26.2.06

வெள்ளிவிழா வாழ்த்துக்கள்!



26.2.1981 - 26.2.2006

வெள்ளிவிழா காணும் எங்கள் தங்கங்களுக்கு இன்று திருமண நாள்.

வெற்றிப்பயணம் என்றும் தொடர எங்கள் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

21.2.06

சந்திரமுகி - 315




வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு

வெட்டும் புலி என்று

பகைவரை வெட்டி தலைக்கொண்டு

தலையெடு படையப்பா!


மிக்க துணிவுண்டு

இளைஞர்கள் பக்க துணையுண்டு

உடன் வர மக்கள் படை உண்டு

முடிவெடு படையப்பா!

20.2.06

இன்னொரு ஜோடி இப்போதைக்கு இல்லை

சில வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம்.

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் ஏதாவது இரு நடிகர்கள் நன்குப் பேசப் படுவார்கள்.

பி. யூ. சின்னப்பா மற்றும் தியாகராஜ பாகவதர்.

முன்னவர் பின்னவரை விட அதிகத் திறமை வாய்ந்த நடிகர். இருந்தாலும் பின்னவருக்கு அதிக முகராசி (charisma?).

அடுத்த இருவர் சிவாஜி கணேசன் மற்றும் எம்ஜியார். அதே மேலே கூறப்பட்ட முன்னவர் பின்னவர் குணதிசயங்கள்.

இப்போது கமல் மற்றும் ரஜினி.

ஒரு சிறு மாற்றம். ரஜினிக்கும் நடிப்புத் திறமை உண்டு- கமல் அளவுக்கு இல்லாவிட்டாலும்.

சிவாஜியின் விஷயத்தில் எம்ஜியார் மாதிரித் தன்னை நல்லவனாகக் காண்பித்துக் கொள்ளச் செய்த முயற்சிகள் அனேகமாகச் சொதப்பலாயின. உதாரணம்: உத்தமன். ஆ கலே லக் ஜாவில் சஷி கபூர் மாதிரி லைட்டாக வர இயலவில்லை. ரொம்ப பொறுமையைச் சோதித்தார். சிவாஜி தன் இயல்பிலிருந்துக் கொண்டு நடித்தப் படங்கள் இன்றும் பேசப்படுகின்றன.

அதே மாதிரி கமலும் ரஜினியைப் போல் ஸ்டைல் காண்பிக்க முயன்றால் தன் அடையாளத்தை இழப்பது நிச்சயம். அவ்வாறு செய்ய அவர் முயற்சிப்பதில்லை என்பது மனத்துக்கு ஆறுதலைத் தருகிறது.

இந்த இரட்டையர் ஜோடி எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்டு இருப்பதில்லை. 1977-ல் எம்ஜியார் நடிப்பிலிருந்து ஓய்வுப் பெற்றப் பின்புதான் கமல் ரஜினி ஜோடி வந்தது. இருவருமே இன்னும் களத்தில் இருப்பதால் இன்னொரு ஜோடி இப்போதைக்கு இல்லை என்றே தோன்றுகிறது.

அன்புடன்,

டோண்டு
http://dondu.blogspot.com/2004_12_12_dondu_archive.html

8.2.06

ரஜினி - எனக்கு பிடித்த விஷயங்கள்



எளிமை

நடிகனின் இலக்கணத்தைத் திரையில் மட்டுமன்றி திரைக்கு வெளியிலும் முறியடித்தவர். வழுக்கைத் தலை... வெள்ளைத் தாடி... இயல்பான் உடைகள்... அட இவரு நம்மாளு என்று சொல்ல வைத்த விஷயங்கள்

இறை நம்பிக்கை

தன்னோட வெற்றியைத் தனக்குன்னு கொண்டாடமல் இறைவனின் பாதம் சமர்ப்பிக்கும் அந்த குணம்.மதவாதியோன்னு நினைக்கத் தோன்றினாலும்... மதம் என்பதோடு மனதோடு என்று இவர் எப்போதோச் சொன்னதாக ஞாபகம்...

விடாமுயற்சி

அம்பதைஞ்சு வயசு ஆட்டம் கிளோஸ்... பாபாவின் டிராமா பணால்... முடிஞ்சுப் போச்சுன்னு முழுசா மூச்சடைக்க எழுதி ரஜினிங்கற பெயரெ இனி அச்சில் ஏறாதுன்னு சபதமேடுக்காத தமிழ் ஊடகங்கள் ஊதி முடித்த நேரம் மூன்று முகம் சந்திரமுகமாய் அரிதாரம் பூசி தன் தொழிலில் தான் இன்னும் சோர்ந்துப் போகவில்லை என நிருபித்தது...

போராட்டக் குணம்

வானம் உயர்ந்து இருக்கும் வரைத் தான் மதிப்பு...கொஞ்சம் இறங்குனாலும் அவ்வளவு தான்.. ஆள் ஆளுக்கு இழுத்து விளையாடுவாங்க.. இன்னும் கொஞ்சம் போனா காலுக்கு கீழேப் போட்டு மிதிச்சு விளையாடுவாங்க.. அப்படித்தான் 'ஓடிப் போடா உன் ஊரு'க்குன்னு சொல்லாமல் சொன்னாங்க...காவிரி பிரச்சனையிலே கழுத்தை நெறிக்கப் பார்த்தாங்க. இந்தாளு கொஞ்சமும் அசராமல் தனி மனிதனா மேடை ஏறுன அந்த தில்... அந்தப் போராட்டக்குணம் அது தான் அவரை இது வரைக் கூட்டிட்டு வந்து இருக்கோ? இருக்கலாம்!

கடின உழைப்பு

உழைப்பு இதில்லாம விசில் அடிச்சுகிட்டு இருந்த மனுஷன் அதாங்க கண்டக்டர் இத்தனை விசில்களுக்கு உரிமைக் கொண்டாட முடியுமா?

புடிக்காதவங்கப் படிச்சிட்டுத் திட்டி எழுதத் தான் போறீங்க.. அது முக்கியம் இல்லீங்க... பிடிக்காதவனும் படிக்கணும் நினைக்கிறான் பாருங்க அது ..அது தாங்க.. அந்த ஆளூ.... அடிச்சுப் பட்டயக் கிளப்புறார் டோய்.

D.P.K.Devnath - http://chennaicutchery.blogspot.com

6.2.06

சந்திரமுகி - 300



உலகினில் எதுவும் நிரந்தரம் இல்லை
உறங்கிடும் வரையில் சுதந்திரம் இல்லை
அவனவன் சொல்வான் ஆயிரம் சேதி
அளப்பவன் பேர்தான் அரசியல் வாதி
அதுக்கென்ன செய்ய அது அந்த..
பதவியின் வியாதி!
உனது கை கால்களே...
உதவும் நன்பர்களே...
திரைகடல் மேல்
எண்ணை துளியினை போல்
ஒட்டி ஒட்டாமல் இரு!

2.2.06

This Month That Year - வைகோவுக்கு ரஜினி போன்

"நீங்க ஜெயில விட்டு வீட்டுக்கு வந்ததில ரொம்ப சந்தோஷங்க. ஜெயிலில் நீங்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க. உங்க ஹெல்த்தைப் பத்தி எனக்குக் கவலையா இருந்தது. நீங்க நல்ல உடல் நலத்தோட இருக்கணுங்க. எல்லா வகையிலும் நீங்க சிறப்புப் பெறணும். இரண்டு நாளுக்கு முன்பே உங்களுடன் பேச நினைத்து போனில் தொடர்பு கொண்டேன். நீங்கள் கோர்ட்டுக்கு போயிருப்பதாக சொன்னாங்க,'' என்று சொல்ல, அதற்கு வைகோ, ""ரொம்ப நன்றிங்க, நீங்க வாழ்த்துச் சொன்னது மிகவும் மகிழ்ச்சியா இருக்கிறது. உங்க ஹெல்த் நல்லாயிருக்கா?,'' என்று கேட்டார். ரஜினி அதற்கு, "நான் நல்லாயிருக்கேன்,'' என்று பதில் தெரிவித்தார்.

அடுத்து வைகோ பேசும் போது, ""ஏராளமான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். ஆனால், இவ்வளவு பெரிய ஆதரவை நீங்கள் உங்களுக்காக எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிக் கொள்ளவில்லை. அதுதான் பெரிய விஷயம். உங்கள் படம் வரவில்லையேங்கிற ஏக்கத்துல உங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். "பாட்ஷா, அண்ணாமலை, முத்து மற்றும் படையப்பாவை விட இன்னும் சிறந்த படங்களை நீங்கள் கொடுக்க முடியும். ஜப்பானில் உங்கள் படங்கள் அரங்கம் நிறைந்து ஓடுவதாக கேள்விப்பட்டேன். இந்தப் பெருமை இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடைக்கவில்லை. உங்கள் அலைகள் ஓய்வதில்லை என்பதை நீங்கள் நிரூபிக்க முடியும். உங்களிடம் அப்படிப்பட்ட திறமை இருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக வருடத்துக்கு ஒரு படம் தரவேண்டும்,'' என்று கூறினார்.

