tamilan Express

3.12.04

மறதி?!

தமிழ் சினிமா பல தருணங்களில் செலக்டிவ் அம்னீஷியாவை நம்பியிருக்கிறது. படங்கலைப் பார்க்கும்போதே ரசிகர்களுக்கு ஓரளவு செலக்டி அம்னீஷியா இல்லையென்றால் பல படங்களைப் பார்த்து முடிக்க முடியாது.

எனவே சினிமக்காரர்கள் நடத்தும் விழாக்களிலும் செலக்டிவ் அம்னீஷியா இருக்கத்தானே செய்யும். ஜெயலலிதாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் சோ-சிதம்பரம் ஆகியோரின் அரசியல் நம்பிக்கை நட்சத்திரமான ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கும் அடிப்படை இதே மறதி தத்துவம்தான். ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த காலத்தில் தான் பேசியது, சவால் விட்டது, மக்களை எச்சரித்தது எல்லாம் நமக்கு மறந்துபோய்விட்டிருக்கும் என்று நினைக்காமல் இப்போது அவர் ஜெயலலிதாவை அஷ்டலட்சுமியின் அருள் பெற்ற முதல்வராக வர்ணித்துப் பேசியிருக்க முடியுமா ? இந்த செலக்டிவ் அம்னீஷியாவின் விசித்திரம்தான் என்னே. போன வருடம், அதற்கு முன் வருடம், ஐந்தாண்டுகள் முன்பு நடந்தது எல்லாம் சுத்தமாக மறந்து போய் விடுகிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னால் ரஜினி பிலிம் சேம்பரில் இன்ஸ்டிட்யூட் மாணவனாக ஜெயலலிதாவை 'சைட்' அடித்தபோது, அவர் அணிந்திருந்த கறுப்பு பார்டர் வைத்த புளூ புடவை, புளூ ரவிக்கை என்று துல்லியமாக எல்லாம் நினைவுக்கு வந்து விடுகிறது.

ரஜினி மட்டும் அல்ல. மற்ற சினிமாக்காரர்களுக்கும் இதே மறதி வியாதிதான். மன்னிக்கவும் அது வியாதி அல்ல வசதி அல்லவா!


- ஞாநி


ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனபிறகு திரைப்பட வர்த்தக சபையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித்தலைவியாக ரஜினி விளித்தது அரசியல்வாதியின் பேச்சு போல இருந்தது என்று சொன்ன (மறுபடியும், தினமணி கதிர், 28.4.1996) ஞாநிக்கு, வீரப்பன் விவாகாரத்தை திறமையாக கையாண்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவை தைரிய லட்சுமியாக ரஜினி புகழ்ந்ததும் அரசியல் பேச்சாகத்தான் தெரியும்.

1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எழுந்த ஜெயலலிதா எதிர்ப்பு அலையை தனது அரசியல் செல்வாக்கிற்காக பயன்படுத்திக்கொண்டதை போல இப்போதிருக்கும் ஜெயலலிதா ஆதரவு (?) அலையை தனது அரசியல் செல்வாக்கிற்காக ரஜினி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்று எழுதிவிடாமல் ஞாநி மறந்து போனதுதான் ஆச்சர்யம்!

- ஜெ. ரஜினி ராம்கி