31.8.04

காவிரியால் ஒரு விளையாட்டு!

ஆண்டுதோறும் நடைபெறும் அரசியல் விளையாட்டாக காவிரி நீர் பிரச்சனை உருமாறிக்கொண்டிருக்கிறது. தண்ணீருக்காக நடைபெறும் இந்த போராட்டம் செந்நீரால் முடிகிறது. தன்னை மறந்துப்போன மக்களுக்கு அடையாளங்காட்ட நெய்வேலி போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் பாரதிராஜா. தண்ணீர் இல்லையேல் மின்சாரம் இல்லை என்கின்ற போரட்டத்திற்கு பதிலாக, தண்ணீர் இல்லையேல் தமிழ் திரைப்படம் கர்நாடகத்தில் திரையிடுவதில்லை என போராடியிருக்கலாம். இப்படி போராடினால் இந்த நடிகர்களும், விநியோகஸ்தர்களும் நஷ்டமடைவார்கள் அதை இந்த நடிகர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் பணம் சேர்ப்பதற்கு கர்நாடகா மக்களும், அங்கிருக்கும் தமிழர்களும் தேவை ஆனால் மின்சாரம் மட்டும் தரமாட்டோம் என எந்த உரிமையில் இவர்கள் போராடினார்கள்? மின்சாரத்தை இவர்கள் நிறுத்துவதாக வைத்துக்கொண்டால் அங்கிருக்கும் தமிழர்களும் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்? அந்த தமிழர்களின் வீடுகளும் அல்லவா இருட்டால் பாதிக்கப்பட்டிருக்கும்? பக்கத்து மாநில தமிழர்களையே பாதுகாக்க மறுக்கும் இவர்களின் மனம் எப்படி இலங்கை தமிழர்களை பற்றி வாய் கூசாமல் பேசுகிறது? இப்ப்டி எல்லாம் போராட்டம் நடத்திய விஜயகாந்த்தால் எப்படி வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும் என வீர வசனம் பேச முடிகிறது? இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சரத்குமார் எப்படி முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவிற்காக கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிந்தது? பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் ஸ்டார் ஷோ நடத்தி நிதி திரட்ட முன் வந்த விஜயகாந்த், இந்த போராட்டத்திற்கு பதிலாய் அந்த ஒரு நாளில் தமிழக விவசாயிகளுக்காக ஸ்டார் ஷோ நடத்த முன் வந்திருந்தால் சூப்பர் ஸ்டார் முழு மனதோடு மகிழ்ச்சிபொங்க கலந்துகொண்டிருப்பார். சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கை எப்படியாவது தட்டி பறித்துவிடலாம் என்ற நோக்கோடு இருந்த விஜயகாந்த்திற்கும், பாரதிராஜாவிற்கும் முடிவில் மிஞ்சியது ஏமாற்றமே. கூட்டமாய் இவர்கள் நடத்திய அநீதி போராட்டத்தை காட்டிலும் தனி மனிதனாய் நீதி வேண்டி போராடிய சூப்பர் ஸ்டாரின் போராட்டமே வென்றது. எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் கர்நாடகா முதல்வர் கிருஷ்ணா அவர்கள், ரஜினிகாந்த்தின் அகிம்சை போராட்டத்தால் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இது காவிரி பிரச்சனையை தீர்க்கும் என கூறியது சூப்பர் ஸ்டாரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிகளுள் ஒன்று. உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதித்து அகிம்சையாய் போராடிய நம் தலைவரின் போராட்டம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் மனதில் பீதியை ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டாரை எதிர்க்கும் எவரும் வென்றதில்லை என்பது மட்டும் உறுதி. பாமக வென்றதும் கூட கூட்டணி கட்சிகளால்தான். அதிலும் பாமகவின் வாக்குகள் சிதறிக்கப்பட்டுள்ளதை பாமகவே ஒப்புக்கொண்டுள்ளது. சூப்பர் ஸ்டாரை நல்ல மனிதன் என கலைஞரும், ராமதாசும், அன்புமணியும் தேர்தல் பயத்தில் உண்மையாய் ஒப்புக்கொண்டது மறக்க முடியாதது. ரஜினி எனும் சக்தி முழுதாய் வெளிப்படும்போது, மக்களை ஏமாற்றும் அரசியல் தடங்கள் அழிக்கப்படுவது நிச்சயம்.

மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

ரஜினி மனசாட்சி வென்றிருக்கின்றது!

சூப்பர் ஸ்டார் எதனால் அதிமுக-விற்கு வாக்களித்தார் என்பது பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்திவிட்டது. இவர் வாக்களித்தது சரியா, இல்லையா என பட்டிமன்றம் கூட ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது. மீண்டும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது என சொன்ன சூப்பர் ஸ்டார் இப்போது எதனால் அதிமுக-விற்கு வாக்களித்தார்? உண்மையாக சொல்ல வேண்டுமெனில் ரஜினி வழி, தனி வழி தான். இப்போது நாட்டு நடப்பை பார்க்கும்போது ஆளும் கட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களிக்கிறார்கள். ஐந்து வருடம் ஒரு கட்சிக்கு, அடுத்த ஐந்து வருடம் வேறு கட்சிக்கு என மக்கள் மாறி வாக்களிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்தது பிரதமரை தேர்ந்தெடுக்க அல்ல என்பது மட்டும் புரிந்தது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு இருந்தால் தமிழக மக்கள் நிச்சயம் பாஜக-விற்கு பரிசாய் தந்த பெரிய தோல்வியை காங்கிரசுக்கும் தந்திருப்பார்கள். பாரளுமன்ற தேர்தலில் மக்கள் மாநில அரசை, மாநில கட்சிகளை கருத்தில் கொண்டு வாக்களிக்கும் முறை மாற வேண்டும். அதிமுக அரசின் மேல் இருந்த அதிருப்தியை மக்கள் சட்டசபை தேர்தலில் காட்டுவதை விட்டு, பாரளுமன்ற தேர்தலில் காட்டியது வருந்த வேண்டிய ஒன்று.பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிமுக-வையும், திமுக-வையும் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் முறையிலிருந்து மக்கள் மாறுபட வேண்டும். திமுக செய்வது எல்லாம் சரியே என ஆதரிப்பவர் சூப்பர் ஸ்டார் இல்லை. இந்த தேர்தலை பொறுத்தவரை வாஜ்பாயா, சோனியாவா என முடிவு செய்த தேர்தல். இதை கருத்தில் கொண்டே சூப்பர் ஸ்டார் பாஜக கூட்டணியான அதிமுக-விற்கு வாக்களிக்க நேர்ந்தது. திமுக திடீரென மதவாத கட்சி பாஜக என குற்றம் சாட்டி உறவை முறித்துக்கொண்டு, இங்கே ஜாதிக்கட்சியான பாமக-வுடன் உறவை வலுப்படுத்தியது ரஜினிக்கு மட்டும் அல்ல, ரஜினி ரசிகர்களுக்கும் திமுக-வின் மேல் வெறுப்பை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திமுக-விற்கு ஆதரவாக 96 தேர்தலில் கடுமையாய் உழைத்த ரஜினி ரசிகர்களின் உழைப்பை கலைஞர் அவர்கள் மறந்து போனாலும், சூப்பர் ஸ்டார் கலைஞரை பற்றி தவறாய் கருத்து கூறாதது அவரது பெருந்தன்மையை காட்டியது. அரசிலில் சூப்பர் ஸ்டார் ஈடுபட்டாலும் அரசியல்வாதிகள் போல் இல்லாமல் ஒரு நல்ல மனிதனாய் திகழ்கிறார். நதி நீர் இணைப்பு பற்றி எப்போதோ பேச்சு எழுந்து இருக்கலாம் ஆனால் சமீப காலமாக இந்தியா முழுதும் இதைப்பற்றி பேச காரணமாய் இருந்தவர் சூப்பர் ஸ்டார். கனவிலும் நடக்காத விசயத்தை சூப்பர் ஸ்டார் பேசுவதாக பாமக குறை கூறியது. இன்று எல்லா அரசியல் தலைவர்களும் நதி நீர் இணைப்பு பற்றி பேசினால்தான் ஓட்டு விழும் என நினைத்து இதைப்பற்றி பேசாத நாள் இல்லை. இந்தியாவில் வறுமை ஒழிய வேண்டும், நதிகள் இணைய வேண்டும் என்கின்ற சூப்பர் ஸ்டாரின் ஆசையை நிறைவேற்றுவதாக வாஜ்பாய் அவர்கள் சொன்னதும் அவர் பாஜக கூட்டணியான அதிமுக-விற்கு வாக்களிக்க ஒரு காரணமாக அமைந்தது. அதிமுக-விற்கு வாக்களித்தேன் என சூப்பர் ஸ்டார் வெளிப்படையாய் சொன்ன போது அவரின் துணிச்சலையும், சொல்வதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன் எனும் அவரின் வார்த்தையின் அர்த்தத்தையும் உணர்த்தியது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பாமக-வினரால் தாக்கப்பட்டதுதான் அவரின் மனதை அதிகமாய் பாதிப்படையச் செய்து அவர் மனம் திறப்பதற்கு வழிக்காட்டாக அமைந்தது. பாமக-வின் வன்முறை, திமுக-வின் நன்றியின்மை, வாஜ்பாய் தந்த உறுதிமொழி இவ்வாறான காரணங்களால் மட்டுமே அவர் அதிமுக-விற்கு வாக்களிக்க நேர்ந்தது. அவரின் அந்த ஓட்டு அவர் உயிருக்கு உயிராய் மதிக்கும் ரசிகர்களுக்காகவும், தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் விவசாயிகளுக்காகவும், உயிரை விலை பேசிக்கொண்டிருக்கும் வன்முறைக்கு எதிராகவும் அளித்த லட்சிய ஓட்டு. அவர் வாக்களித்த கட்சி தோற்றுப் போயிருக்கலாம் ஆனால் அவர் மனசாட்சி வென்றிருக்கின்றது.
மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

25.8.04

ஏன் ரஜினிக்கு உலகம் முழுவதும் இப்படி தீவிர ரசிகர்கள்?

மதிப்பிற்குறிய பத்ரி அவர்களுக்கு,

உங்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன், காரணம் நீங்கள் குறிப்பிட்ட லு}ஸ் ரசிகனில் நானும் ஒருவனாக இருப்பதால். ஏன் எங்களுக்குள் இப்படி ஒரு வெறி? ஏன் ரஜினிக்கு உலகம் முழுவதும் இப்படி தீவிர ரசிகர்கள்? உங்கள் மனதில் இவ்வாறு கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பது புரிகிறது. நாங்கள் நடிப்புக்காகமட்டும் ரசிகர்கள் இல்லை என்பதுதான் உண்மை. க~;டப்பட்டு தன் உழைப்பால் மேலோங்கி நிற்கும் ஒரு மாமனிதனை பார்க்கிறோம். நடிப்பு என்பது தொழிலில் மட்டுமே, வாழ்க்கையில் இல்லை என்று உணர்த்தும் உத்தமனை பார்க்கிறோம். உழைத்தால் உயரலாம் என்பதற்கு உதாரணமாய் தெரியும் உழைப்பாளியை பார்க்கிறோம். புகழின் உச்சியில் இருந்தாலும் எல்லோரையும் மதிக்க தெரிந்த தலைவனை பார்க்கிறோம். மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் ஒரு மாமனிதனின் ரசிகர்கள் உங்கள் கண்ணுக்கு வேறுபாடாய் தெரிவது, உங்களின் கண்ணோட்டத்தின் குற்றத்தை தெளிவுப்படுத்துகின்றது. ஜப்பானியர்கள் தமிழ் கற்றுக்கொண்டுத ஒன்றுதான் சந்தோசம் எனக்கூறிய நீங்கள் அவர்கள் தமிழ் கற்றதன் காரணம் அறியாதிருப்பதுதான் வேதனை.வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கே இன்று தமிழ் எழுத, படிக்க மறந்து போயிருக்கும் இந்நிலையில் ஜப்பானியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள து}ண்டுதலாய் இருந்த எங்கள் தலைவனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.தமிழ் கலாச்சாரத்தில் விருந்தோம்பல் என்பது ஒப்பற்ற ஒன்று. ராம்கியின் ஆட்டம், பாட்டம் எல்லாம் வந்தவர்களை குதுகுலப்படுத்திய விருந்தோம்பல்தான். ஆடிப்பாடிய ராம்கியின் சமுதாய சிந்தனைகள் உங்களுக்கு தெரியாததல்ல.உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழும் இவர்கள் நம் மண்ணை மதிக்கிறார்கள், நம் மண்ணின் மைந்தனை மதிக்கிறார்கள். இதுவல்லவா இந்திய நாட்டிற்கு பெருமை! கலாச்சார சீரழிவுகள் நம்மை அழித்துக்கொண்டிருந்தாலும், நம் கலாச்சாரத்தை இவர்கள் நேசிப்பது வியக்கத்தக்க ஒன்றுதான்! ரஜினி ரசிகர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். பாலையும், தண்ணீரையும் பிரிக்கத்தெரிந்தவர்கள். ஜாதி, மதம், மொழிகளால் வேறுபாடு இல்லாதவதர்கள்.

