5.12.03

'ஊர்' வலம் :-

அந்த காலத்துல ராஜாக்களெல்லாம் மாறுவேடத்துல நகர்வலம் போவாங்களாம். ஆனாலும் தலைவர் ரொம்ப மோசம். எப்ப வருவார் எங்கே வருவார்னு யாருக்கும் தெரியமாட்டேங்குது!

போன வாரம் சிவசங்கா பாபாவின் பிறந்தநாள் விழாவுக்கும் மாறுவேஷத்துல வந்தவரை சில பேர் கண்டுபிடிச்சதும் இடத்துலேர்ந்து ஜூ ட் . ஆனா, இதெல்லாம் உண்மைதானா அல்லது 'அவுத்து' விடற சங்கதியான்னுதான் தெரியம மண்டை காய வேண்டியிருக்கு!

இப்பெல்லாம் தலைவரை அங்கே பார்த்தேன், இங்கே பார்த்தேன்னு சொன்னாலே பயமாத்தான் இருக்கு.. நம்பமா இருக்கவும் முடியலை. ஒரு தடவை திருவல்லிக்கேணி ராகவேந்திரர் மடத்துக்கு போக வழி கேட்டாராம். எப்போ? ராத்திரி பதினோருமணிக்காம்... காதுல கனகாம்பரம்தான்!

லேட்டஸ்டா, ஒளிப்பதிவாளர் சங்கம் நடத்தின விழாவுக்கு கடைசி நேரத்துல வருவார்னு புரளியை கிளப்பி எல்லே £ரும் ஏமாந்துதான் போனாங்க... இரண்டு வருஷத்துக்கு முந்தி இளையராஜாவுக்கு நடத்தின பாராட்டு விழாவில் சத்தம் போடாம வந்து ஆடியன்ஸோடு ஆடியன்ஸாய் இருந்தவரை கண்டுபிடிச்சு மேடைக்கு ஏத்தி விட்டாங்க. ஒரு தடவை துக்ளக் ஆண்டு வழாவுக்கு திடீர்னு பிரசன்னமாகி வந்திருந்தவங்களுக்கெல்லாம் ஷாக் கொடுத்தாரு. நாலு மாசம் முந்தி, பொண்ணுங்களோட வந்து Hemamalini பரதநாட்டிய பங்கஷனுக்கும் ஆஜர்.

கொஞ்ச நாளைக்கு முந்தி இப்படித்தான் ஒரு பௌர்ணமி நாளன்னிக்கு திருவண்ணாமலையில், முக்காடு போட்டுட்டு வந்த முகங்களையெல்லாம் நான் சந்தேகத்தோடு பார்த்துகிட்டே கிரிவலம் வந்தது தனி கதை. தலைவரும் வந்தார்... அதற்கடுத்த பௌர்ணமிக்கு!

இதெப்பத்தி நினைச்சுகிட்டே நைட் படுத்தா... செமத்தியான கனவு. தலைவர் கோடம்பாக்கம் பக்கம் ஒரு Browsing Centreல் நம்ம சைட்லேர்ந்து டவுண்லோடு பண்ணிட்டிருக்கார். நட்டுவும் நானும்தான் பிரிண்ட் எடுத்து பிளாப்பியில் போட்டுகிட்டிருக்கும்போதே வில்லன் எண்டராகி, தலைவர் கூட சண்டை போடுறார்....
வில்லன் துப்பாக்கி எடுக்க, தலைவர் தடுக்க, நட்டுவை நோக்கி தோட்டா பறக்க, சினிமாவுல வர்ற மாதிரி நான் குறுக்கே புகுந்து தியாகியாகி.... பயங்கரமான கனவுதாங்கோ!

அய்யோ... தாங்க முடியலை... ஆளை வுடுங்கறீங்களா?

இப்போதைக்கு ஜுட்!

- ஜெ. ரஜினி ராம்கி

No comments: