30.9.04

மணிச்சித்திரதாழ்" தான் "சந்திரமுகியா"?

தினத்தந்தியில் தலைப்புச்செய்தி என்றவுடன் பேப்பரை வாங்கி விட்டேன்.தினத்தந்தியின் இலவச இணைப்பான குடும்ப மலரில் இப்படம் மலையாள சூப்பர்ஹிட் படமான "மணிச்சித்திரதாழ்"ன் தழுவல் என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இதை நான் நேற்றுவரை படிக்கவில்லை. என்னுடைய அலுவலக நண்பர் குடும்ப மலரை படித்து விட்டு , படித்த செய்தியை அரைகுறையாக நினைவில் வைத்து ரஜினி டிரகுலா படத்தில் நடிக்கிறார் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். பாபாவில் "கடவுள்", சந்திரமுகியில் " டிரகுலா" வா? என நான் அதிர்ந்து போனேன். பின்பு வீட்டிற்கு சென்று குடும்ப மலர் பார்த்த பின்புதான் தெரிந்தது ம்ணிச்சித்திரதாழ்" தான் என் நண்பர் குறிப்பிட்ட படம் என்று. இன்றைய தினமணியும் இச்செய்தியை வெளியிட்டு உள்ளார்கள்.

"மணிச்சித்திரதாழ்" பாசில் இயக்கத்தில் மோகன்லால், சோபனா, சுரேக்ஷ்கோபி நடித்து வெளியான மலையாளப்படம். மோகன்லாலிற்கும், சோபனாவிற்கும் (??) இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. மர்மதேசம் சீரியல் மூலமாக தமிழகத்தில் பிரபலமடைந்த "split personality" பிரச்சனையை அடிபடையாக கொண்ட கதை. மிகவும் விறுவிறுப்பாகவும், சஸ்பென்சுடனும் காட்சிகள் நகரும். அமானுடக் கதைகளையும் மெல்லிய மானுட உணர்வுகள் இழையோட சொல்லும் வல்லமை பாசிலுக்கே உரியது. தமிழில் பாசில் எடுத்த "கிளிப் பேச்சு கேட்க வா" படத்திலும் பாசிலின் இவ்வல்லமையை காணலாம். படத்தில் தமிழ் பாடல்களும் , பாசுரங்களும் உண்டு. "ஒரு முறை தழுவ மாட்டாயா" என்ற பாடலுக்கு ஷோபனா நடனமாடும் பிண்ணனியில் அமைக்கப் பட்ட கிளைமாக்ஸ். அனைவரும் நிஜமாகவே சீட்டின் நுனிக்கோ, வீட்டிலிருந்து பார்த்தால் சோபாவின் நுனிக்கோ வந்து விடுவோம்.

மோகன்லால் இடைவேளைக்கு முந்திய காட்சியில்தான் அறிமுகமாவார்.மனோத்தத்துவ நிபுணராக கலக்கும் மோகன்லால் , பேய்க்கு பயப்படும் சீனிவாசனுடன் செய்யும் காமெடி- கலக்கல். இன்றும் ஏசியாநெட்டில் போட்டால் தவறாது இப்படத்தை பார்த்து விடுவேன். இப்படத்தை மாற்றி சந்திரமுகி என எடுக்கிறார்கள் என்றால் எனக்கு பயமாகத்தானிருக்கிறது.இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடி கிடையாது. டூயட்கிடையாது.இடைவேளையின் போதுதான் அறிமுகமாவார். சண்டைக்காட்சிகள் கிடையாது . மோகன்லாலின் பாத்திரத்தை ரஜினி செய்யும் பட்சத்தில், எவ்விதமான மாற்றங்களை திரைக்கதையில் செய்யப் போகிறார்கள்.

இப்படத்தை தமிழில் எடுப்பதைக் குறித்தும், அதில் ரஜினி நடிப்பதைக் குறித்தும் இரு கேள்விகள் என்னுள் எழுகின்றன.

ஒன்று, கேரளப் பிண்ண்னியில் அமைந்ததால், அமானுட ரீதியான கதைகளில் ஒன்ற முடிந்தது. இதை தமிழகப் பிண்ணனியில் அமைக்கும் போது எந்த அளவு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? தமிழகத்தில் அமானுடப் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.

இரண்டு ரஜினிக்காக மோகன்லால் பாத்திரத்தில் மாறுதல் செய்யப்பட்டு, டூயட், சண்டை என்று சேர்க்கப்பட்டால் கதைக் கலன் சிதைந்து விடும். இதை எவ்வாறு தவிர்ப்பார்கள்?"தேன்மாவு கொம்பத்து" என்ற படத்தை சிதைத்துத்தான் "முத்து" எடுத்தார்கள். ஆனால் முத்துவை ரஜினி பட இலக்கணத்திற்கேற்ப மாற்ற முடிந்தது.

இப்படிப்பட்ட கதைக்கு ரஜினி ஒப்புக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. வித்தியாசமான ரோல் செய்ய அவர் ஆசைப்படுகிறாரா? அல்லது 'அன்புள்ள ரஜினிகாந்தில் வந்ததைப் போல, கதாநாயகத் தன்மையற்ற ரோலை செய்ய விரும்புகிறாரா?

இது எப்படிப்பட்ட படம் என்பதை ரஜினி முதலிலேயே தெளிவுபடுத்தி விடுவது நல்லது. அதற்குள்ளாகவே யாஹ¤ குழுமத்தில் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ரஜினி ரசிகனும், ரஜினிக்கென்று மானசீக கதை வைத்திருப்பதாக எனக்கு படுகிறது. ரஜினி கால்க்ஷ£ட் கொடுத்தால் இயக்குநராகவே மாறி விடுவார்கள்.

படம் இப்படித்தான் இருக்கும் எனத் தெளிவாகச் சொல்லி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை கட்டுப்படுத்துவது நல்லது. பாபாவையே சாமி படம் என்று சொல்லியிருந்தால் கட் அவுட்டிற்கு பாலூற்றி படம் பார்த்து வந்திருப்போம் என்றார் சக ரசிகர் ஒருவர். சமூகப் படமாகவும் இல்லாமல், சாமிப்படமாகவும் இல்லாமல் கலவையாக இருந்ததால் கலங்கிப் போனார்கள் ரசிகர்கள்.( 300 ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட்டை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).

மணிச்சித்திரதாழ் தான் சந்திரமுகியாக மாறுமா? என்பதில் இன்னும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. வாசு ரஜினிக்காக வேறு ஏதாவது கதை பண்ணுவார் என நம்புகிறேன்.

அப்படி இல்லாத பட்சத்தில், விபரீதமான முயற்சி என்றே ரஜினி ரசிகனான எனக்கு படுகிறது."ஆயிரம் ஜென்மங்கள்" போல ஒரு படத்தை தற்பொழுது ரஜினி வெளியிட்டால் எடுபடுமா?

விடை ரசிகர்கள் கையில்

Rajkumar
Courtesy : http://poetraj.blogspot.com/

1 comment:

Unknown said...

மணிச்சித்ர தாழ் படத்தில் ஷோபனாவுக்கு தான் தேசிய விருது கிடைத்தது. மோகன்லாலுக்கு கிடைக்கவில்லை. பேய்பயத்தோடு அலைபவர் சீனிவாசன் இல்லை, குதிரவட்டம் பப்பு. இன்னொரு பயந்தாங்கொள்ளியாக வருபவர் இன்னெஸண்ட்