ரஜினி படத்தில் என்ன வேண்டும்? ரஜினி போதாதா? ஆனால்; ஒன்று மட்டும் இல்லை. அது ஆபாசம்.

இன்று நல்லவைகள் நம்மால் எட்டுத்திக்கும் செல்கின்றது.இதற்கு சான்று ஜப்பானியர்கள்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிப்பாடும், சூப்பர் ஸ்டார் வீட்டு நாய்க்குட்டிக்கும் எல்லோரையும் நேசிக்க தெரியும். இதனால்தான் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

நீங்கள் சொல்லப்பட்டிருக்கும் குறைகளில் நிறைய நிறைகளும் ஒளிந்திருக்கின்றது. ரஜினியின் புகழை குற்றம்சாட்டி புகழ்ந்ததற்கு நன்றி. ஆண்டவன் ஒரு நல்ல மனிதனை படைக்கம்போதே, அம்மனிதனை நேசிக்க கோடான கோடி மனிதர்களையும் சேர்த்து படைக்கிறான். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட எங்கள் தலைவருக்கும் இது பொருந்தும்.

நல்ல மனிதனை மதிப்போம்! நல் வழிச்செல்வோம்!

அன்புடன்
இரவிசங்கா
on behalf of www.rajinifans.com

'இன்னொரு ரஜினிகாந்த்' - ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை

மதிப்பிற்குரிய ஞாநிக்கு,

புதிதாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து அரசியல் பணியையும் ஆற்ற தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இதை எப்போதோ எதிர்பார்த்திருந்தோம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் எப்போதும் குறைகளையே அடுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் கொள்கைகள் ஒத்துப் போய் ஒரு அரசியல் அலைவரிசை ஆனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

விஜயகாந்தை பற்றி மட்டுமல்ல விக்டோரியா மகாராணியை பற்றி பேசும்போதும் கூட ரஜினியை பற்றி பேசாமலிருக்க முடியாது என்கிற நிலையில் விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாட்டையும் எதிர்பார்த்தது போலவே ரஜினியோடு ஒப்பிட்டுத்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள்! 'அரசியலுக்கு நுழைய முயற்சித்து தோற்றுப் போன ரஜினி' என்கிற முதல் வரி, தீம்தரிகிடவின் சர்க்குலேஷனை குறைந்த பட்சம் பத்து பிரதிகளாவது உயர்த்தியிருக்கும் என்கிற உண்மை தங்களின் மனசாட்சிக்கு தெரியாததல்ல.

நல்லவேளை அதிகமா சினிமா விமர்சனங்கள் எதையும் நீங்கள் எழுதிவிடவில்லை! ஊமை விழிகள் படத்தில் அப்போதே எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் நினைவுபடுத்தும் கேரக்டர்கள் அமைந்ததற்கு காரணம், விஜயகாந்த்க்கு அப்போதே எம்.ஜி.ஆரையும் கருணாநிதியையும் எதிர்க்கும் வல்லமை உண்டு என்பதை நிரூபிப்பதற்காகவா? மட்டமான சினிமா படங்களிலிருந்தும் அருமையான சிந்தாந்தங்களையும், அரசியல் பார்வைகளையும் உங்களால் மட்டுமே எப்படி எடுத்துக் கொள்ள முடிகிறது என்பதுதான் ஆச்சரியம்.

பாமகவின் வன்முறைக்கு பயந்து விஜயகாந்த் ரசிகர்கள் பதில் தாக்குதல் தொடுத்ததை பெருமிதத்துடன் சொல்லியிருப்பதிலிருந்தே நீங்கள் வைத்திருக்கும் அரசியல் செல்வாக்கின் அளவுகோல் எதுவென்பது தௌ¤வாக தெரிந்து விடுகிறது.

ரஜினியின் ரசிகர் மன்றங்கள், சத்தியநாராயணா மூலமே இயக்கப்படுகிறது என்கிற தங்களின் கண்டுபிடிப்பு, ரஜினிக்கும் சத்தியநாரயணாவுக்கும் சம்பந்தமேயில்லை என்கிற அர்த்தத்தில் இருப்பதாக சொல்ல முடியாது. ஆனாலும், ரஜினி தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டிருப்பதில்லை என்கிற உண்மையை மறைமுகமா உளறித் தொலைத்துவிட்டீர்களோ என்று நினைக்கத் தோன்றியது. தனது சுயநலத்துக்காக ரஜினி, தனது ரசிகர்களை தூண்டிவிடுகிறார் என்கிற தங்களின் பழைய வாதம் அவ்வளவு சீக்கிரம் காமெடியாகிவிடக் கூடாது என்கிற கவலைதான்!

