10.4.08

நியாயத்தின் பக்கத்தில் ரஜினி! - வைகோ

ஒகேனக்கல் விவகாரத்தில் நடிகர் ரஜினியின் நிலைப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத் தில் என்ன நிலை எடுப்பார் என்று ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு கன்னடனும் எதிர்பார்த்திருந்த நேரம்... அவர் தெள்ளத் தெளிவாக நியாயத்தின் பக்கம் நின்றார். எதற்காகவும், யாருக் காவும் அவர் தன் உள்ளத்தில் இருப்பதைப் பூசி மெழுகவில்லை! 'ஒருவன் ரவுடித்தனம்செய்யஅத்துமீறி வீட்டுக்குள் நுழைந்தால் அவனை என்ன செய்வோம்? உதைக்க வேணாம் அவனை?' என்று உண்ணாவிரத மேடையில் பேசினார் ரஜினி. வீடு புகுந்து தாக்குபவர்களைத் தற்காப்புக் காக பதிலுக்குத் தாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டே ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. அதைத்தான் ரஜினி கூறியுள்ளார்.

அவருடைய பேச்சின் எதிரொலியாக ரஜினிக்கு ஏதேனும் ஆபத்தென்றால், வேடிக்கை பார்க்க மாட்டான் மானமுள்ள தமிழன்! இந்த விஷயத்தில் அவருக்கு ஒரு பிரச்னை என்றால் அவருக்காக முதலில் நிற்பது இந்த வைகோவின் இயக்கமாகத்தான் இருக்கும்!

1 comment:

இத்துப்போன ரீல் said...

வைகோ வைகோ தான்!