29.12.04

ஜப்பானிலிருந்து கைகொடுக்கும் கை!

தமிழர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஜப்பானிய நண்பர்களுக்கு www.rajinifans.com தனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

********************************************************************************************

VANAKKAM!

sorry,I can't write English well.

All RAJINI FANCLUB JAPAN Members feel sad when we heard TSUNAMI went to
TamilNadu. We always get power from Rajini's movie and TamilNadu people kindness.
Because we want to repay the kindness.



Today We sent contributions money (US$436.50 / about Rs.20000) to
Rajinikanth E-Fans Association's Bank account.

A/C Name : Rajinikanth E-Fans Association
A/C Number : 226 (Current Account)
Bank : Indian Overseas Bank
Branch St. Thomas Mount Branch, Chennai, India

About 1 or 2 weeks after,this contributions money will reach to
Rajinikanth E-Fans Association's Bank account.

We want to heartening for TamilNadu.
My best regards.

from
All RAJINI FANCLUB JAPAN Members
http://www.osaka-rajni.net

anbudan, TETSUNOSUKE

*********************************************************************************************

Japan Rajini Fans Club joins with us

VANAKKAM!

sorry,I can't write English well.

All RAJINI FANCLUB JAPAN Members feel sad when we heard TSUNAMI went to
TamilNadu. We always get power from Rajini's movie and TamilNadu people kindness.
Because we want to repay the kindness.



Today We sent contributions money (US$436.50 / about Rs.20000) to
Rajinikanth E-Fans Association's Bank account.

A/C Name : Rajinikanth E-Fans Association
A/C Number : 226 (Current Account)
Bank : Indian Overseas Bank
Branch St. Thomas Mount Branch, Chennai, India

About 1 or 2 weeks after,this contributions money will reach to
Rajinikanth E-Fans Association's Bank account.

We want to heartening for TamilNadu.
My best regards.

from
All RAJINI FANCLUB JAPAN Members
http://www.osaka-rajni.net

anbudan, TETSUNOSUKE

28.12.04

An Appeal

அன்புடையீர்,

கிழக்கு கடற்கரையோர கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவிட www.rajinifans.com முன்வருகிறது. பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு, உடை ஏற்பாடு செய்யும் முயற்சியில் நமது இணையத்தளமும் சேவை அமைப்புகளுடன் கைகோர்க்கிறது. வழக்கம் போல அன்பர்கள் தங்களால் முடிந்த அளவு பொருளுதவியை செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அவசரம் கருதி ICICI வங்கியின் கணக்கு எண்ணையையும் கொடுத்துள்ளோம்.

lease find the accout details.

ACCOUNT NAME : A.NATARAJAN

ACCOUNT NUMBER : 6026 0150 0485

BANK : ICICI - T.Nagar Branch.

மேற்கண்ட கணக்கில் டெபாசிட் செய்ய முடியாதவர்கள் www.rajinifans.com - Welfare Activities, வங்கி எண்ணுக்கு அனுப்பிவைக்கலாம்.

Demand Draft / Cheque / Bank Deposit / Internet Bank Fund Transfer to :


A/C Name : Rajinikanth E-Fans Association
A/C Number : 226 (Current Account)
Bank : Indian Overseas Bank
Branch St. Thomas Mount Branch, Chennai, India


Postal Addresses:

J.Rajini Ramki,
100/50, II Floor,
Jones Road, Saidapet,
Chennai-15
TamilNadu
Ph - 98400 95437

A.Natarajan,
"Doctors Garden"
1/243, Main Road,
Manapakkam
Chennai- 600116
TamilNadu
Ph- 98404 99887

23.12.04

தில்லு முல்லு - Cine Review

நடிகர்கள்: ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன், சௌகார்
ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன், மாஸ்டர் சந்திரசேகர்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
வசனம்: விசு
இயக்கம்: கே.பாலச்சந்தர்




ஹ்ரிஷிகேஷ் முகர்ஜியின் 'கோல்மால்' இந்திப் படத்தின் தழுவல் தான்
என்றாலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூப்பர் ஸ்டார் படமென்றால் அது தில்லு முல்லு தான். தனது அநாயாசமான நகைச்சுவை நடிப்பின் மூலம் என் மனசுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்ட படம். எந்த வகையிலும் குறை சொல்ல முடியாத படம்.

நகைச்சுவை என்பது ஒரு கடினமான கலை என்று சொல்வார்கள். நகைச்சுவைக்
கதையோ அல்லது குறைந்த பட்சம் ஒரு ஜோக்கோ எழுதிப் ர்த்தவர்களுக்கும்,
நகைச்சுவை நாடகத்தில் நடித்துப் பார்த்தவர்களுக்கும் அந்தக் கஷ்டம் புரியும்.

அந்த வகையில் மிகத் திறமையாகக் கட்டுமானம் செய்யப்பட்ட இந்தப்
படத்திற்குத் தமிழ்த் திரையுலக வரலாற்றில் போட்டி என்ற வகையில் மிகச்
சில நகைச்சுவைப் படங்களே இருக்க முடியும்.

"என்னவும் செய்யலாம், நன்மை தான் முக்கியம்" என்ற கண்ணதாசனின் வரிகளைத்தாரக மந்திரமாக எடுத்துக் கொண்டு, பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படம் பார்ப்பவர்கள் சிரிப்பது தான் அந்த 'நன்மை'. நகைச்சுவைக் கதைகளுக்கெல்லாம் ஆதாரமான ஆள்மாறாட்டக் குழப்பங்கள் தான் இந்தப் படத்திற்கும் கரு. ஆனாலும் சொன்ன விதத்தில் அவ்வளவு சுவாரஸ்யமும் கலக்கலும் சேர்ந்து மறக்க முடியாத ஒரு படமாக்கி விடுகின்றன.

எந்த •ப்ரேமிலும் வருகிற எந்த கதாபாத்திரமானாலும் அதை நகைச்சுவையாகப்
பயன்படுத்தியே தீருவது என்ற வைராக்கியம் படம் முழுக்கத் தெரியும். முதல் காட்சியில் பூர்ணம் விஸ்வநாதனின் மருத்துவ அறையில் வாயில் தெர்மாமீட்டர்வைத்துக் கொள்ளப் போராடும் ஒரு நோயாளி முதல், இறுதிக் காட்சியில் கமல்ஹாசனுடன் (கௌரவத் தோற்றம்) வந்து, அவர் அதிரடியாக தேங்காய்சீனிவாசன் மேல் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் "யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ் யெஸ்" என்று சொல்லி மிரள வைக்கும் நாற்பது ஐம்பது போலி வக்கீல்கள் வரை.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக வரும் தேங்காய் சீனிவாசனுக்கு அப்படி ஒரு
அமர்க்களமான பாத்திரம். "ஏய் ஜினுக்கு ஜிக்கா ஜிங்" போன்ற வசனங்கள்
இல்லாமல் மிகவும் குணச்சித்திரமான பாத்திரத்தில் அரசாங்கம்
நடத்தியிருப்பார். அந்த நேர்முகத் தேர்வு காட்சி பற்றி மட்டுமே
மணிக்கணக்கில் பேசலாம். சுப்பிரமணிய பாரதி என்ற பெயருடன் வருகிற
ஒருவரைக் கண்டு பெருமிதமாக நெஞ்சு விம்முவதாகட்டும், "பலக்கம் இல்லை", "கஸ்டப்படும்" என்று அவர் கூறக் கூற முகம் றுவதாகட்டும், 'எங்கே சொல்லு பார்ப்போம், ஒரு கட்டு சுள்ளியில ஒரு சுள்ளி கோண சுள்ளி' என்று சொல்லக் கேட்டு பதிலுக்கு, "வேண்டாம் சார், ரிஸ்க்கு" என்று பதில் வரவும் மூஞ்சியை ஷ்டகோணலாக்குவதாகட்டும், "ழானாவும் வராது ஷானாவும் வராது. பேரு மட்டும்சுப்பிரமணிய பாரதி!" என்று அங்கலாய்ப்பதிலாகட்டும், பதிலுக்கு, "ஷார்ட் நேம் சுப்பி சார்" என்று அவர் சொல்ல உச்சகட்ட கடுப்பில் "சுப்பியாவது குப்பியாவது, கெட் அவுட்" சொல்வதாகட்டும், அடேயப்பா..!! என்னமாய்க் கலக்கியிருக்கிறார்.

அவரைப் பற்றி அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு வரும் சூப்பர்ஸ்டார்,
'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' என்ற பெயரோடு
நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு அவரை ஒவ்வொரு விஷயத்திலும்
பூரிப்படைய வைத்து 100-க்கு 987 மதிப்பெண்கள் வாங்கி ரொம்ப சுலபமாக
வேலையை வாங்கி விடுகிறார். கதாநாயகனுக்கு வயசான நோயாளி அம்மா,
அடுத்த நிமிடமே கல்யாணம் செய்தே தீர வேண்டிய தங்கை போன்ற தமிழ்த்
திரையுலகின் க்ளிஷேக்களைத் தூக்கியெறிந்து விட்டு சுதந்திரமாக உலவ
விட்ட பாத்திரப் படைப்புக்கு ஒரு சபாஷ் போட வேண்டும். "Black Peleஆ?
அப்படின்னா யாரு?" என்று கேட்டு கால்பந்தாட்டம் பற்றிய தனது
அறியாமை/பிடிப்பின்மையை வெளிப்படுத்தி வேலை வாங்கும் சூப்பர்ஸ்டார்,
கொஞ்ச நாளில் கால்பந்தாட்டப் போட்டி ஒன்றில் நண்பர் குழாம் சூழ ஆஜராகி
இல்லாத கூத்தெல்லாம் அடிப்பது கண்டு தேங்காய் சீனிவாசன் பொங்கியெழும்
போது படம் சூடு பிடிக்கிறது.

அவரிடமிருந்து தப்பிக்க, வேலையைத் தக்கவைத்துக் கொள்ள, அரங்கேறுகிறார்
அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் - சந்திரனின்
சகோதரனாக - மீசை இல்லாமல். இந்திரனே ஒரு தில்லுமுல்லு எனும்போது,
மகளுக்குப் பாடல் கற்றுத் தரும் வேலை கொடுக்கப்பட்டு தேங்காய்
சீனிவாசனால் வீட்டுக்கு வரும் 'இந்திரன்' மாதவியைக் காதலிப்பது
இன்னொரு தில்லுமுல்லு. ஆள்மாறாட்டத்தைக் கண்டுபிடித்து விடும் வீட்டு வேலை செய்யும் சிறுவன் (சூப்பர் ஸ்டார் மாதிரியே தலைமுடியும் ஸ்டைலுமாய் - என்ன ஒரு கே.பி. டச்!!) அதை வெளியே சொல்லிவிடப் போவதாய் மிரட்டிப்

பணம் பறிப்பது இன்னொரு தில்லுமுல்லு. நடிப்பிலே ஆர்வம் கொண்ட 'மிஸஸ்.
மீனாட்சி துரைசாமி' சௌகார் ஜானகியை தனது தாயாக நடிக்க வைத்து
முதலாளியை ஏமாற்றுவது இன்னொரு தில்லுமுல்லு. உச்சகட்டமாய் தேங்காய்
சீனிவாசன் வழிபடும் முருகர் படம் கூட மாறுவேடத்தில் இருக்கும் விநாயகர் என்று ஒரே தில்லுமுல்லு மயம். அத்தனையும் அவ்வளவு ரசிக்கும்படியாக.

மகாத்மா காந்திக்கே சமைத்துப் போட்ட பெருமைக்குச் சொந்தக்காரர் என்று
சௌகார் ஜானகியை தேங்காய் சீனிவாசன் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும்,
அவரோ ஒவ்வொன்றாய் உளறி மாட்டிக் கொண்டு சமாளிப்பதுமாக சுவாரஸ்யமான
அதிர்வேட்டுக்கள். பார்ட்டி ஒன்றில் மிஸஸ் மீனாட்சி துரைசாமியை நேரில்
சந்திக்க நேர்ந்து தேங்காய் சீனிவாசன் அதிர்ந்து போவதும், சௌகார்
ஜானகி மிகுந்த முன்யோசனையுடன் அதிரடி மேல் அதிரடியாகக் கலக்கி விட்டு
அவசரமாக வெளியேறி, வீட்டுக்கு வந்து பின் சுவற்றின் வழியாக குழாயின்
மீதேறி வீட்டுக்குள் நுழைந்து அமைதியின் சொரூபமாய் காத்திருந்து,
கோபத்துடன் உணமையை ஆராய வரும் தேங்காய் சீனிவாசனை பாந்தமாய்
வரவேற்று அவரை அசரடிக்கும் காட்சிக்கு நிகர் ஏது?! "ஏய் தோட்டக்காரா,
உன் மொதலாளி இருக்கானா?" என்று இந்திரன் வேஷத்தில் இருக்கும்
தெனாவெட்டில் சூப்பர்ஸ்டார், தேங்காய் சீனிவாசனைக் கலாய்ப்பதும், ஒரு தம் பத்த வைப்பதும், பதிலுக்கு அவர் கடுப்பாவதும், "உன் அண்ணனுக்காக உன்னை சும்மா விடுறேன்" என்று அறிவிப்பதும், அசட்டையாக அதை 'இந்திரன்'
கண்டுகொள்ளாமல் மேலும் கலாய்ப்பதும் என்று இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கும் காட்சிகள் என்றைக்கும் நெஞ்சை அள்ளும். சூப்பர்ஸ்டாருக்கும்

மாதவிக்கும் இடையிலான காதல் காட்சிகளிலும் பெரிதாகக் குறை கண்டுவிட
முடியாது. ஆசையாக வளர்த்த மீசையை மழித்துக்கொள்ள உட்காரும்போது
சூப்பர்ஸ்டாரின் முகத்தில் வந்து குடியேறும் சோகமான ரியாக்ஷன்கள் அத்தனையும் பவுன் தங்கம்.

எம்.எஸ்.வி.யின் இசையும் அதற்கு கண்ணதாசனின் வரிகளும் பாடல்களை
அழகாக்கியிருக்கும். "ராகங்கள் பதினாறும் உருவான வரலாறு" மிகச் சுகமான ஒரு அனுபவம்.

இதைப் போலவே சூப்பர்ஸ்டார் இன்னும் நிறைய படம் நடித்திருக்கலாமே என்ற
ஏக்கம் மனதுக்குள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு புறம் அதற்கு சமாதானமும் தோன்றுகிறது. ஒரு சந்திரன், ஒரு சூரியன், ஒரு சூப்பர்ஸடார் என்பது போல் ஒரு தில்லுமுல்லு!! அது என்றைக்கும் அவரது திறமைக்கு சாட்சியம் கூறும்.

- Meenaks (m_meenaks@yahoo.com)

20.12.04

பெங்களூரில் பிறந்தநாள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக www.rajinifans.com இணையத்தளமும் பெங்களூர் பாபா ரஜினிகாந்த் நற்பணி மன்றமும் இணைந்து நடத்தும் அன்னதான நிகழ்ச்சி ஆதரவற்றோர் மற்றும் பார்வையற்றோர்களுக்கான ஸ்ரீரமண மகரிஷி அகாடமி, பெங்களூரில் வரும் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெறும். நிகழ்ச்சிக்கு பெங்களூர் வட்டார நண்பர்களை அன்புடன் அழைக்கிறோம்.

Date: 24th December 2004, Friday

Time : 8.00 A.M

Venue : Shree Ramana Maharishi Academy for The Blind
3rd Cross, 3rd Phase, JP Nagar, Bangalore-560 078

17.12.04

‘பாபா’ ஆராய்ச்சி

‘லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாகதான் வருவேன்’ என்று ரஜினி தன்னைப்பற்றி கூறினாலும், அவர் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் லேட்டஸ்டாகதான் இருக்கின்றன.

லயோலா கல்லூரியின் ‘விஷ¨வல் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட்’டின் ‘Factors influencing Film viewing' என்ற ஆராய்ச்சியும் அப்படிதான். ரஜினியின் ‘பாபா’ படத்தை அடிப்படையாக வைத்து இந்த ஆராய்ச்சியை செய்து முடித்திருக்கிறார்கள். பேராசிரியர் ராஜநாயகம் தலைமையில் நாற்பது விஷ¨வல் கம்யூனிகேஷன் மாணவர்கள் அடங்கிய குழு பாபா படம் பற்றிய விஷயங்கள், ரஜினியின் அரசியல் பிரவேசம், ஆன்மிக வாழ்க்கை என எல்லாவற்றையும் சர்வே செய்திருக்கிறார்கள். இதற்கென சென்னையில் எல்லா பகுதிகளையும் கவர் செய்யும்விதமாக பாபா திரையிடப்பட்டிருக்கும் ஐந்து திரையரங்குகளில் இந்த சர்வேயை செய்திருக்கிறார்கள். பாபா படம் பார்த்த இரண்டாயிரத்து ஐநூறு பேர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சி பற்றிய கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள், மாணவிகள் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார்கள்.

‘‘விஷ¨வல் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட் என்பதால் நாங்க பல ரிசர்ச் பண்றோம். அந்த வகையிலதான்ஆராய்ச்சியை பண்ணியிருக்கிறோம். இந்த நேரத்தில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பாபா படத்தை ஆராய்ச்சி செய்வது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம்’’ என்கிறார் லயோலா கல்லூரியின் பேராசிரியரும், ஆராய்ச்சி குழு தலைவருமான ராஜநாயகம்.

கல்லூரி மாணவர்கள், மாணவிகள் என்பதால் கருத்தரங்கில் ரஜினி ஸ்டைலில் இளமைத்துள்ளல் அதிகமாகவே இருந்தது. சாம்பிளுக்கு, ‘அசந்தால் பேசுறது இவங்க பாலிஸி. அசராமல் பேசுறது என் பாலிஸி’ என்று ஒரு இளைஞர். பெண்களைப் பார்த்து சொல்ல செம அப்ளாஸ். இளைய தலைமுறை கலகலப்பாக இருந்தாலும் ரஜினி பற்றிய ஆய்வு என்பதால் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றதை உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஓ.கே. பாபா படம் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் என்னதான் சொல்கின்றன? பாபா படம் பார்க்கும்போது ஆடியன்ஸின் செய்கைகளை கூர்ந்து கவனித்தபோது பல புதிய விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. ரஜினி என்ற சூப்பர்ஸ்டார் செய்யும் எந்த விஷயங்களும் நம்பமுடியாதவைகளாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மக்களிடம் சின்னச்சின்ன மாற்றங்கள். ஒரு பாட்டில் சாராயத்தை ஒரே மூச்சில் ரஜினி குடிப்பதைப் பற்றி மந்திரி மகனுடன் மோதும் வாலிபால் சண்டைக்காட்சியில் உள்ள அதிகப்படியான கிராஃபிக்ஸ் என சில காட்சிகளை சூப்பர் ஸ்டாரே செய்தாலும் அதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளாமல் தங்களது கருத்துகளை ஆடியன்ஸ் முணுமுணுத்திருக்கிறார்கள். ரஜினி விஷயத்தில் ஏற்பட்டிராத புதுமாற்றம் இது.

இது ஒரு பக்கமிருந்தாலும் ரஜினியின் மவுசு இன்னும் குறையவில்லை. உதாரணமாக பாபா படத்தில் ரஜினி நடிக்கமாலிருந்தால் இந்த படத்தை நீங்கள் பார்க்க வந்திருப்பீர்களா என்று ஆடியன்ஸிடம் கேட்டபோது அறுபத்தைந்து சதவீதம் பேர் ‘இல்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள். வெறும் பன்னிரெண்டு சதவீதத்தினர் மட்டுமே ரஜினி நடிக்காவிட்டாலும் பாபா படம் பார்த்திருப்போம் என்று கூறியிருக்கிறார்கள்.

‘பாபா’ படம் பற்றிய ஆராய்ச்சிதான் என்றாலும், ரஜினி என்பதால் அவருடைய பல பரிமாணங்களைப் பற்றி கேள்விகளும், அதுசம்பந்தமாக ரசிகர்கள், பொதுமக்களின் எண்ணங்களும், கருத்துகளையும் பதிவு செய்திருக்கிறார்கள்.

‘பாபா நன்றாக ஓடினால் இதுதான் கடைசிப் படம்’ என்று ரஜினி சொன்னதால், அவருடைய சினிமா வாழ்க்கை பற்றி ரசிகர்கள் தங்களது கருத்துகளை இந்த ஆராய்ச்சியின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். ரஜினி தொடர்ந்து நடிக்க வேண்டுமென்பதே எண்பத்தொரு சதவீத பேரின் கருத்து. ஆசை, இந்த மெஜாரிட்டியில் எழுபத்திநான்கு சதவீதம் ரஜினி நடிகராக தொடரவேண்டும் என்கிறார்கள். மீதமுள்ள ஏழு சதவீதம் நடிகராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஸ்டோரி டைரக்டராக சினிமா வாழ்க்கையை தொடரவேண்டுமென விரும்புகிறார்கள்.

ரஜினி தொடர்ந்து சினிமாவில் நடித்தாலும், அவரை ரசிகர்கள் பழைய ரஜினியை அதாவது பாடஷா போலவோ அல்லது படையப்பா போன்றோ திரையில் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்திருக்கிறது. முக்கியமாக இது ரஜினியின் கவனத்திற்கு ரஜினியை ‘பாட்ஷா’ போன்ற ரோலில் நடிக்க வற்புறுத்தும் ரசிகர்கள் மட்டும் அறுபத்தொரு சதவீதத்தினர் இருக்கிறார்கள். படையப்பா போன்ற ரோலை விரும்பினாலும் அவர்கள் பதினைந்து சதவீதம் மட்டும்தான்.

இப்படி தங்களது சூப்பர்ஸ்டாரை ‘பாட்ஷா’ போல பார்க் விரும்பும் கூட்டம் அதிகமாக இருந்தாலும், ரஜினி டி.வி.க்கு வருவதை ஆதரிக்கும் கூட்டமும் இருக்கிறது. இருபத்தாறு சதவீதத்தினர் ரஜினி டிவிக்கு வந்தால் ரஜினி என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழலால் _ அதற்கும் பதினாறு சதவீதத்தினர் ஒரு ஐடியாவை தங்களது கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது அமிதாப்பச்சனைபோல ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்கலாம் என்பதுதான் அவர்களின் ஐடியா.

அடிக்கடி இமயமலைக்கு போகும் ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற குழப்பம் இன்னும் தொடர்ந்தாலும், ரஜினியின் பிரவேசத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேநேரம் ரஜினியின் ஆன்மிகவாதி இமேஜிக்கு அதிக வரவேற்பில்லை. வெறும் இரண்டு சதவீதத்தினர் மட்டுமே ரஜினி நடிப்பதை விட்டு ஆன்மிகப் பாதையில் செல்வதை விரும்புவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வருவதை விரும்புகிறவர்களில் நாற்பத்தொரு சதவீதத்தினர் அவர் தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்குள் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். பத்தொன்பது சதவீதத்தினர் தொடர்ந்து நடித்தபடியே ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவு தரலாம் என்றும் பன்னிரெண்டு சதவீதத்தினர் ஏதாவது கட்சியிலும் சேரலாம் என்கிறார்கள். மொத்தத்தில் ரஜினி தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதை ஐம்பத்தைந்து சதவீத ரசிகர்கள் ஆதரிக்கின்றனர். இதையே பொதுமக்களில் முப்பத்தொன்பது சதவீத பேர் ஆதரிக்கிறார்கள்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய விஷயத்தில் மிகவும் சுவாரஸ்யமானது. பாபா படம் மூலம் அவருக்கு ஆதரவு அதிகரித்ததுதான். பாபா படம் பார்த்தபின்பு மேலும் ஆறு சதவீத பேர் ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரித்து இருக்கிறார்கள். இப்படி பல விஷயங்களில் பாபா படம் முக்கியமான ரோல் எடுத்து கொண்டாலும், படம் பார்த்த ரஜினி ரசிகர்களில் நாற்பத்தேழு சதவீத ரசிகர்களை மட்டுமே திருப்தியடைய செய்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பாபா’ ரஜினி பற்றிய எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுடன் வெளியாயிருக்கு ஆவரேஜ் படம். அதுவும் ரஜினி ‘காந்தம்’ ஈர்ப்பதால் மட்டுமே.

ரஜினி இதுவரை நூற்றைம்பது படங்களில் நடித்திருந்தாலும், ஒன்பது படங்கள் மட்டும் அதிகமுறை விரும்பிப் பார்த்த படங்களாக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் முதலிடம் பாட்ஷாவுக்கும் இப்படம் மிகவும் அதிகமுறை, மிக விருப்பமுடன் பார்க்கப்பட்ட படமாக தெரியவந்திருக்கிறது. இது தவிர தளபதி, தனிக்காட்டு ராஜா, ராஜாதிராஜா, நல்லவனுக்கு நல்லவன், ஆறிலிருந்து அறுபதுவரை, படிக்காதவன், அண்ணாமலை, முள்ளும்மலரும் போன்ற படங்கள்தான் அதிக வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ரிபிட் ஆடியன்ஸ் வரகாரணம்

ரஜினிக்காக _ 49%
நண்பர்களுக்காக _ 26%
படத்திற்காக _ 20%

பாபா படம் பற்றிய கருத்து

திருப்தி _ 33%
டைம்பாஸ் _ 41%
(மெஜாரிட்டி)
திருப்தி இல்லை _ 26%

பாபா படம் எந்த வகை

ஆன்மிக, மேஜிக்கல் படம் _ 55%
அரசியல் படம் _ 27%
மீதியுள்ளவர்கள் குழந்தைகளுக்கான படம் என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

பாபா இமேஜ் ரஜினிக்கு ஓ.கே.

ரஜினி ரசிகர்கள் _ 47%
பொதுமக்கள் _ 32%

Courtesy : Kumudam Cinema

13.12.04

பிறந்த நாள் கொண்டாட்டங்கள்

சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு www.rajinifans.com - ரஜினி ரசிகர்களுக்கான இணையத்தளம் சார்பில் இலவச ரத்ததான முகாம் சென்னையில் நடைபெற்றது. முகாமில் சென்னையை சேர்ந்த 46 ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர். அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தளபதி சத்தியநாராயணா ரத்ததான முகாமை பார்வையிட்டு விழாவை நிறைவு செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை www.rajinifans.com இணையத்தள நிர்வாகிகளும் ஸ்ரீராமசந்தந்திரா மெடிக்கல் மிஷன் ரத்ததான கிளை அங்கத்தினர்களும் இணைந்து செய்திருந்தனர்.



சூப்பர் ஸ்டாரின் 55வது பிறந்த நாளை ஜப்பானிய ரசிகர்களும் நேற்று கொண்டாடினர். ஓசாகா நகரத்தில் குழுமிய ஜப்பானிய ரசிகர்கள் ரஜினிகாந்த் நலம் பெற சர்வமதப் பிரார்த்தனையும் அதைத் தொடர்ந்து கேளிக்கை விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானிலும் ரஜினி ரசிகர்கள் ரத்ததானம் செய்தனர்.




9.12.04

இரத்ததான முகாம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 55வது பிறந்த நாளை முன்னிட்டு www.rajinifans.com சார்பில் ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் மிஷனின் ஒத்துழைப்புடன் இலவச ரத்ததான முகாம் நடைபெற இருக்கிறது. விபரங்கள் பின்வருமாறு

Venue: Shakespeare Matriculation School,
# 52A, South Sivan Koil Street,
Vadapalani Chennai-600 026

Date: 12th Dec 2004

Timing: 10AM to 1PM


ஆர்வமுள்ள உறுப்பினர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் info@rajinifans.com, தொலைபேசி எண்கள்: ராம்கி (98400 95437) நடராஜ் (98404 99887)

6.12.04

சி.எம். ரஜினி!

சூப்பர் ஸ்டார் "சந்திரமுகி' வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், நடிகர் சங்கம் நடத்திய விழா, அவரது மகள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து அவரது ரசிகர்கள் இன்ட்டர்நெட்டில் சுவையாக விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

"ரஜினி ஃபேன்ஸ் கிளப்'(www.rajinifans.com) என்ற பெயரில் உள்ள வெப்ûஸட்டில் ஜெயலலிதாவை ரஜினி பாராட்டியது குறித்து சுவையான விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு ரசிகர் மட்டும், ""ஜெயலலிதாவை "தைரியலட்சுமி' என்று தலைவர் எப்படிச் சொல்லலாம்?'' என நீண்ட கேள்வி எழுப்ப, அடுத்தடுத்து ரசிகர்கள் அவருக்குக் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் ஜெயலலிதாவைப் பாராட்டி பதில் கொடுத்து வருகின்றனர்.

இந்த வெப்ûஸட்டில் முன்பெல்லாம் ரஜினியை எஸ்.எஸ். (சூப்பர் ஸ்டார்) என்று சுருக்கமாக அழைத்து வந்த ரசிகர்கள், இப்போது அவரை சி.எம். (சந்திரமுகி) என்று அழைப்பது சுவாரஸ்யமான தகவல்

Courtesy : Tamilan Express

C.M Rajini!

சி.எம். ரஜினி!

சூப்பர் ஸ்டார் "சந்திரமுகி' வேலைகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், நடிகர் சங்கம் நடத்திய விழா, அவரது மகள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் குறித்து அவரது ரசிகர்கள் இன்ட்டர்நெட்டில் சுவையாக விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர்.

"ரஜினி ஃபேன்ஸ் கிளப்'(www.rajinifans.com) என்ற பெயரில் உள்ள வெப்ûஸட்டில் ஜெயலலிதாவை ரஜினி பாராட்டியது குறித்து சுவையான விவாதங்கள் எழுந்து கொண்டு இருக்கின்றன. ஒரே ஒரு ரசிகர் மட்டும், ""ஜெயலலிதாவை "தைரியலட்சுமி' என்று தலைவர் எப்படிச் சொல்லலாம்?'' என நீண்ட கேள்வி எழுப்ப, அடுத்தடுத்து ரசிகர்கள் அவருக்குக் கவுன்ட்டர் கொடுக்கும் வகையில் ஜெயலலிதாவைப் பாராட்டி பதில் கொடுத்து வருகின்றனர்.

இந்த வெப்ûஸட்டில் முன்பெல்லாம் ரஜினியை எஸ்.எஸ். (சூப்பர் ஸ்டார்) என்று சுருக்கமாக அழைத்து வந்த ரசிகர்கள், இப்போது அவரை சி.எம். (சந்திரமுகி) என்று அழைப்பது சுவாரஸ்யமான தகவல்

Courtesy : Tamilan Express

3.12.04

மறதி?!

தமிழ் சினிமா பல தருணங்களில் செலக்டிவ் அம்னீஷியாவை நம்பியிருக்கிறது. படங்கலைப் பார்க்கும்போதே ரசிகர்களுக்கு ஓரளவு செலக்டி அம்னீஷியா இல்லையென்றால் பல படங்களைப் பார்த்து முடிக்க முடியாது.

எனவே சினிமக்காரர்கள் நடத்தும் விழாக்களிலும் செலக்டிவ் அம்னீஷியா இருக்கத்தானே செய்யும். ஜெயலலிதாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் சோ-சிதம்பரம் ஆகியோரின் அரசியல் நம்பிக்கை நட்சத்திரமான ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கும் அடிப்படை இதே மறதி தத்துவம்தான். ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த காலத்தில் தான் பேசியது, சவால் விட்டது, மக்களை எச்சரித்தது எல்லாம் நமக்கு மறந்துபோய்விட்டிருக்கும் என்று நினைக்காமல் இப்போது அவர் ஜெயலலிதாவை அஷ்டலட்சுமியின் அருள் பெற்ற முதல்வராக வர்ணித்துப் பேசியிருக்க முடியுமா ? இந்த செலக்டிவ் அம்னீஷியாவின் விசித்திரம்தான் என்னே. போன வருடம், அதற்கு முன் வருடம், ஐந்தாண்டுகள் முன்பு நடந்தது எல்லாம் சுத்தமாக மறந்து போய் விடுகிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னால் ரஜினி பிலிம் சேம்பரில் இன்ஸ்டிட்யூட் மாணவனாக ஜெயலலிதாவை 'சைட்' அடித்தபோது, அவர் அணிந்திருந்த கறுப்பு பார்டர் வைத்த புளூ புடவை, புளூ ரவிக்கை என்று துல்லியமாக எல்லாம் நினைவுக்கு வந்து விடுகிறது.

ரஜினி மட்டும் அல்ல. மற்ற சினிமாக்காரர்களுக்கும் இதே மறதி வியாதிதான். மன்னிக்கவும் அது வியாதி அல்ல வசதி அல்லவா!


- ஞாநி


ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனபிறகு திரைப்பட வர்த்தக சபையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை புரட்சித்தலைவியாக ரஜினி விளித்தது அரசியல்வாதியின் பேச்சு போல இருந்தது என்று சொன்ன (மறுபடியும், தினமணி கதிர், 28.4.1996) ஞாநிக்கு, வீரப்பன் விவாகாரத்தை திறமையாக கையாண்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவை தைரிய லட்சுமியாக ரஜினி புகழ்ந்ததும் அரசியல் பேச்சாகத்தான் தெரியும்.

1996ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எழுந்த ஜெயலலிதா எதிர்ப்பு அலையை தனது அரசியல் செல்வாக்கிற்காக பயன்படுத்திக்கொண்டதை போல இப்போதிருக்கும் ஜெயலலிதா ஆதரவு (?) அலையை தனது அரசியல் செல்வாக்கிற்காக ரஜினி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார் என்று எழுதிவிடாமல் ஞாநி மறந்து போனதுதான் ஆச்சர்யம்!

- ஜெ. ரஜினி ராம்கி

24.11.04

நெல்லை ரஜினி ரசிகர்களின் திருமண வாழ்த்துக்கள் !




திரு. ரஜினிகாந்த் அவர்களின் தவபுதல்வி செல்வி ஜஸ்வர்யாக்கும் ,திரு.கஸ்தூரிராஜா தவபுதல்வன் தனுஸ் கும் 18.11.2004 வியாழன் அன்று நடைபெற்ற திருமணமும் ,திருமண தம்பதிகளும் சிறப்புற ,திருமணம் வாழ்வில் வெற்றிபெற வேண்டி நெல்லை மாவட்ட ரஜினி நற்பனி மன்ற்ம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட ரஜினி மன்ற நிர்வாகி திரு,தாயப்பன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகி எம்.கணேசன் முன்னிலை வகித்தார். ஸிபா மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.இசக்கிமுத்து வற்வேற்று பேசினார்.உடன் ஸிபா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் எம்.கே.எம்.முகமது ஸாபின் மற்றும் தள்வாய் ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டி பேசினர். முன்னதாக ரஜினி ரசிகர் மன்றதினர் கே.பகவதீஸ்வரன்,எஸ்.குமார்,எஸ்.சாந்தகுமார்,பி,ராஜா,ஆர்.முத்துகிருட்டிணன்,எஸ்.கோவிந்தா,ஏ.ராஜ்குமார் மற்றும் என்.ராஜேஸ் ஆகியோர் ரத்ததானம் செய்தனர்

22.11.04

மாறவே மாறாத கலர்!





'கலைஞர்ஜி, எனக்கு எப்பவும் வொயிட் அண்ட் வொயிட்தான் கரெக்டா இருக்கும்..'

'ஆனால், என்னால திண்டிவனத்து மஞ்ச துண்டை கழட்டி வுடவே முடியாதப்பா..!'



- ஜெ. ரஜினி ராம்கி

10.11.04

ரஜினி - தீபாவளி பரிசு

நடிகர் ரஜினிகாந்த் ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தீபாவளி இனாமும் அவர் வழங்கி வந்தார்.

இனாம் வாங்க வருபவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டதால் இந்த வருடம் முதல் தீபாவளி இனாம் பணமாக கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. மாறாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 52 ஆதர வற்ற இல்லங்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டன.

அந்த இல்லங்களில் உள்ள 4000 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று காலை நடந்தது.

மேற்கு மாம்பலம் காக்கும் கரங்கள், சிறுவர் இல்லம், ஆழ்வார் பேட்டை `தி ஆஸ்ரம்', கபாலீஸ்வரர் கோவில் தேவஸ்தானம், கருணை இல்லம், தக்கர்பாபு, திருவான்மிïர் காக்கும் கரங்கள், பாலபவன் ஆஸ்ரமம், அன்பு இல்லம், நல்மணம், பாலவிகார், கில்டு ஆப் சர்வீஸ், டான்பாஸ்கோ அன்பு இல்லம், வள்ளுவர் குருகுலம், ஆனந்த் ஆசிரமம், சேவாமந்திர் உள்பட 52 ஆதரவற்ற இல்ல குழந்தைகளும், ராகவேந்திரா மண்டபத்துக்கு வந்து இருந்தனர்.

அவர்களுக்கு வழங்க பரிசு பொருட்கள் பொட்டலம் பொட்டலமாக மண்டபத்துக்குள் இறக்கி வைக்கப்பட்டு இருந்தன.

ரஜினிகாந்த் சார்பில் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்திய நாராயணா இந்த பரிசு பொருட்களை குழந்தைகளுக்கு வழங்கினார்.

தீபாவளி பட்டாசுகள், இனிப்பு, காரவகைகள், உடை கள் போன்றவைகள் வழங்கப்பட்டன. மதிய உணவும் வழங் கப்பட்டது.

மொத்தம் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

மக்கள் தொடர்பாளர் நிகில், ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

3.11.04

ஒரு விளக்கம்

'ரசிகனின் குரல்', ரஜினி ரசிகர்களின் எண்ணங்களையும் அதற்கான எதிர்வினைகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு இடம் மட்டுமே. www.rajinifans.com யார் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்டு செய்திகளை வெளியிடுவதில்லை. எந்தவொரு தனிநபர் மீதோ அல்லது ஊடகத்தின் மீதோ ரஜினியின் ரசிகர்களுக்கு கோபமோ, வருத்தமோ இல்லை. ரஜினியைப் பற்றி தவறான செய்திகளையே தொடர்ந்து வெளியிட்டு வரும் சில பத்திரிக்கைகளை பற்றிய ரஜினி ரசிகர்களின் ஆதங்கத்தை மட்டுமே இங்கே வெளியிடுகிறோம். அவை யாவும் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தக் கருத்துக்களே. இனம், மொழி, மதம், ஜாதி ரீதியிலான பாகுபாடில்லாத குழுவாக ரஜினி ரசிகர்கள் செயல்பட்டு வருவதை www.rajinifans.com தொடர்ந்து உறுதி செய்கிறது.

ரஜினியை பற்றி மீடியாவில் வரும் செய்திகள் யாவும் யாகூ குழுமத்தில் விவாதிக்கப்படுகிறது. உறுதி செய்யப்பட்ட தகவல்களை மட்டுமே www.rajinifans.com இணையத்தளத்தில் வெளியிட்டு வருகிறோம். ரஜினி ரசிகர்கள் என்கிற வட்டத்தை தாண்டி ரஜினி என்கிற தனிநபரை பற்றிய அனைவரின் கருத்துக்களையும் நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.

www.rajinifans.com ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறது. கிண்டல், கேலி, ஏளனப்பேச்சுக்களை அல்ல!

ஜெ. ரஜினி ராம்கி
for www.rajinifans.com

2.11.04

கொள்கையோடு வாழும் ரசிகர்கள்

தமிழகத்தில் திரு.ரஜினிகாந்தின் கொள்கையோடு வாழும் கோடிகணக்கான ரசிகர்களின் கனிசமானவர்கள் நெல்லை மாவட்டதில் வசிக்கிறார்கள்.ரஜினிரசிகர்கள் டம்பரக்காரர்கள்,உதவும் மனப்பான்மை இல்லாதவர்கள் என்றெல்லாம் பதிரிக்கைகளில் எழுதுகிறார்கள்.சில பத்திரிக்கைகள்,வார இதழ்களும் கூட எழுதி கொண்டுதான் இருக்கிறார்கள்,ரஜினி கண்ணத்தில் கை வைத்தாற்போல் இருக்கும் போட்டோவை இதழ்களின் முகப்பில் அச்சிட்டு அதிக லாபம் ஈட்டவர்கள் என்பதை மற்ந்து விட்டார்கள் போலும்...

நெல்லை மாவட்டம் வசுதேவ நல்லூர் பகுதி ரஜினிகாந் ரசிகர் நற்பனி மன்றதின் சார்பில் கடையநல்லூரில் இருக்கும் (மனைகாவலா துவக்கபள்ளி)க்கு ரஜினிரசிகர்மன்ற்ம் சார்பில்,பள்ளி தலைமையாசிரியை தலைமையில் ,ரஜினிகாந்த நற்பனி மன்றதலைவர் ஜி.ராமர் அவர்கள் பள்ளிக்கு சுவர் கடிகாரம் வழங்கினார்.இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி மற்றும் ஆசிரியை கலா,கற்பகவல்லி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.மன்ற்நிர்வாகிகளும் கலந்து கொண்டு நன்றி தெரிவித்தனர்.

அதேபோல் மேலப்பாலையம் இந்து நடு நிலைப்பள்ளி நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந் நற்பனி மன்ற நிர்வாகிகள் ஜி,ராமர் மற்றும் கடையநல்லூர் சக்திவேல்,சந்திரன்,மணிகண்டன்,கண்ணன்,ஆறுமுகசாமி,செல்லப்பா அனைவரும் கலந்துகொண்டு
பள்ளி தலைமை ஆசிரியை சிவனான சுந்தரி முன்னிலையில் சுவர் கடிகாரம் மற்றும் எழுபது பேனா க்கள் வழங்கப்பட்டன.விழாவின் முடிவில் ஆசிரியரியை ,ஆசிரியர்கள் நன்றி தெரிவிதனர்.

ரஜினியை போல் உதவும் எண்ணம் கொண்ட ரசிகர்களை வாழ்த்துவோம்.
பிற நடிகர்களின் ரசிகர்களை போல் நூறு ரூபாய் கொடுத்தாலும் சும்மா போஸ் கொடுப்பதை போல் கொடுப்பவர்கள் அல்ல ரஜினி ரசிகர்கள்.

அப்படி ரஜினி ரசிகர்கள் கொடுதாலும் அதை முதல் பக்கதில் போட்டு லாபம் தேடுவதற்குதான் ,
ரஜினி ரசிகர்கள் உதவுவதில்லை என்று உலருகிறார்கள்

நெல்லை பாபா
தென்காசி,
மேலப் பாட்டாக்குறிச்சி

1.11.04

சந்திரமுகிக்காக சமாதான படலம்-விகடன்

எந்த செய்தியையும் எப்படியும் மற்றி எழுத முடியும் என எங்களால் மட்டுமே(விகடன்) முடியும் என நிருபிக்க சந்திரமுகிக்காக சமாதான படலம் தயாரித்துள்ளீர்கள். ரஜினி எதை செய்தாலும் குற்றம் காண முயற்ச்சித்து தோற்கிறீர்கள். ரஜினியின் ஆண்மீக ஈடுபாடு அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க அதையும் அரசியல் ஆக்கப் பார்க்கிறீர்கள்.

ரஜினி எதிர்க்கும் போது கூட சமமான பலம் உள்ள எதிரியை தான் எதிர்த்து பழக்கம். 1996 ஆம் ஆண்டு ஜெயலலிதாவை எதிர்க்கும் போது ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வர். ஒரு முதல்வரையே எதிர்த்த துணிச்சல் உள்ளவர் ஒரு ஜாதிக்கட்சி தலைவருக்கு பயப்படுவாரா. அப்படி பயந்திருந்தால் ரஜினி இந்த தேர்தல் சமயத்தில் ராமதாஸ் அவர்களை வன்முறையின் ராஜா என் கூறியிருப்பாரா.

தேர்தல் சமயத்தில் ராமதாஸ் மகன் அன்புமணி ரஜினியின் மக்கள் செல்வாக்கை கண்டு பயந்து ரஜினியுடன் பேசியாச்சு சுபம் என்று கூறியதை மறந்து விட்டீர்களா? ரஜினிக்கு எதிரியிடம் எதிர்த்து நின்று ஜெயித்து தான் பழக்கம் .இப்படி அரசியல்வாதிகளை போல் காலில் விழும் பழக்கம் இல்லை. ரஜினி எதிர்க்கும் அளவுக்கும் இன்னும் ராமாதாஸ் வளரவில்லை.

ரஜினி பணத்திற்க்காக படம் எடுப்பவர் அல்ல. கோடிக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளுக்காக எடுக்கப்பட்ட படம். அதை பிரச்சனை வந்தால் காப்பாற்றும் சக்தி ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் உண்டு. ரஜினி படத்திற்கு பிரச்சனை வரலாம் என்று தெரிந்து தான் வினியோகஸ்தர்கள் சிவாஜி புரடக்சனில் காத்து கிடக்கிறார்கள். காரணம் மற்ற நடிகர்களைபோல் பிரச்சனை வந்தால் ஓடி ஒழிவதை போல் இல்லாமல் பிரச்சனைகளை வெற்றி கொள்ளும் சக்தி ரஜினிக்கு உண்டு என்று அறிந்ததால்.

ரஜினி படத்தை ஒரு ஏரியாவிற்கு 2 நிமிடம் என்ற கணக்கில் 20 நிமிடத்தில் விற்று விடுமளவுக்கு வினியோகஸ்தர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ராம்குமார் அவர்கள் பேட்டி கொடுத்ததை படிக்க மறந்து விட்டீர்களா.

பங்காரு அடிகளார் பஞ்சாயத்து பண்ணும் சாமியார் என்ற அர்த்தத்தில் இதை எழுதினீர்களா அல்லது எதை எழுதினாலும் ரஜினி பதில் அறிக்கை கொடுத்து நம் பத்திரிக்கையை பரபரபாக்க மாட்டேன்கிறார் என்ற ஆதங்கத்தில் எழுதினீர்களா என்று தெரியவில்லை. எந்த அர்த்ததில் எழுதினாலும் தனி நபர் விமர்சனம் செய்வது தரமான விகடனுக்கு கரும்புள்ளி தான்.

Raja Ramadass
On Behalf of www.Rajinifans.com

வாழ்க ரஜினி! வாழ்க மணமக்கள்!

சூப்பர் ஸ்டார் வீட்டு திருமணம் பற்றி பலவிதமான செய்திகள் எல்லா நாளிதழ்களிலும் வருவதை கண்டுக்கொண்டிருக்கிறோம். நம்மில் சிலருக்கு இதனால் கருத்து வேறுபாடுகளும் இங்கு நிலவியது. நானும் முதலில் இந்த திருமண செய்தியை அறிந்ததும் சந்தோசமடைந்தேன். சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் ஆராய்ந்து பேசுவதிலிருந்தே நாமும் சூப்பர் குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் என்ற உணர்வு நம்மிடம் தோன்றுகிறது. சூப்பர் ஸ்டாருக்கோ அல்லது அவரின் குடும்பத்தினருக்கோ எந்த களங்கமும் வந்துவிடக்கூடாது என என்னும் பல ரசிகர்களின் உணர்வுகள் இங்கே காண முடியும். பத்திரிக்களில் வெளிவந்த செய்தி கண்டு நாம் வேதனையடைந்ததற்கு காரணம் இது நம் தலைவரையும் பாதித்திருக்கும் என்பதால்தான். இதைப் போன்ற பலவிதமான செய்திகள் சூப்பர் ஸ்டாரை பாதிக்கிறதோ இல்லையோ நம்மை வெகுவாய் பாதிக்கிறது. தன் மகளின் திருமணத்தை நிச்சயமாய் ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் இருந்திருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. தன் மகளின் காதலன் வயதில் இளையவன் என்பதை எந்த தகப்பனால் தான் ஏற்றுக்கொள்ள முடியும்? வயது வித்தியாசம் மாறி நடந்த திருமணங்களை நாம் உதாரணம் காட்ட முடியும். ஆனால் இதில் சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. ஒரு வேளை ரஜினி ஒரு சாதாரண சிவாஜிராவாக இருந்திருந்து இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் இத் திருமணத்தை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்பது என் கருத்து. பத்திரிக்கைகளாலும், தொலைக்காட்சிகளாலும் தன் புகழுக்கு ஏற்படும் இக் களங்கத்த்தை போக்கவே மனப்பூர்வமான சம்மதம் தெரிவித்துவிட்டார். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த நிலையை அடைந்திருக்கும் சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கையில் நாம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறோம். சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா அவர்கள் இந்த காதலை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, பத்திரிக்கைகளில் இதைப்போன்ற செய்தி வருவதற்கு வழியில்லாமல் செய்திருந்தால் எல்லோர் மனதிலும் எந்த நெருடலும் இருந்திருக்காது. குடும்பத்திற்காக எதையும் தியாகம் செய்யலாம், ஆம் காதலையும் கூட. காதலின் உண்மை வெற்றி தியாகம் செய்வதால் மட்டுமே. நாடே நல்ல மனிதன் என மதிக்கும் தம் தந்தையின் நற் பெயரும், புகழும் முக்கியம் என நினைத்திருந்தால் இதைப்போன்ற சம்பவங்களை அவரால் தவிர்த்திருக்க முடியும். இந்த நிகழ்வுகளால் என்றோ ஒரு நாள் நம் தலைவன் மனதில் சிறிய வலி ஏற்பட்டிருக்க கூடும் என்பதில் அச்சமில்லை. அந்த சிறிய வலி என்னுள்ளும் இன்று ஏற்பட்டதால் இந்த கடித்தை எழுதியிருக்கிறேன். பிழையிருந்தால் மன்னிக்கவும்.

வாழ்க ரஜினி! வாழ்க மணமக்கள்!

உண்மை ரசிகன்

ரவிசங்கர்

20.10.04

அழிக்கப்பட்டான் அரக்கன்!

தமிழக அதிரடிபடையின் அதிரடி முயற்சியில் அரக்கன் வீரப்பன் அழிக்கப்பட்டான். வீரப்பனை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இவன் காட்டுக்குள் நடத்தி வந்த தர்பார் முடிவுக்கு வந்தது.

இவன் செய்த கொலைகள், கொள்ளைகள் கணக்கில் அடஙகாதவை. ஆனால் இப்படி பட்ட கொலைகாரனை தன் ஜாதியை (மரம் வெட்டுர ஜாதியா?) சேர்ந்தவன் என்ற காரணத்திற்காக வீரத்தமிழன் என்றார் Dr. ராமதாஸ். நக்கிரன் கோவாலு வீரப்பனின் கொ.ப.செ. அளவுக்கு புகழ்ந்து தள்ளினார். சன் டீவி இதிலும் தன் வேலையை காமித்து வீரப்பனையும் ஜெயலலிதாவை திட்ட வைத்து சாதனை புரிந்தது.

கொள்ளையனயும், கொலைகாரனையும் வீரனாக சித்தரித்தவர்களுக்கு மத்தியில் ரஜினி காந்த் அவர்கள் வீரப்பனை அழிக்கப்பட வேண்டிய அரக்கன் என்றார். வீரப்பனை வீரத்த்தமிழனாக சித்தரித்து வைத்திருந்த ராமதாஸால் இதை பொறுக்க முடியவில்லை. (இதனால் பாபா படத்திற்கு பிரச்சனைகளை ஏற்படுத்தியும் அதன் மூலம் ரஜினியால் வன்முறையின் ராஜா என் வாங்கி கட்டிக் கொண்டது யாவரும் அறிந்ததே).

ரஜினி சொன்னது போல் வீரப்பன் என்ற அரக்கன் அழிக்கப்பட்டான். இப்படி பட்ட கொலைகாரர்களை கைது செய்து அவனுக்கும் VIP போல் பாதுகாப்பு கொடுப்பதை விட அழிப்பதே மேல். குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு பயமாக, பாடமாக அமையட்டும்

அவன் உயிரோடு இருக்கும் போது அவனை வீரனாகாவும், நல்லவனாகவும், தியாகியாகவும் சித்தரித்தவர்கள் இன்று அவன் கொல்லப்பட்ட பிறகு அழித்தது சரி என்றும்,கொலைகாரன் என்றும் ஒப்புக் கொண்டு அறிக்கை விடுகின்றனார். நல்ல வேளை எந்த கட்சியும் அரைக்கம்பத்தில் கொடியை பறக்க விட்டு அனுதாபம் தெரிவிக்க வில்லை.

என்ன வீரப்பனை கைது செய்து இருந்தால் இந்த ஆட்சியில் கருனாநிதியை பற்றியும் அடுத்து கருனாநிதி ஆட்சியைப் பிடித்தால் ஜெயலலிதாவை பற்றியும் அவன் அறிக்கை விடும் காமெடியை பார்த்திருக்கலாம். MLA அல்லது MP தேர்தலில் வேட்பாளாராகி ஓட்டு கேட்க வரும் காட்சியையும் பார்க்க முடியாமல் போய்விட்டது.

Raja Ramadass
http://parattai.blogspot.com/

9.10.04

அரசியலில் போட்டி

இப்போது, நடக்கும் அரசியல் எண்டெர்டெயின்மெண்டை, மக்கள் தினம்தோறும்
வேடிக்கையாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வரிப்பணத்திலிருந்து, செலவு செய்து, இந்த தேர்தல் கேளிக்கூத்து
நடந்து கொண்டு இருக்கிறது.

நாளைய பிரதமர், நாட்டின் தலைமை யார் என்று யாருக்கும் தெரியாது.

வேடிக்கையான கூட்டணிகள். தேர்தலுக்குப் பிறகு, நடக்கும் வேடிக்கை
இன்னும் சுவராசியமாக இருக்கும்.

ஆக, தற்போது உள்ள அரசியல் அமைப்பு, மிகவும் பழமையானது.
அது, அந்தக்கால சுதந்திரப் போராட்ட தியாகிகளை, மனதில் வைத்து
உருவாக்கப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு, கான்ஸ்டிட்யூஷன், கடவுள் நமக்கு அளித்த
பகவத் கீதையோ, பத்துக் கட்டளையோ அல்ல.

ஆக, இந்திய அரசியல் அமைப்பை மாற்றி அமைத்தால், தற்போது நடக்கும்
வேடிக்கை அரசியலை நிறுத்தி விடலாம்.

ஆக, மேடை கோணல்தான். அதனால், நல்லவர்கள் அரசியலில்
இறங்க யோசிக்கிறார்கள். மேடையை சரி செய்ய வேண்டும் என்றால்,
அது டெல்லியில் செய்ய வேண்டிய காரியம்.

எப்போதுமே, தமிழ்நாடு, அரசியலில், டெல்லியைவிட தெளிவாக இருக்கும்.

டெல்லியில், கோமாளிகள் மிக அதிகம்.

ஆக, அரசியல் அமைப்பை மாத்தி அமைப்பது என்பது, இப்போது
நடக்ககூடிய காரியம் அல்ல.

அலை, என்னைக்கு ஓய்வது. நாம் எப்பொழுது குளிப்பது.

கோணல் மேடையிலேயே, எப்படி திறமையாக, நல்ல அரசியலை
நடத்துவது என்று பார்ப்போம்.

கமல், ரஜினி...

இது, மலேசியா ஸ்டார் நைட்டில், ரசிகர்கள் கேட்ட கேள்வி.

ஏன் சார், நீங்க இரண்டு பேரும்,
ஒன்னா சேர்ந்து நடிக்க மாட்டேங்கிறீங்க?

கமல், ரஜினியைப் பார்த்து, "என்ன, சொல்லிடலாமா?"
என்று கேட்டுவிட்டு, சொல்கிறார்.

இங்கேதாங்க அந்த முடிவு எடுத்தோம். இரண்டு பேரும்,
ஒரே படத்தில் சேர்ந்து நடித்தால், இருவரது வளர்சியும் பாதிக்கப்படும்.

இருவரும் தனித்தனியாக படங்கள் செய்தால், ரஜினிக்கும் கமலுக்கும்
ஒரு போட்டி உருவாகும். இருவரும் வளரமுடியும். மக்களுக்கும்
அருசுவை உணவு அருந்தியது போல் இருக்கும்.

என்ன அருமையான, தெளிவான முடிவு.

பீட்டர் டெரக்கர், அதைத்தான் சொல்கிறார். ஒரு
நிறுவனத்துக்குள்ளேயே, போட்டியை வளர்த்து விடுங்கள்.

ஒன்றை ஒன்று அழிக்கும் என்ற பயம் வேண்டாம். இரண்டும்
செழிப்பாக வளரும்.

டொயோட்டா நிறுவனம், லெக்சஸ் நிறுவனமும், ஒரே மரத்தின்
இரு கிளைகள். இரண்டும் செழிப்பாக வளர்கிறது.

கமல், ரஜினிக்கு முன்னால், சிவாஜி, எம்.ஜி.யார் ரசிகர்கள்
இருந்தார்கள். அவர்கள், ஒருத்தர் போஸ்டர்மேல், அடுத்தவர்
சாணி அடித்து, ஆரோக்கியமற்ற ரசிகர் கூட்டத்தை
வளர்த்து விட்டனர்.

கமல் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் நல்ல ஆரோக்கியமான
செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

கமலும், ரஜினியும் அன்று, மலேசியாவில் எடுத்த முடிவை,
இப்பொழுது அரசியலில் எடுத்தால்...

மற்ற அனைத்து அரசியல்வாதிகளும், சினிமாவில் சான்ஸ் கேட்டு
ஓடிவிடுவார்கள்.

ஆபிரகாம் லிங்கன், மக்களின் வசதி கருதி, தன்னை எதிர்த்து
போட்டியிட்டவரை அழைத்துக் கொண்டு, ஒன்றாக பயணம் செய்து,
மக்கள் முன்னிலையில், இருவரும் விவாதம் செய்தார்கள்.

அதுபோல, கமல் ரஜினி, இருவரும் எல்லா தொலைக்காட்சிகளிலும்
தோன்றி, மக்களின் கேள்விகளுக்கு பதில் சொன்னால்...

மக்களும், இருவரில் ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால், கமல், தமிழ் சினிமாவை, மற்ற உலகத்திற்க்கு,
எடுத்து செல்லும் நாட்கள், அதிகமில்லை.

அது ஒரு இன்ச் தூரம் தான். கமல், உலக மக்கள், தமிழ் திரைப்படத்தை
பார்த்து, ரசிக்க வைத்து விடுவார்.

ஆக, அவர் திரையில், தன் பணியை தொடரட்டும்.

நம்ம ரஜினி...

Courtesy : www.muthamil.com

அடுத்த சாதனையை நோக்கி...

மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது...

சினிமாவிலே நிறைய சாதிச்சாச்சு.

திரும்ப திரும்ப, அதேயே, எத்தனை நாளைக்கு பண்றது.

சினிமாவிலே வேலை செய்றது, இப்ப பர்டனா இருக்கு.

நாம பண்ற வேலை, Funஆ இருக்கனும்.

வேற ஏதாவது பண்ணனும் என்று நினைக்கிறேன்.

எனக்கு, சேலன்ஜ் பிடிக்கும்.

ரொம்ப சேலன்ஜ் உள்ள காரியம்மா பண்ணனும் என்று நினைக்கிறேன்.

அரசியலா என்று நீங்கள் கேக்கலாம்.

இருக்கலாம்.

ஆண்டவன் விருப்பம் அதுதான்னா, அரசியலா இருக்கலாம்.

சினிமாவிலே, நிறைய இளைய தலைமுறைகள் வந்துட்டாங்க.
வந்து நல்லா பெர்பார்மன்ஸ் பண்றாங்க.

எத்தனை நாள், நான் ஆடுறது. நானும், உங்களை மாதிரி
அங்கே உக்காந்து, இளைய தலைமுறையின் திறமையை பார்த்து
ரசிக்க ஆசை.

ரஜினியின் ஆட்சி...

ரஜினி அரசியலில் வரணுமா?

இருப்பவர்கள் பத்தாது என்று,
ரஜினியும், தினம் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து,
தோளில் ஒரு கலர் துண்டு போட்டு,
கட்சி ஆரம்பித்து,
உறுப்பினர்களை சேர்த்து,
வட்டம், மாவட்டம் என கட்சி நிர்வாகிகளை நியமித்து,
ஊருக்கு ஊர், தெருக்கு தெரு, கொடிக்கம்பம் நட்டு,
எதிர்க்கட்சிகளை திட்டி, மேடை போட்டு பேசி,
கண்ட கட்சிகளோடு கூட்டணி வைத்து,
முதலில் சில தொகுதிகளில் ஜெயித்து,
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து,
ஆளுங்கட்சி விழுந்தவுடன், அடுத்த தேர்தலில் ஆட்சி பிடித்து,

... வேண்டாம் அப்பா அரசியல், என்று ஓடிவிடுவார் ரஜினி.

அவர் செயல் வீரர்.
அரசியல் செய்வது, ரஜினியின் நோக்கம் அல்ல.

மக்களுக்கு, நல்ல ஆட்சி தருவதுதான், ரஜினியின் நோக்கம்.

ஒரு பத்து வருடம், ரெண்டு டெர்ம், தமிழ்நாட்டு முதலமைச்சர்.

அடுத்த பத்து வருடம், ரெண்டு டெர்ம், இந்தியாவின் பிரதமர்.

இருபது வருட ப்ளான்.

இப்ப இருக்கிற மக்கள் செல்வாக்கை வைத்து, தமிழ்நாட்டு முதலமைச்சராவது.

தமிழ்நாட்டு முதலமைச்சராக இருந்து சாதிப்பதைப் வைத்து,
இந்திய அளவில், மக்களின் நன் மதிப்பை பெற்று,
பத்து ஆண்டு கழித்து, பாரதப் பிரதமாராவது.

ரஜினிக்கு போதுமா, சேலன்ஜ்.

ரஜினி, அடுத்த முதலமைச்சராக ஆவதற்க்கு, தேவை என்ன?

கட்சியா? கூட்டமா, கூட்டணியா? இல்லை.

ரஜினி, அடுத்த முதலமைச்சராவதற்க்கு தேவை,

234 M.L.A க்கள்.

ஆக, ரஜினி முதல்வராவதற்க்கு, 234 சட்டசபை உறுப்பினர்கள்
இருந்தால் போதும்.

234 சட்டசபை உறுப்பினர்களுக்காக
பல லட்சம் உறுப்பினர்களை சேர்த்து, கட்சி ஆரம்பித்து,
அந்த லட்சம் பேர்களை, எப்படி சமாளிக்கிறது.

ஆக, ரஜினியின் டீமில் தேவையான ஆட்கள், 234 சட்டசபை உறுப்பினர்கள்,
சில சிந்தனையாளர்கள், பப்ளிசிடி ஆட்கள்...

ஆக வேண்டியது 300 பேர்.

ஒரு 300 பேரை வைத்து, ரஜினி டீம் அமைக்க வேண்டும்.

அந்த 300 பேரை தேர்ந்தெடுப்பதில்தான்,
ரஜினியின் வெற்றியும் தோல்வியும் நிர்ணயிக்கப்படும்.

300 பேரில், ஒவ்வொரு துறைக்கும், இரண்டு பேர் அமைச்சராக,
ஒருவர் கல்வி அமைச்சர், மற்றவர் துணை கல்வி அமைச்சர் என்று
தேர்வு செய்ய வேண்டும்.

அமைச்சர் போக, மீதி அனைவரும், சட்டசபை உறுப்பினர்கள்.
எந்த பதவியும் கிடையாது.

டீம் தேர்வு செய்தவுடன், 300 பேருக்கும், நல்ல பயிற்சி.

இந்திய வரலாறு,
உலக வரலாறு,
இந்திய சுதந்திரப் போராட்டம்,
மக்களாட்சி மலர்ந்த கதை,
மேனஜ்மேண்ட்,
பொது நிர்வாகம்,
பேச்சு திறமை...

ரஜினி, டீவியில், இவர்கள் எல்லாம் என் வேட்ப்பாளர்கள்.
இவர்களூக்கு நீங்கள் போடும் ஓட்டு, நீங்கள் எனக்கு போடும் ஓட்டு.
நான் ஊர் ஊராக வந்து, உங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.
ரோடுகளில், மக்கள் கூட்டத்தை கூட்டி, போக்குவரத்துக்கு
இடையூரு செய்ய விரும்பவில்லை.

உங்களுக்கு, ஊழல் இல்லாத ஆட்சியை கொடுக்க,
எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளியுங்கள்.

234 பேரும் வெற்றி.

ரஜினி முதல்வராக பதவி ஏற்ப்பு.

இது புது டெக்னிக் இல்லை.
பிள்ளையார், அந்தக்காலத்திலேயே செய்து வெற்றி பெற்றுவிட்டார்.

திருவிளையாடலில், அம்மை அப்பனை சுத்திவந்து பழத்தை பெற்று கொண்டார்.

...

கதை நல்லா இருக்கு.

ஆரம்பத்திலே...

வீர சிவாஜி வேடத்தில் ரஜினி, ஆங்கிலேயரை எதிர்த்து...

அப்புறம், மராட்டிய மண்ணில் இருந்து...தன்ஞாவூர்க்கு லிங்க் பண்ணி,

அந்த வம்சத்தில் வந்த சிறுவனை காண்பித்து...

பிறகு ஒரு இளைஞன், பெங்களூரில் பஸ்ஸ’ல் கண்டக்டராகி...

சென்னை வந்து, பாலச்சந்தர் சாருகிட்டே...

இன்னைக்கு முதல்வராயிட்ட மாதிரி...

அடுத்த ரஜினி படத்தின் கதை என்று ஒதுக்கி விடவேண்டாம்.

இது சினிமா கதை அல்ல.

இன்று எழுதப்பட்ட, நாளைய தமிழகத்தின் வரலாறு.



S.பாலச்சந்திரன்.
balachandran@muthamil.com

Courtesy : www.muthamil.com

30.9.04

மணிச்சித்திரதாழ்" தான் "சந்திரமுகியா"?

தினத்தந்தியில் தலைப்புச்செய்தி என்றவுடன் பேப்பரை வாங்கி விட்டேன்.தினத்தந்தியின் இலவச இணைப்பான குடும்ப மலரில் இப்படம் மலையாள சூப்பர்ஹிட் படமான "மணிச்சித்திரதாழ்"ன் தழுவல் என குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இதை நான் நேற்றுவரை படிக்கவில்லை. என்னுடைய அலுவலக நண்பர் குடும்ப மலரை படித்து விட்டு , படித்த செய்தியை அரைகுறையாக நினைவில் வைத்து ரஜினி டிரகுலா படத்தில் நடிக்கிறார் என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார். பாபாவில் "கடவுள்", சந்திரமுகியில் " டிரகுலா" வா? என நான் அதிர்ந்து போனேன். பின்பு வீட்டிற்கு சென்று குடும்ப மலர் பார்த்த பின்புதான் தெரிந்தது ம்ணிச்சித்திரதாழ்" தான் என் நண்பர் குறிப்பிட்ட படம் என்று. இன்றைய தினமணியும் இச்செய்தியை வெளியிட்டு உள்ளார்கள்.

"மணிச்சித்திரதாழ்" பாசில் இயக்கத்தில் மோகன்லால், சோபனா, சுரேக்ஷ்கோபி நடித்து வெளியான மலையாளப்படம். மோகன்லாலிற்கும், சோபனாவிற்கும் (??) இப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. மர்மதேசம் சீரியல் மூலமாக தமிழகத்தில் பிரபலமடைந்த "split personality" பிரச்சனையை அடிபடையாக கொண்ட கதை. மிகவும் விறுவிறுப்பாகவும், சஸ்பென்சுடனும் காட்சிகள் நகரும். அமானுடக் கதைகளையும் மெல்லிய மானுட உணர்வுகள் இழையோட சொல்லும் வல்லமை பாசிலுக்கே உரியது. தமிழில் பாசில் எடுத்த "கிளிப் பேச்சு கேட்க வா" படத்திலும் பாசிலின் இவ்வல்லமையை காணலாம். படத்தில் தமிழ் பாடல்களும் , பாசுரங்களும் உண்டு. "ஒரு முறை தழுவ மாட்டாயா" என்ற பாடலுக்கு ஷோபனா நடனமாடும் பிண்ணனியில் அமைக்கப் பட்ட கிளைமாக்ஸ். அனைவரும் நிஜமாகவே சீட்டின் நுனிக்கோ, வீட்டிலிருந்து பார்த்தால் சோபாவின் நுனிக்கோ வந்து விடுவோம்.

மோகன்லால் இடைவேளைக்கு முந்திய காட்சியில்தான் அறிமுகமாவார்.மனோத்தத்துவ நிபுணராக கலக்கும் மோகன்லால் , பேய்க்கு பயப்படும் சீனிவாசனுடன் செய்யும் காமெடி- கலக்கல். இன்றும் ஏசியாநெட்டில் போட்டால் தவறாது இப்படத்தை பார்த்து விடுவேன். இப்படத்தை மாற்றி சந்திரமுகி என எடுக்கிறார்கள் என்றால் எனக்கு பயமாகத்தானிருக்கிறது.இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடி கிடையாது. டூயட்கிடையாது.இடைவேளையின் போதுதான் அறிமுகமாவார். சண்டைக்காட்சிகள் கிடையாது . மோகன்லாலின் பாத்திரத்தை ரஜினி செய்யும் பட்சத்தில், எவ்விதமான மாற்றங்களை திரைக்கதையில் செய்யப் போகிறார்கள்.

இப்படத்தை தமிழில் எடுப்பதைக் குறித்தும், அதில் ரஜினி நடிப்பதைக் குறித்தும் இரு கேள்விகள் என்னுள் எழுகின்றன.

ஒன்று, கேரளப் பிண்ண்னியில் அமைந்ததால், அமானுட ரீதியான கதைகளில் ஒன்ற முடிந்தது. இதை தமிழகப் பிண்ணனியில் அமைக்கும் போது எந்த அளவு மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்? தமிழகத்தில் அமானுடப் படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை.

இரண்டு ரஜினிக்காக மோகன்லால் பாத்திரத்தில் மாறுதல் செய்யப்பட்டு, டூயட், சண்டை என்று சேர்க்கப்பட்டால் கதைக் கலன் சிதைந்து விடும். இதை எவ்வாறு தவிர்ப்பார்கள்?"தேன்மாவு கொம்பத்து" என்ற படத்தை சிதைத்துத்தான் "முத்து" எடுத்தார்கள். ஆனால் முத்துவை ரஜினி பட இலக்கணத்திற்கேற்ப மாற்ற முடிந்தது.

இப்படிப்பட்ட கதைக்கு ரஜினி ஒப்புக்கொள்வது ஆச்சரியமாக இருக்கிறது. வித்தியாசமான ரோல் செய்ய அவர் ஆசைப்படுகிறாரா? அல்லது 'அன்புள்ள ரஜினிகாந்தில் வந்ததைப் போல, கதாநாயகத் தன்மையற்ற ரோலை செய்ய விரும்புகிறாரா?

இது எப்படிப்பட்ட படம் என்பதை ரஜினி முதலிலேயே தெளிவுபடுத்தி விடுவது நல்லது. அதற்குள்ளாகவே யாஹ¤ குழுமத்தில் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்து கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ரஜினி ரசிகனும், ரஜினிக்கென்று மானசீக கதை வைத்திருப்பதாக எனக்கு படுகிறது. ரஜினி கால்க்ஷ£ட் கொடுத்தால் இயக்குநராகவே மாறி விடுவார்கள்.

படம் இப்படித்தான் இருக்கும் எனத் தெளிவாகச் சொல்லி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை கட்டுப்படுத்துவது நல்லது. பாபாவையே சாமி படம் என்று சொல்லியிருந்தால் கட் அவுட்டிற்கு பாலூற்றி படம் பார்த்து வந்திருப்போம் என்றார் சக ரசிகர் ஒருவர். சமூகப் படமாகவும் இல்லாமல், சாமிப்படமாகவும் இல்லாமல் கலவையாக இருந்ததால் கலங்கிப் போனார்கள் ரசிகர்கள்.( 300 ரூபாய் கொடுத்து வாங்கிய டிக்கெட்டை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்).

மணிச்சித்திரதாழ் தான் சந்திரமுகியாக மாறுமா? என்பதில் இன்னும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. வாசு ரஜினிக்காக வேறு ஏதாவது கதை பண்ணுவார் என நம்புகிறேன்.

அப்படி இல்லாத பட்சத்தில், விபரீதமான முயற்சி என்றே ரஜினி ரசிகனான எனக்கு படுகிறது."ஆயிரம் ஜென்மங்கள்" போல ஒரு படத்தை தற்பொழுது ரஜினி வெளியிட்டால் எடுபடுமா?

விடை ரசிகர்கள் கையில்

Rajkumar
Courtesy : http://poetraj.blogspot.com/

29.9.04

ரஜினிகாந்த் கற்றுத்தந்த நல்ல வழிகள்!

சில படித்தவர்களும், அரசியல்வாதிகளும் சினிமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் அமைப்பது ஒரு சமுதாய குற்றம் என்ற பிரம்மையை ஏற்படுத்த தொடங்கியிள்ளார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு உறுப்பினராய் இருந்து அழிவதை விட ஒரு நடிகனுக்கு ரசிகனாய் இருப்பது குற்றமில்லை. இந்த விசயத்தில் ரஜினிகாந்த்தை பொறுத்தவரை தன் ரசிகர்களை வன்முறைக்காகவும், தனக்கு சாதகமாவும் பயன்படுத்துவதில்லை. அன்றிலிருந்து, இன்றுவரை ரசிகர்களுக்கு அவர் சொல்லித் தந்தது தனக்கு ரசிகனாய் இருப்பவன் முதலில் தன் குடும்பத்திற்கு நல்ல மகனாய் இருக்க வேண்டும் என்றுதான். சிறிய வயதிலேயே அரசியல் எனும் சூதாட்டத்தால் படிப்பையும் இழந்து, நல்லதோர் வாழ்க்கையும் இழந்து தவிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் கணக்கிலடங்காதது. இன்றைய ரஜினி ரசிகர்களை பொறுத்தவரை நன்றாக சிந்திக்கும் பருவத்தை அடைந்தவர்கள். குடும்பத்தை காப்பாற்றுமளவிற்கு தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை ரஜினியின் படங்கள் வருகிறது. அந்த நாட்களில் அவரின் நடிப்பைக் கண்டு எல்லோரும் ரசித்து மகிழ்கிறார்கள். மனதை மகிழவைக்கும் கலைஞனை வாழ்த்துவதும், ரசிப்பதும் நம் இரத்தத்தில் கலந்த ஒன்று. படம் பார்த்தோம், ரசித்தோம், குடும்பத்தை கவனித்தோம், தங்களால் இயன்ற அளவிற்கு சமுதாயப் பணிகளை செய்தோம் என்றிருந்த ரசிகர்களை வன்முறை பாதைக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய அரசியல்வாதிகள். தொண்டை கிழிய மேடைக்கு மேடை பொய் தவிர வேறு எதும் பேச தெரியாத அரசியல்வாதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் நோட்டிஸ் அடித்தும், கட் அவுட் வைத்தும் அலங்கரிக்கும் அவலத்தைவிட, தங்களின் சொந்த வருமானத்தில் சுயநலமின்றி ரஜினிக்காக நோட்டிஸ் அடிப்பது எந்த விதத்தில் குற்றமாகும்? தவறான பாதைக்கு இளைஞர்களை இழுத்து செல்லும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில் மதம், இனம் பார்க்காமல் தியானம் செய்யுங்கள் கோபத்தை அடக்கி ஆளலாம் என அறிவுரை சொல்லும் ரஜினிகாந்தின் பின் செல்வது எப்படி தவறாக முடியும்? உயிர் நீத்த தொண்டர்களின் சமாதிகளில் ஈரம் உலரும் முன்னே கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு முன்னர், தன் கொள்கை இறந்தாலும் பரவாயில்லை தன் ரசிகர்கள் காக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு கருதி அதிமுகவிற்கும் அதன் கூட்டணிக்கும் ஆதரவாய் தன் ரசிகர்களை தேர்தலில் செயல்படுத்திய ரஜினிகாந்த்தின் நேர்மைக்காக அவருக்கு ரசிகராய் இருப்பவர்கள் பெருமைப்பட வேண்டும். காவிரிக்காக அமைதியான முறையில் ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்த போது தர்மம் காக்கப்பட்டது, பாபா படத்திற்காக பாமகவின் வன்முறையை சட்டத்தின் வழியே சந்திப்பேன் என கூறியபோது சட்டம் காக்கப்பட்டது, முடிவாய் ரசிகர்கள் பாமவினரால் தாக்கப்பட்ட நேரத்தில் ஜனநாய முறையில் தேர்தலில் எதிர்ப்பு தெரிவிக்க சொன்னபோது ஜனநாயகம் காக்கப்பட்டது. ரஜினிகாந்த்தின் நடிப்பை மற்றும் ரசித்து யாரும் ரசிகராகவில்லை அவரின் நேர்மையான மனதை புரிந்தும்தான் ரசிகர்களாய் இருக்கிறார்கள். விடிகின்ற ஒவ்வொறு பொழுதிலும் எங்கேயாவது ஒரு ரசிகன் தன் சமுதாயப்பணிகளை செய்துக்கொண்டுத்தான் இருக்கிறான். ஒரு மூன்று வயது சிறுமிக்கு தக்க சமயத்தில் இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றி வந்த செய்தியை ரஜினிகாந்த் அறிந்தால், கண்டிப்பாய் ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாயின் மகிழ்வை ரஜினிகாந்த அடைவார். எல்லா ரசிகர்களும் தன் குடும்பத்தையும் காத்து, இந்த சமுதாயத்துக்கு தன்னாலான உதவிகளை செய்யவேண்டும் என்கின்ற எண்ணத்தை தன் ரசிகர்களுக்கு தந்த இந்த நல் மனிதனுக்காக நம் வாழ் நாள் முழுதும் விளப்பரம் செய்வதும், பேனர் கட்டுவதும் தவறில்லை. இருள் சூழும் இடமெல்லாம் ரஜினி ரசிகர்கள் ஒரு சிறிய மெழுகுவர்த்தியாய் சமுதாய பணிகள் மூலம் வெளிச்சத்தை கொண்டுவருவார்கள் என்பதில் ஐய்யமில்லை. ரஜினிகாந்த் சொல்லித் தந்த அகிம்சை எனும் மந்திரத்தை என்றும் கடைபிடித்து, இந்த சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதே ஒவ்வொரு ரசிகர்களின் லட்சியமாக இருக்க வேண்டும்.

மா. இரவிசங்கர்
On Behalf of wwww.rajinifans.com

28.9.04

புதிய் வேகத்துடன், புதுப் பொலிவுடன் - சந்திரமுகி

தமிழ்புத்தாண்டை புத்துணர்ச்சியாய் கொண்டாட சூப்பர் ஸ்டார் தந்த பரிசுதான் சந்திரமுகி. வரும் புத்தாண்டிலிருந்து அடுத்த புத்தாண்டு வரை சந்திரமுகி நாடெங்கும் பேசுப்படட்டும். குழம்பிய கண்ணோட்டத்தில் பார்த்தால் சூப்பர் ஸ்டாரின் பாதை குழப்பமாகத்தான் தெரியும். தெளிவான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, சூப்பர் ஸ்டாரின் பாதை தெளிவாய் தெரியும். குழப்பத்திலிருந்து மீண்டு தெளிவான பாதைக்கு சில நண்பர்களை அழைக்கிறேன். என் கூட இருக்கிற கூட்டம் அன்பால சேர்ந்த கூட்டம் என்பதிற்கிணங்க ஒன்றுபட்டு நிற்போம். சூப்பர் ஸ்டார் படத்தின் தொடக்க விழா, பொறாமையாய் அலைந்துக்கொண்டிருக்கும் கூட்டத்திற்கு முடிவு விழாவாக அமையட்டும். நம் படைத்தோழர்களே தயராயிருங்கள். நாடங்கும் விரைவில் பறக்கப் போகும் நம் கொடியை காணத் தயராயிருங்கள். ரஜினி ரசிகர்கள் என நாம் கூறி பெருமைப்படுவதை விட எல்லா மக்களும் நம்மைப் பார்த்து பெருமைப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதின் உண்மையை அறிந்திடுங்கள். கஷ்டகாலம் முடிந்துவிட்டது இனி வரும் நாளெல்லாம் நம் வெற்றி நாள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

புதிய் வேகத்துடன், புதுப் பொலிவுடன்

மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

24.9.04

ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய தாஜ்மகால்

திருநெல்வேலியை மாவட்டமாக கொண்ட தென்காசிக்கு சற்று அருகே புல்லுக்காட்டு வலசை எனும் கிராமம் உள்ளது. அந்த கிராமத்திற்கு அதிகமான பேருந்து வசதிகள் கிடையாது. என்னுடைய பனிரெண்டாவது வயதில் நான் அந்த கிராமத்திற்கு செல்ல நேரிட்டது. அங்கே பேருந்து நிற்கும் இடத்தில் ஒரு சிறிய நிழற்குடை ரஜினிகாந்த் ரசிகர்களால் அந்த கிராம மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்ததை காண நேர்ந்தது. அந்த நிழற்குடையின் திறப்பு விழாவிற்காக நம் தளபதி சத்திய நாராயணா அவர்கள் வந்திருந்தார்கள் என்பதையும் நான் அறிந்தேன். கிராமத்திய இளைஞர்களை சமூக நலனில் அக்கறையுள்ளவர்களாக மாற்றியதில் ரஜினிகாந்த் அவர்களுக்கு அந்த கிராமமே நன்றிப்பட்டிருக்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்ய முடியாததை ரஜினிகாந்த் ரசிகர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணி எல்லா ரசிகர்களும் பெருமைப்பட வேண்டும். ரஜினிகாந்த்தின் திரைப்படங்கள் இளைய சமுதாயத்தை பாதிப்பதாக குறை சொல்லும் அரசியல்வாதிகளுக்கு, இந்த கிராமத்து இளைஞர்களின் சமூக சேவை ஒரு பாடமாக அமையட்டும். பல வருடங்கள் கழித்து மீண்டும் அந்த கிராமத்திற்கு சென்ற வருடம் டிசம்பரில் சென்றிருந்தேன். அந்த கிராமத்திற்கு அடியெடுத்த முதலே என் மனம் அந்த நிழற்குடையை பார்க்க துடித்தது. அழகாய் வெள்ளையடித்தபடி, ரஜினி ரசிகனான எனை வரவேற்றபடி அமைந்திருந்தது அந்த நிழற்குடை. அதைக் கண்டவுடன் மனதிலே இனம் புரியாத சந்தோசம். சற்றே அந்த நிழற்குடைக்குள் இளைபாறிவிட்டு திரும்புகையில் என் மனதோடு சேர்ந்து, என் நிழலும் என்னுடன் வர மறுத்தது. ரஜினிகாந்த் அவர்களின் மேல் உள்ள எல்லையில்லா அன்பால் அமைக்கப்பட்ட அந்த நிழற்குடை, என் நிழலுக்கு உணர்ச்சிகளை சொல்லித் தந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அது நிழற்குடை அல்ல, அந்த கிராம மக்களுக்காக ரஜினி ரசிகர்கள் உருவாக்கிய தாஜ்மகால் என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை வருடங்கள் கழித்தும் அதை சரியாக பராமரிப்பதை கண்டபோது ரஜினிகாந்த் ரசிகனாய் இருப்பதில் பெருமையடைந்தேன். அதே சமயம் எங்கோ ரஜினியின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்டு என் மனம் திரும்பிப்பார்த்தது. அக்கம் பக்கம் விசாரித்ததில் ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் விழா அங்கே கொண்டாடிக் கொண்டிருப்பதாக தெரியவந்தது. எல்லையில்லா இன்பத்திற்குள் என் மனது சிக்கி தவித்த நாளாய் அன்றைய தினம் அமைந்தது. படித்த இளைஞர்களின் மனதிலும், படிக்காத இளைஞர்களின் மனதிலும் சமுதாய சேவைகள் எனும் விதையை விதைத்த ரஜினிகாந்த் அவர்களின் இதைப்போன்ற சாதனைகள் தமிழ்நாட்டின் ஒவ்வொறு கிராமத்திலும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. தன் எல்லா ரசிகர்களையும் சாதனையாளர்களாக மாற்றுவதுதான் ரஜினிகாந்த் அவர்களின் லட்சியமோ? தான் சாதித்து, தனை சார்ந்தவர்களையும் சாதனையாளர்களாய் உருமாற்றிய ரஜினிகாந்த் அவர்களின் லட்சியம் தொடரட்டும். ரசிகர்களின் முயற்சியில் சமுதாய கடமைகள் நம் மண்ணில் செழிக்கட்டும். சாதனைகளை வாழ்த்துவோம்! சாதனையாளர்களை வாழ்த்துவோம்!

குறிப்பு: இந்த கிராமத்தில் மட்டுமல்ல இதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் இதைப் போன்ற நிழற்குடை ரஜினிகாந்த் ரசிகர்களால் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

16.9.04

தேசிய நீர்வழித் திட்டம்

சென்னையின் தண்ணீர்க் கஷ்டத்துக்கு என்னதான் தீர்வு? கடல் நீரைக் குடிநீராக்குவது ஒரு வழி. லிட்டருக்கு நூறு ரூபாய் ஆகும். இன்னொரு வழி, மிகப்பெரிய ஐஸ்கட்டிப் பாளங்களை கப்பல் மூலம் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து மாதா மாதம் கொண்டு வருவது. இதற்கு மைனஸ் 140 டிகிரியில் கொண்டுவரக் கூடிய ராட்சஸ டாங்கர் கப்பல்களை கொரியா சாம்சங்கிடமிருந்து வாங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டே ‘நதிகளை இணைக்க ஏதாவது செய்யுங்கள்’ என்று ஆணையிட்டுவிட்டது. அப்துல் கலாமின் 2020 கனவும் இஃது! நமது அரசியல் சட்டத்தில் (ஆர்ட்டிக்கிள் 246, ஏழாவது ஷெட்யூல்) இதற்கு இடம் இருக்கிறது. சுதந்திரம் வந்ததிலிருந்து நதிகளை இணைப்பதற்கான பற்பல திட்டங்களை யோசித்து யோசித்து கமிட்டி அமைத்து, கூடிப்பேசி இதுவரை 15,678 பக்கம் ரிப்போர்ட்டுகள் எழுதிவிட்டோம். கடைசியாக தேசிய நீர்வழித் திட்டம் ( நேஷனல் வாட்டர்வேஸ் ப்ராஜெக்ட்) என்ற அமைப்பில் இன்ஜினீயர் ஏ.சி.காமராஜ் அவர்கள் முன்வைக்கும் திட்டம், மனமிருந்தால் பணமிருந்தால் சாத்தியம் என்று தோன்றுகிறது.

இந்தத் திட்டத்தில், பிரம்ம புத்ராவிலிருந்து தாமிரபரணி வரை அனைத்து நதிகளையும் கால்வாய்கள் மூலம் இணைத்து, அவற்றில் வெள்ளம் வரும்போது மட்டும் வழியும் தண்ணீரை அங்கங்கே சேமித்து, கால்வாய்களை ஏற்ற இறக்கமின்றி சமதரையில் அமைத்து, எங்கே வெள்ளமோ அங்கிருக்கும் உபரிநீரைப் பற்றாக்குறைப் பகுதிக்கு இருதிசையிலும் அனுப்பும்படியான ஏற்பாடு... கர்நாடகா தண்ணீர் கொடுக்க மறுத்தாலும், பருவமழை அதிகமாகி அணைகளில் வெள்ளம் வழிந்து தரம்சிங்கையும் மீறி, மேட்டூருக்கு இந்த வருஷம் தண்ணீர் வந்ததுபோல!

600 மீட்டரிலிருந்து துவங்கி நாடெங்கிலும் பெரும்பாலும் 300 மீட்டரிலேயே, சம தளத்திலேயே சுமார் 15,000 கிலோமீட்டருக்குக் கால்வாய்கள் அமைக்கவேண்டும் (இது துணைக்கண்டத்தின் ஏற்ற இறக்க ஜியோகிரஃபியில்கூட சாத்தியம் என்கிறார் காமராஜ்). போக்குவரத்து, மின்சாரம், குடிதண்ணீர் என மூன்று பிரச்னைகளையும் தீர்க்கலாம்என்கிற பேராசைமிக்க திட்டம்இது. வருஷா வருஷம் கடலில் விரயமாகப் போய்ச்சேரும் வெள்ளப்பெருக்கில் முப்பது விழுக்காட்டை இவ்வாறு தேக்கினாலே போதுமாம். அதிகம் செலவாகாது. ஐந்து லட்சத்து அறுபதாயிரம் கோடி ரூபாய் இருந்தால், பத்து வருஷத்தில் கட்டிவிடலாம் என்கிறார் காமராஜ். நான் நூறு ரூபாய் அனுப்பலாம் என்றிருக்கிறேன்.

Courtesy : Sujatha @ Ananda Vikatan

13.9.04

சரணடைந்த கஜேந்திரா

கள்ளக்குறிச்சியில் திருமணவிழாவினை தலமையேற்க சென்ற விஜயகாந்த் மணமக்களை வாழ்த்திய கையோடு கொஞ்சம் அரசியல்வாதிகளையும் கிண்டிவிட்டு வேடிக்கை பார்த்ததின் விளைவு இன்று கஜேந்திரா பட தயாரிப்பாளரை பாமக தலைவரிடம் சரணடையவைத்துவிட்டது. கண்ணீர் வராத குறையாய் துரை அளித்த பேட்டியிலிருந்து அவரின் பாதிப்பை புரிந்துக்கொள்ளலாம். பாமகவின் வன்முறை பற்றி முழுதாய் அறிந்தபோதிலும் விஜயகாந்த் அரசியல் பேசியது வீண் வம்பை விலை கொடுத்து வாங்கியது போல் ஆனது. பத்திரிக்கைகளில் பரபரப்பாய் செய்தி வரவேண்டும் என்கின்ற ஆவல் அவரை பேசத்தூண்டியிருக்கலாம் என்பது என் எண்ணம். கோடிக்கணக்கில் பணத்தை வட்டிக்கு புரட்டி படம் எடுத்த துரை அவர்களின் அணுகுமுறை 100 சதவீதம் சரியானதுதான். தர்மம் காக்க கஜேந்திரா புறப்பட்டுவிட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். விஜயகாந்த்தின் தர்மம் கஜேந்திரா திரைப்பட தயாரிப்பாளரை கூட காக்க முடியாமல் போனது. இந்த தயாரிப்பாளரின் நிலையை சிறிதும் சிந்திக்காமல் பேசிய இவரின் அரசியல் ஒத்திகை தேவைதானா? மேடை பேச்சோடு முடித்துக்கொள்ளாமல் ஜூனியர் விகடனில் அளித்த பேட்டியிலும் பாமகவை இவர் தீண்டியது அவசியம்தானா? இவரைப்பற்றி புகழ்ந்த பத்திரிக்கைகள் இன்று இவரின் நிலையை இகழ்ந்து பேசுகிறது என்பதை விஜயகாந்த் தெரிந்து கொள்வாரா? தன் பலம் தனக்கு தெரியும் என தன்னைப்பற்றி தானே புகழ்வதே விஜயகாந்த்தின் பலவீனம். ரஜினிகாந்த்தைப்பற்றி தவறாய் பாமக தலைவர் பேசியபோதும் அவர் கடைபிடித்தது அமைதி, கடைபிடிக்க சொன்னதும் அமைதி. பாபா திரைப்படம் திரையிடவிடாமல் நான்கு மாவட்டங்களில் தடுக்கப்பட்ட போதும் ரஜினிகாந்த் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மட்டுமே தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியிருந்தார். தன்னால் மக்களும், ரசிகர்களும் பாதிப்படையக் கூடாது என்பதுதான் அவரின் விருப்பம் என ஆணித்தரமாக சொல்பவர். இதை கருத்தில் கொண்டுதான் காவிரி தண்ணீர் வேண்டி அவர் நடத்திய உண்ணாவிரதமும் அரசாங்க விடுமுறை நாட்களில் நடத்தப்பட்டது. ரஜினிகாந்த் விசயத்தில் வன்முறைக்கு முழு காரணம் பாட்டாளி மக்கள் கட்சிதான். ஆனால் விஜயகாந்த் விசயத்தில் வன்முறைக்கு முழுக்காரணமும் விஜயகாந்த் மட்டுமே. பாபாவின் தயாரிப்பாளராய் ரஜினிகாந்த் இருந்ததனால் பாமகவின் வன்முறை விநியோகஸ்தர்களை மட்டுமே பாதித்தது. இதற்கு ரஜினிகாந்த்தே பொறுப்பேற்று பணத்தை திருப்பி செலுத்தி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் அனைவரையும் சந்தோசமடைய செய்தார். இதே நிலையை விஜயகாந்த்தும் கடைப்பிடித்திருப்பாரேயானால் தயாரிப்பாளர் துரை அவர்களுக்கு இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்காது. இந்த படத்திற்காக விஜயகாந்த் தனது சம்பளப் பணத்தை கொஞ்சமும் பாக்கி வைக்காமல் வசூல் செய்துவிட்டதாக தயாரிப்பாளர் நொந்து போய் பேட்டியளித்திருக்கிறார். தயாரிப்பாளர் துரை அவர்கள் பாமக தலைவர் ராமதாஸை சந்தித்தது விஜயகாந்த் ரசிகர்களுக்கும், விஜயகாந்த்துக்கும் கடும் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. தயாரிப்பாளர் துரை விஜயகாந்த்தை அவமானப்படுத்திவிட்டதாக விஜயகாந்த் ரசிகர்கள் ஆவேசமாய் பேட்டியளித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ராமாதாஸ¤டன் சரணடைந்ததால் விஜயகாந்த் ரசிகர்களே கஜேந்திரா திரைப்படத்தை பார்க்காமல் தயாரிப்பாளர் துரைக்கு பாடம் கற்பிக்க நேரிடலாம். இப் படத்தை ஓட விடாமல் பாமக செய்ய நினைத்த யூகங்களை விஜயகாந்த் ரசிகர்களே இப்போது செய்ய நினைத்திருப்பதை கண்டு, பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் மனம் மட்டுமே தற்போது சந்தோசத்தால் பூத்திருக்கின்றது.