ரஜினி பத்திரிக்கையாளர்களுக்கு பணம் வைத்து கவர் கொடுத்ததை மறைக்காமல் நேர்மையாக எழுதிய நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட ரஜினி ஒழுங்காக நடத்தியதில்லை என்று சொல்லியிருப்பதில் என்ன விதமான எதிர்பார்ப்போ?

தமிழுணர்வுகளை வெளிப்படுத்தி திராவிடக் கட்சிகளுக்கு துதிபாடுவதுதான் வோட்டு பெட்டியை நிரப்பும் என்கிற அதே வறட்டு சிந்தாந்தம் தமிழகத்தில் எப்போதும் எடுபடும் என்கிற தங்களின் அதீத நம்பிக்கையை தகர்க்க முடியாததற்கு ஓட்டுப்போடாத 42 சதவீத மக்கள்தான் காரணம். புதிதாக ஓட்டு வங்கி எதையும் உருவாக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக இருந்துவிட்டு போய்விடலாம் என்கிற தங்களின் ஆலோசனையை கேட்கும் பட்சத்தில் விஜயகாந்த் நிச்சயம் இன்னொரு டி.ராஜேந்தர்தான்.

தலித் அமைப்புகளெல்லாம் அரசியல் கட்சிகள் அல்ல என்கிற உங்களின் சமுதாய பார்வையும் இடதுசாரிக் கட்சிகளெல்லாம்தான் ஜனநாயகத்தை வாழ வைக்கின்றன என்கிற தங்களின் வாதமும் தமிழக அரசியலில் இன்னமும் அனாதைகளாகவே இருப்பவர்களுக்கு விஜயகாந்த் மூலமாக ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்யும் முயற்சிகளாகத்தான் எங்களால் பார்க்க முடிகிறது.

விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் மீது உங்களுக்கு கடும் கோபம் இருப்பதாக சொல்ல முடியாது. இருந்தாலும் 1996ல் 'வாழ்விக்க வந்த காந்தி' என்று ரஜினியை மூப்பனார் நினைப்பதாக விமர்சித்த உங்களால் 'மறுபடியும்' காங்கிரஸ்காரர்களை குறை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் சம்பந்தப்பட்டிருப்பவர் தமிழுணர்வுள்ள விஜயகாந்த்தானே தவிர கன்னட ரஜினிகாந்த் அல்லவே!

மூன்றாவது அணிக்கு தலைமையேற்க அதாவது கம்யூனிஸ, தமிழ் ஆதரவாளர்களுக்கு கை கொடுக்க விஜயகாந்த் வந்துவிட்டபோது, அவரது படங்களின் பெண்ணடிமைத்தனமான, பிற்போக்கான, நிலவுடமை கருத்துக்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

விஜயகாந்தின் வித்தியாசமான படமாக, லஞ்ச ஒழிப்பை பற்றிச் சொன்ன ரமணாவை சிலாகிக்கும் நீங்கள் தமிழகம் தோறும் காசு கொடுத்து விஜயகாந்த் மன்றத்திற்கு ஆள் சேர்க்கும் பணியை லஞ்சக் கணக்கில் சேர்க்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறோம்.

அண்ணா காலத்து எம்.ஜி.ஆர் போல காங்கிரஸ§க்கு விஜயகாந்த் இருப்பார் என்கிற ஆரூடம் புதிதாக பிழைக்க வந்திருக்கும் விஜயகாந்த் ரசிகர்களை மிரள வைத்திருக்கும். கருணாநிதியிடம் ஆட்சியை ஒப்படைத்த பின்னர் ஓரங்கட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் நிலைமை விஜயகாந்துக்கு ஏற்படும் என்றால் கவலைப்படாமல் என்ன செய்வது? அப்படிப்பட்ட சமயத்திலும் சினிமாக்காரர்களை காட்டமாகவும் அவர்களது ரசிகர்களை படுமுட்டாளாகவும் புத்திசாலித்தனமாக விமர்சித்துவிட்டு விஜய், தனுஷ் ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளை அலசி ஆராய உங்களால் மட்டுமே முடியும்!

என்றும் அன்புடன்,
ஜெ. ரஜினி ராம்கி
on behalf of www.rajinifans.com