இதற்கு ரஜினி, ""ரொம்ப தாங்ஸ் சார். புதிய படத்தைப் பற்றித் தான் நான் சீரியஸ்சா பிளான் பண்ணிக்கிட்டிருக்கேன். சீக்கிரத்தில் ஒரு நல்ல படத்தை கொடுக்கப் போகிறேன்,'' என்றார்.

பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட வைகோ 577 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். அவர் சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டிற்கு தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் இரவு தொலைபேசி மூலம் வைகோவிற்கு வாழ்த்து சொன்னார். நலம் விசாரித்தார். ரஜினி வைகோ தொலைபேசி பேச்சு குறித்த விவரம் ம.தி.மு.க., அலுவலகத்தின் செய்திக் குறிப்பு மூலம் பத்திரிகைகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : Dinamalar, dated 12.2.2004

டாப் டென்

ரஜினியை முதல் இடத்தில் உட்கார வைத்திருக்கிறது "சந்திரமுகி". வருடந்தோறும் பல்வேறு தலைப்புகளின் கீழ் கருத்து கணிப்பு நடத்திவருகிறது லயோலா கல்லூரி. இந்தமுறை பேராசிரியர் பாதிரியார் ராஜநாயகம் தலைமையில் 18 பேர் கொண்ட படை புறப்பட்டது. நீலகிரி மாவட்டத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தலைப்புகளில் கருத்து கணிப்புகளை இவர்கள் நடத்தியுள்ளனர். நேற்று இந்த கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டின் டாப் டென் நடிகர்கள் பட்டியல்...

பட்டியலின் கடைசியில் தொற்றிக்கொண்டிருப்பவர் சரத்குமார். இவருக்கு கிடைத்துள்ள புள்ளிகள் 1.5. ஒன்பதாவது இடம் சூர்யாவுக்கு. மூன்று புள்ளிகளை வென்றுள்ளார் இவர். 'பரமசிவன்' மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கும் அஜித்துக்கு 3.1 புள்ளிகளுடன் எட்டாவது இடம். இவரை அடுத்து வருவது சீயான். இவருக்கு கிடைத்திருக்கும் புள்ளிகள் 3.2. உலகநாயகனுக்கு உள்ளூரில் ஆறாவது இடமே கிடைத்திருக்கிறது. இவர் சம்பாதித்த புள்ளிகள் 7.5.

இந்த டாப் டென் லிஸ்டின் அதிசயம் எம்.ஜி.ஆர்., சிவாஜி! இறந்து இத்தனை வருடங்கள் ஆன பிறகும் 13 புள்ளிகளுடன் எம்.ஜி.ஆர். மூன்றாவது இடத்திலும், 9.6 புள்ளிகளுடன் சிவாஜி ஐந்தாவது இடத்திலும் ஜம்மென்று வீற்றிருக்கிறார்கள். இந்த இரு இமயங்களுக்கு நடுவே விஜய். இவருக்கு கிடைத்திருக்கும் புள்ளிகள் 10.

கட்சி துவங்கியிருக்கும் விஜயகாந்துக்கு இரண்டாவது இடம் கொடுத்திருக்கிறார்கள் தமிழக மக்கள். 13.9 புள்ளிகள் பெற்றிருக்கும் இவரை 18.9 புள்ளிகளுடன் முந்தியிருப்பவர் ரஜினி!



சென்ற வருடம் ஏப்ரல் மாதம் நடத்திய கருத்து கணிப்பில் இரண்டாவது இடத்தில் இருந்தார் ரஜினி. 'சந்திரமுகி' வெற்றியால் லகலகலகவென முதலிடத்துக்கு தாவிவிட்டார் ரஜினி!

1. Super Star Rajinikanth - 18.9
2. Vijayakanth - 13.9
3. M.G.R - 13
4. Vijay - 10
5. Shivaji Ganeshan - 9.6
6. Kamalahaasan - 7.5
7. Vikram - 3.2
8. Ajith Kumar - 3.1
9. Surya - 3
10. Sarathkumar - 1.5

Coutesy : - cinesouth.com