3.5.04

பழி வாங்கும் உணர்ச்சி?!

தன்னை அரெஸ்ட் பண்ணி ரெண்டு நாள் உள்ளே வெச்ச கருணாநிதியை மிட் நைட்டில் வூடு பூந்து அரெஸ்ட் பண்ணிய ஜெயலலிதாவிடம் இல்லாத சங்கதி...

எம்.ஜி.ஆரை ஓரங்கட்ட மு.க.முத்துவை முன்னுக்கு கொண்டு வர நினைச்சதிலிருந்து கணக்கு கேட்டதற்காக கட்சியை விட்டு கட்டம் கட்டிய தமிழ்நாட்டு சாணக்கியர் கருணாநிதியிடம் இல்லாத சங்கதி...

ஈவி'கேஸ்' மட்டும் ஒன் மேன் ஷோ நடத்தி நம்மளை கவுத்துடவாரோன்னு பயந்து டெல்லியிலே கேம்ப் அடிச்சு தனக்கு கூஜா தூக்குன கதர் வேஷ்டிக்கு மட்டும் சீட் வாங்கி கொடுத்த வாசனைப் பாக்கு வாரிசு வாசனுக்கு தெரியாத சங்கதி...

தலித் எழில் ம¨லையில ஆரம்பிச்சு பு.தா பிரதர்ஸ் வரைக்கும் கேள்வி கேட்டவங்களையெல்லாம் மரத்தை வெட்டி சாய்க்கிற மாதிரி கட்சியில வெச்சுக்கிட்டே கட்டம் கட்டி கடாசின சமூக நீதி சமத்துப்பிள்ளை ராமதாஸ¥க்கு பழக்கமே இல்லாத விஷயம்...

ஒரு வருஷமாய் வெயிட் பண்ணியும் ஆக்ஷன் ஓண்ணமேயில்லைன்னு தெரிஞ்சதும் தம்பின்னு வந்த குரலை கேட்டு சிவாஜியா மாறி கம்பியை மட்டுமல்லாம கூட்டணியை விட்டும் வெளியே வந்த வைகோவுக்கு தெரியாத விஷயம்...

காவி கட்சிக்கு தலித் தலைவரு எதுக்குன்னு வேட்டு வெச்ச பிரம்மச்சாரி பிராமண பார்ட்டிக்கு தெரியவே தெரியாத சங்கதி...

பாட்டாளி மரம்வெட்டும் கட்சி எந்தக்கூட்டணியிலிருந்தாலும் அந்தக் கூட்டணி இருக்கும் திசைக்கே ஒரு கும்பிடு போட்டு ஓடி வந்து தனியா நின்னு கத்தி, கபடாவெல்லாம் வெச்சுக்கிட்டு தலித் உரிமைக்காக பாடுபடும் திருமாவளவனிடமும் இல்லாத சங்கதி...

உள்ளே புடிச்சு போட்டதால் தமிழ் உணர்வை வளர்க்க முடியாம போயிடுச்சேன்னு புலம்பி ஜாமீன்ல வுட்டதும் நேரா கோபாலபுரத்துக்கு பஸ் புடிச்ச நெடுமாறன் & கோவிடம் இல்லாத விஷயம்...

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம்தான் சொல்லி டகால்டி வேலை பார்த்து ரசிகனுங்க பாக்கெட்டுல கைவெச்ச மீசைக்காரருக்கு தெரியாத விஷயம்...

டெல்லியிலிருந்து வந்து போல்டா எழுதி மப்பில் இருந்த மரம் வெட்டிகளிடம் வாங்கி கட்டிக்கொண்ட பத்திரிக்கையாளினியை வூட்டுக்கு அனுப்பிட்டு டுடேவுக்கு ஏத்த மாதிரி மேட்டரையே மாத்திக் காட்டும் அந்த நேஷனல் பத்திரிக்கை வாத்தியாரிடம் இல்லாத விஷயம்...

வெட்டிக்கதை பேச ஒரு இடத்தை வெச்சுக்கிட்டு பிரகஸ்பதி மாதிரி பேசுற ஆளுங்களை கவுக்குறதுக்காகவே வேற பேரு வெச்சுக்கிட்டு வேலை மெனக்கெட்டு இலக்கியம் படைக்கிற இலக்கியவாதிகளிடம் இல்லாதது...

என்ன பேசுறோம்னு எதிராளிக்கு புரியவே கூடாதுன்னு தீர்மானம் பண்ணி வெச்சுக்கிட்டு தொழில் போட்டியாளர் சறுக்கி விழும்போது மெனக்கெட்டு ப்ரஸை கூப்பிட்டு பேட்டி குடுக்கிற வோர்ல்டு ஹ¥ரோவிடம் இல்லாத விஷயம்...


ஆனால்,


பாபா படத்தின் தோல்விக்கு மட்டுமல்லாமல் படம் வெளிவருவதற்கு முன்பிலிருந்தே ஆரோக்கியமான(?) விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமல்ல இன்று வரை ஆ·ப் த ரெக்கார்டாக சமூக (?) விழிப்புணர்வுடன் பேசும் (வட)தமிழ்நாட்டு மக்களின் இனக்காவலர் டாக்டர் அய்யாவை ஒரு சாதாரண நடிகர்(?) போட்டியிடும் தொகுதிகளிலெல்லாம் எதிர்ப்பதாக கூறுவது.....நிச்சயமாக பழி வாங்கும் உணர்ச்சிதான்!

anbudan, J. Rajni Ramki

No comments: