23.6.07

தமிழ் மணத்துக்கு நன்றி


சமீப நாட்களாக தமிழ்மணம் திரட்டி தரும் பதிவுகளும் அவற்றில் வெளியாகியிருந்த பின்னூட்டங்களும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. குறைந்த பட்ச நாகரீகத்தைக் கூட மறந்து இன்று உலகமே புகழும் சூப்பர் ஸ்டாரையும் அவரை நெஞ்சில் வைத்து ரசிக்கும் ரசிகர்களையும் ஒருமையில் வசை பாடி வந்த பதிவுகளால் மனதளவில் காயப்பட்டிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

எந்தவொரு காலகட்டத்திலும், எந்தவொரு நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் எத்தகைய விமர்சனத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான் நாங்கள் படித்திருக்கும் பாடம். ரஜினியும் சரி ரசிகர்களும் சரி வீண் வம்புக்கும் சண்டைக்கும் அலைந்ததில்லை. அவசியமான நேரத்தில் கூட வார்த்தை அம்புகளை எய்து யாரையும் காயப்படுத்தியதாக சரித்திரமில்லை. புயலுக்கு பின்னர் அமைதி வரும் என்று காத்திருந்து வெறுத்துப் போனதால் எங்களுக்கும் வேறு வழியில்லை. பழிக்குப் பழி என்று தமிழ் மணத்தை மேலும் சாக்கடையாக்கிவிடவும் விருப்பமில்லை.


ரஜினி என்னும் தனிநபர் மீதான வெறுப்பினால் வந்த அரிப்பை தமிழ் மணம் போன்ற பொதுவிடங்களில் அநாகரீகமான முறைகளில் தேய்த்து சுகித்துக்கொள்ள நினைக்கும் ஈனப்பிறவிகளையும், சர்ச்சைக்குரிய பதிவுகளை கையாள முடியாத தமிழ்மணத்தின் இயலாமை¨யும் கண்டித்து இன்றிலிருந்து தமிழ்மண திரட்டியிலிருந்து எங்களை விடுவித்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறோம்.


கடந்த நான்கு ஆண்டுகளாக எங்களது பதிவிற்கு வந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், பாராட்டுக்களையும் வழங்கிய அனைத்து இணைய நண்பர்களுக்கும், உதவியாக இருந்த தமிழ் மணம் குடும்பத்தாருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.


பிரிவோம்! என்றாவது சந்திப்போம்!

19.6.07

அதிரும் இலங்கை!

அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா, அரபு நாடுகளைத் தொடரந்து இலங்கையிலும் சிவாஜி மாபெரும் வெற்றி அடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறன. மேலும்
டென்மார்க், நார்வே ,சுவிஸ்,இத்தாலி,ஹாலந்து,பிரான்சு,ஆஸ்திரேலியாவில் சிவாஜியை உற்சாகமுடன் வரவேற்று கண்டு மகிழ்ந்துஇனம், மொழி வித்தியாசம் பாராமல் வெற்றியை அள்ளிக்கொடுத்த ஈழத்தமிழர்களுக்கும் நன்றி.!

அண்ணன் வந்தா எல்லா நாடும் தமிழ்நாடே...!


நன்றி!



17.6.07

இன்று முதல்


தாய்க்குலங்களின் கூட்டத்தினால் தியேட்டர் அதிர்கிறது. இந்திய சூப்பர் ஸ்டாரை ரசிப்பதில் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடு இல்லை என்பதை சிவாஜி நிரூபித்திருக்கிறது. வாழ்த்துக்கள் வாத்யாரே!


16.6.07

கத்தாரில் சிவாஜி

Photobucket - Video and Image Hosting


பல நாடுகளிலும் சிவாஜி வெளியிடபோவது பற்றி முன்னமே பல அறிவிப்புகள் வெளியான நிலையில் கத்தார் பற்றிய ஒரு செய்தியும் இல்லாத காரணத்தில் ரசிகர்கள் மனதில் ஒரு சோர்வு வியாழன்
வரைக்கும் இருந்தது ஆனாலும் பல ரசிகர்கள் ஒரு நம்பிக்கையுடன் இருநதனர் அதற்கு காரணம் சென்ற முறை சந்திரமுகி வெளியிடப்பட்டதுதான்.

அந்த நம்பிக்கை பொய்க்காதவகையில் வியாழன் அன்று மாலை திரை அரங்கத்தில் போஸ்டர் ஒட்டி முடிக்கும் போது ஃபார்மாகியிருந்த பெரிய கியூவினை கண்டு அனைவருக்கும் அதிசயமாகத்தான் தெரிந்திருக்கும்.

வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி முதல் ரசிகர் குவிய ஆரம்பித்தனர் இத்தனைக்கும் இன்று வெள்ளிகிழமையாதலால் மதியம்தான் முதல் காட்சி ஆரம்பிக்கப்பட்டது வியாழன் இரவு பாதி டிக்கெட் விற்பனை முடிந்ததால் காலையிலேயே குவிந்த தமிழ்நாட்டு ரசிகர்களின் கூட்டத்தினை கட்டுப்படுத்த முடியாமல் திரை அரங்கினர் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்
எது எப்படியோ முதல் காட்சி முடிந்து வெளிவந்த ரசிகர்களிடமிருந்து வந்த கோரஸ் கமெண்ட்


கூல்....! (தனனனணா...தனனணா...!)

