19.8.05

சந்திரமுகி - 130



என் இருதயத்தில் துடிதுடிப்பாய் இருப்பவனும் நீதான்
என்ணம் போல் வெற்றி பெற உழைப்பவனும் நீதான்

என் இறுதி வரை...
கூட வரும்...
கூட்டணியும் நீதான்!


வாழ வைத்த தெய்வங்களான ரசிகர்களுக்கு நன்றி!

4.8.05

சந்திரமுகி நூறாவது நாள்



சந்திரமுகி நூறாவது நாள் விழா சென்னை மாம்பலம் ரயில்வே நிலையம் அருகிலிருக்கும் காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் 24.7.2005 ஞாயிறு அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சென்னையை சேர்ந்த www.rajinifans.com நண்பர்கள் செய்திருந்தார்கள். ஆதரவற்றோர் இல்லத்திலிருக்கும் 91 மாணவ மாணவியர்களுக்கும் 12 முதியவர்களுக்கும் ஸ்வீட், வாழைப்பழத்துடன் கூடிய பிரியாணி வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து அன்பர்களுக்கும் காக்கும் கரங்கள் நிர்வாகிகளுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.