15.6.07

எங்கேயோ கேட்ட குரல் - 4

"உழைப்பாளிகள், ஏகாதிபத்திய சோமாறி, டாட்டாயிஸ்ட், தனியார்மயம் நக்சல்பாரி, பெரியார் புரா, ரசியப் புரட்சி, லெனின்.....'பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி விவாதங்களை ஆரம்பித்து வைக்கிறோம் என்று ல்ல கடமைப்பட்டிருக்கிறோம்"

'போங்கப்பு.. போங்க.... நாலு எலுமிச்சைப் பழம் வாங்கி தேய்ச்சு குளிங்க... உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையாடா?'

14.6.07

நாளை இந்த வேளை பார்த்து...!


நம்ம தலைவரும் ஷங்கரும் சேர்ந்து எப்ப படம் பண்ணுவாங்க..? எப்ப படம் பண்ணுவாங்க அப்படின்னு கடந்த பத்து வருடங்களாக் நாம எதிர் பார்த்து கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு கூட்டணி - சூப்பர் கூட்டணி (ரஜினி,ஷங்கர்,ஏ.ஆர்.ரகுமான் & ஏ.வி.எம் - உருவாகி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கி தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, பெரும்பாலான இந்திய நகரங்கள் மற்றும் உலகின் பல பகுதிகளிலும் சிவாஜியின்
நாளைய தி(தரிசனத்)னத்திற்காக காத்திருக்கின்ற ரசிகர்கள்
இவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற எங்களின் தங்கத்தலைவன் தரிசன நாளை முதல் வெள்ளிதிரைகளில்

சும்மா அதிர போகுதுல்ல..!

அமெரிக்காவில் ரஜினி

அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா அல்ல

அண்ணன் வந்தா அமெரிக்கா தமிழ்நாடு!

தலைவர் தரிசனம்

சிவாஜி வருஷம் நாளை பிறக்கிறது!

ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த வரவேற்போடு வருகிறார்....

உங்கள் நெஞ்சங்களில் எப்போதும் நிலைத்து நிற்க.


சிவாஜி கொண்டாட்டங்கள்,
ரசிகர்களின் சந்தோஷக் கூச்சல்கள், ஒரு நேரடி விமர்சனம். www.rajinifans.com

தலைவர் தரிசனம்

சிவாஜி வருஷம் நாளை பிறக்கிறது!

ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த வரவேற்போடு வருகிறார்....

உங்கள் நெஞ்சங்களில் எப்போதும் நிலைத்து நிற்க.


சிவாஜி கொண்டாட்டங்கள்,
ரசிகர்களின் சந்தோஷக் கூச்சல்கள், ஒரு நேரடி விமர்சனம். www.rajinifans.com

12.6.07

Chandramukhi Vs Haridass

சந்திரமுகியின் 800வது நாள் விழா முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடக்கிறது.

தமிழ்த் திரையுலகில் இதுவரை தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் படம்தான் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது. 1944ல் வெளியான 770 நாட்கள் ஓடிய ஹரிதாஸ் படத்தின் சாதனை, சந்திரமுகியால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஹரிதாஸ் 3 காட்சிகள் ஓடியது; சந்திரமுகியோ ஒரே ஒரு காட்சிதானே ஓடியது என்று குறை சொல்பவர்களும் இருக்கிறார்கள். 150 நாட்கள் வரை சந்திரமுகி ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடியிருந்தது. சந்திரமுகி, முதல் 200 நாட்கள் நான்கு காட்சிகளாகவும் அடுத்து வந்த 600 நாட்கள் பகல் காட்சியாகவும் ஓடியது.

சந்திரமுகி, சிவாஜி பிலிம்ஸ் கம்பெனிக்கு சொந்தமாக சாந்தி தியேட்டரில் ஓடியது. ஹரிதாஸ், திருச்சி ராயல் டாக்கீஸார் கம்பெனிக்கு சொந்தமான ராயல் டாக்கீஸில் ஓடியது.

எத்தனை வாரங்கள் ஓடியது என்பதில் மட்டுமே சந்திரமுகியுடன் ஹரிதாஸை ஒப்பிட முடியுமே தவிர படத்தில் தரம் போன்ற விஷயங்களில் சந்திரமுகியோடு ஹரிதாஸை ஒப்பிடவே முடியாது என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

ஹரிதாஸ் வெளியான அறுபதாவது நாளே லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் கைது செய்யப்பட்டார். பாகதவர் நடித்த கடைசிப்படம் இதுதான் என்று தொடர்ந்து ராயல் டாக்கீஸார் விளம்பரப்படுத்தியதன் விளைவாக ஹரிதாஸ் 3 தீபாவளிகளைக் கண்டது. சிறையிலிருந்து மீண்டு வந்த பின்னர் பாகவதர் நடித்த படங்கள் ஒரு மாதம் ஓடவில்லை என்பது வெளிப்படை.



சந்திரமுகி, 800 நாட்களைத் தொட்டுள்ளது. இது தமிழில் மட்டுமல்லாது தென்னிந்தியாவிலும் புதிய சாதனை ஆகும். சந்திரமுகியின் சாதனையை பாராட்டி விழா எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனமும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து இந்த விழாவை வருகிற 25ம் தேதி நடத்தவுள்ளன. விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் இரண்டு வாரங்கள் ஓடினாலே போஸ்டர் அடித்து, ஆரத்தி எடுத்துஅமர்க்களப்படுத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் சந்திரமுகியின் சாதனையை சத்தமில்லாமல் கொண்டாடும் ரஜினியின் ரசிகர்களை பாராட்டியே ஆகவேண்டும்.