மா. இரவிசங்கர்
On behalf www.rajinifans.com

8.9.04

மரியாதை குறையாமல் இருந்தாலே எங்களுக்கு போதும்

வணக்கம்

பல கோடி மக்களை தங்களுடைய கண்ணிலிருந்து வரும் காந்தம் தங்களை பற்றி நான் தெரிந்துகொள்ள ஆரம்பித்தது 1995 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த பொழுது தான்,அதாவது முத்து படம் வெளியான நேரத்தில்; ஏனென்றால் அந்த நேரத்தில் தான், அரசியல் வல்லுனர்களின் கண் உங்கள் மேல் திரும்பியது.அதுவரை மற்ற நடிகர்களை போல் தான் தங்கள் படங்களையும் பார்த்திருக்கிறேன்.அதன் பிறகு தங்களின் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.தங்களின் ஆரம்ப கால திரைப்பட வாழ்க்கையை பற்றி சிலர் கூறினார்கள்.தவறு செய்வது மனித இயல்பு, செய்த தவறையே திரும்ப திரும்ப செய்பவன் மிருகம், அதை திருத்தி கொண்டு வாழ்பவன் தான் மனிதன்.அந்த வகையில் நீங்கள் ஒரு மாமனிதர் என்பதை அறிந்தேன். ஆனால் நான் தங்களின் ஆரம்ப கால கட்ட திரைப்பட வாழ்க்கையை பற்றி கவலைபடவில்லை.ஏனென்றால் முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை விட இப்பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்பதை தான் அறிய விரும்பினேன். “நதி மூலமும் ரிசி மூலமும் பார்க்க கூடாது” என்பார்கள் நான் உங்களை ரிசியாகவே பார்க்கிறேன்.

தங்களுடைய அடுத்த திரைப்படம்; எப்போது வரும் எப்போது வரும் (ஜக்குபாய்) என்று இப்போதும் ஆவலுடன் காத்திருப்போர் கோடிக்கணக்கானோர்.1995 ஆம் ஆண்டு முத்து படம் வெளியான நேரத்தில் நம் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி பலருக்கு எழுந்தது. அந்த கேள்விக்கு பெரும்பாலானோர் அளித்த பதில் சூப்பர் ஸ்டார்(இதே வாய்ப்பு முன்பு ஒரு முறை மக்கள் திலகத்துக்கு கிடைத்தது. அதை அவர் தக்க வைத்து கொண்டார்). ஆனால் தங்களின் அறிக்கை பல கோடிக்கணக்கான ரசிகர்களையும், மக்களையும் ஏமாற்றம் அடைய செய்தது. “அரசியல் ஒரு சாக்கடை” புது கட்சி ஆரம்பித்தால் புது இரத்தம் பாய்ச்ச முடியாது, அதே பழைய ஊழல் நிறைந்த ஆட்சி தான் நடத்த முடியும.; ஆதலால் புது கட்சி ஆரம்பிக்க விரும்பவில்லை என்று தாங்கள் அன்று அறிக்கை விடுத்தீர்கள். நீங்கள் அன்று அவ்வாறு அறிக்கை விடுத்ததற்கு காரணம் இருந்தது, ஏனென்றால் அன்றைய அரசியல் வாதிகளில் பலர் நீங்கள் புது கட்சி ஆரம்பித்தால் பஸ்சில் சீட் பிடிக்க துண்டு போடுவதை போல் தங்கள் கட்சியில் தாவுவதற்கும் தயாராக இருந்தார்கள்.

அன்றைய சூழ்நிலையில் தாங்கள் புது கட்சி ஆரம்பிக்காதது எங்களுக்கு சிறு வருத்தமே இருந்தாலும், ஒரு வேளை நீங்கள் புது கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்று(நிச்சயமாக வெற்றி பெற்றிருப்பீர்கள்)முதல்வர் ஆகியிருப்பீர்கள். நீங்கள் மட்டும் நல்லவராக இருந்தால் போதாது.உங்களது கட்சியில் உள்ள ஏதாவது அமைச்சர்கள் தவறு செய்தால் அது நிச்சயமாக உங்களை பாதித்திருக்கும். யார் ஆட்சி நடத்தினா என்ன யார் வந்தாலும் “அதே பழைய குருடி கதவை திற” என்ற நிலைமை தான் என்று மக்கள் உங்களை தவறாக பேசி இருக்க கூடும். நீங்கள் முதல்வர் ஆகாவிட்டாலும் பரவாயில்லை உங்களை பற்றி மக்கள் வைத்திருக்கும் அந்த மரியாதை குறையாமல் இருந்தாலே எங்களுக்கு போதும்.இருந்தாலும் ஒரு வேளை உங்களால் தமிழகத்தை பொன்வளமாக மாற்றுவதற்குரிய வாய்ப்பு 1996 ஆம் ஆண்டு கிடைத்தும் அதை நழுவ விட்டீர்களோ என்ற தாகமும் உள்ளது.
இப்படிக்கு உங்கள் ரசிகன்
மணிமுத்தாறு ப.ராதாகிருஷ்ணன்.

7.9.04

ஜக்குபாய் ஒரு பார்வை

தேர்தல் நேரத்தில் ரசிகர்களை பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது இப் படத்தின் அறிவிப்பு. இறைவா நண்பர்களிடமிருந்து எனை காப்பாற்றிவிடு, எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன் எனும் வாசகத்தோடு கையில் ஆயுதம் தாங்கி, அநீதியை அழிக்க சூப்பர் ஸ்டார் புறப்படுவது போல் வந்த விளம்பரம் எல்லோர் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. தேர்தல் முடிவுக்கு பின்னே ஜக்குபாய் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் மங்களகரமான நாள் இல்லததால் இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக சூப்பர் ஸ்டாரே குமுதம் இதழுக்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் ஆகஸ்டு மாதத்தில் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதின் காரணம் அதிகாரபூர்வமாக வெளிவராதது ரசிகர்களுக்கு மிகுந்த குழப்பத்தை தினம், தினம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பற்றி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த ஒரு அறிவிப்பும் சூப்பர் ஸ்டார் தரப்பிலிருந்து வராததுதான் இவ் வதந்திகளுக்கு பெரிய காரணம். ஜக்குபாய் படத்தின் கதாநாயகியில் தொடங்கி, படத்தின் கதை வரை எல்லா தினசரி நாளிதழ்ளும், பத்திரிக்கைகளும் எழுதும் வதந்திகள் கணக்கிலடங்காதது. படப்பிடிப்பு தொடங்காத நிலையில் இத் திரைப்படத்தை பற்றி வரும் செய்திகளை பார்க்கும்போது ஜக்குபாய் படத்திற்கு விளம்பரம் செய்யவேண்டிய அவசியம் நேரிடாது எனத்தான் தோன்றுகிறது. ஜக்குபாய் திரைக்குவந்து கலக்கப்போவது தைப்பொங்கள் தினத்திலா அல்லது தமிழ்புத்தாண்டிலா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. எது எப்படியோ வெகு விரைவில் ரசிகர்களுக்கு ஒரு பெரிய நற் செய்தியை சூப்பர் ஸ்டார் அறிவிப்பார் என்பது நிச்சயம்.
மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

6.9.04

ராமதாஸம் சினிமாவும்

"சினிமாவை எதிர்த்து குரல் கொடுத்தால் வேறு வேலை இல்லையா என்கிறார்களே? " என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாதந்திர கூட்டத்தில் பேசும்போது டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். டாக்டர் சினிமா நடிகர்கள் தவிர மற்றப் பிரச்சனைகளைப் பற்றியும் கொஞ்சம் பேசினால் யார் அவரை குறை கூறப் போகிறார்கள்? தன்னுடைய சுயவிளம்பரத்திற்காகவும், சில நடிகர்களின் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமலும் தான் டாக்டர் ஐயா, சினிமா நடிகர்களான ரஜினி மற்றும் விஜயகாந்தை கண்டபடித் திட்டிக்கொண்டிருந்தார்.. திட்டிக் கொண்டிருக்கிறார்.

ஏதோ ரஜினியால் தான் தமிழக மக்கள் அனைவரும் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொண்டதைப் போலப் பேசியே பாபா திரைப்படத்தை ஓடவிடாமல் தகராறு செய்தார். அவரது நல்ல நேரமோ, ரஜினியின் கெட்ட நேரமோ பாபா படுத்துவிட்டது. விட்டேனா பார் என்று அடுத்ததாக விஜயகாந்த் மீது தாக்குதல் கணையைத் தொடுத்தார். விஜயகாந்தின் படத்தை ஓடவிடாமல் செய்ய திருட்டு வி.சி.டி தயாரித்து வினியோகம் செய்வோம் என்று பகிரங்கமாக அவரது தொண்டர்கள் அறிவித்தனர். டாக்டர் ஐயா மட்டுமல்லாது மற்றொரு டாக்டரும் ஏதோ பெரிய சமூக சிந்தனை உள்ளவரைப் போல கமல் படத்தின் தலைப்பை மாற்றவேண்டும் என்று போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றார். இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுவது எல்லாம் பரபரப்பு.. அவ்வளவே. கொஞ்ச நாளில் தாங்கள் என்ன பேசினோம் என்ற நினைவே இவர்களுக்கு நிச்சயம் இருக்காது.

நடிகர்களை மையமாக வைத்து விளம்பரம் தேடும் இவர்களைப் போன்ற தலைவர்கள் நாட்டில் நடக்கும் மற்ற பிரச்சனைகளை கண்டுகொள்வதே கிடையாது என்பதே நிதர்சனமான உண்மை. நதிநீர் இணைப்புப் பிரச்சனை, காவிரியில் நீரைத் திறந்துவிடும் பிரச்சனை, வழக்கறிஞர்கள் பிரச்சனை என்று நாட்டில் எத்தனை பிரச்சனைகள்? அவை எல்லாம் டாக்டர் ஐயாவின் கவனத்திற்கு வராமல் போய்விட்டதே. இதை என்னவென்று சொல்ல? பாபாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தில் ஒரு சிறு பங்கைக் கூட பா.ம.க வேறு எந்த மக்கள் பிரச்சனைகளுக்காகவும் நடத்தியது கிடையாது.

ராமதாஸ் அவர்களே! நீங்கள் சினிமாவுக்கும் சினிமா நடிகர்களுக்கும் எதிராக தாராளமாகக் குரல் கொடுங்கள். ஆனால் நீங்கள் பேசும் வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளா என்பதைச் சற்று சிந்தித்துப்பாருங்கள். பிறகு பேசுங்கள். இல்லாவிட்டால் ஒரு காலத்தில் நீங்கள் வெட்டிய மரங்களுக்காக இப்போது நடத்திக்கொண்டிருக்கிறீர்களே பசுமைத் தாயக இயக்கம்.. அதைப்போலவே சினிமாவிற்கு ஆதரவாக வேறு ஒரு இயக்கம் தொடங்கவேண்டியிருக்கும்.
சினிமாவைத் தவிர வாழ்க்கையில் பல முக்கிய பிரச்சனைகள் மக்களுக்கு இருக்கின்றன. அவைகளையும் சற்று மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் உங்களது நல்ல காலம் நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் காலம் உங்களுக்கு ஒத்தாசை செய்யும் என்ற பகற்கனவை விட்டுஒழியுங்கள். உண்மையாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் நிச்சயம் மண்ணைக் கவ்வவேண்டியதுதான்.
மீனா

31.8.04

காவிரியால் ஒரு விளையாட்டு!

ஆண்டுதோறும் நடைபெறும் அரசியல் விளையாட்டாக காவிரி நீர் பிரச்சனை உருமாறிக்கொண்டிருக்கிறது. தண்ணீருக்காக நடைபெறும் இந்த போராட்டம் செந்நீரால் முடிகிறது. தன்னை மறந்துப்போன மக்களுக்கு அடையாளங்காட்ட நெய்வேலி போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் பாரதிராஜா. தண்ணீர் இல்லையேல் மின்சாரம் இல்லை என்கின்ற போரட்டத்திற்கு பதிலாக, தண்ணீர் இல்லையேல் தமிழ் திரைப்படம் கர்நாடகத்தில் திரையிடுவதில்லை என போராடியிருக்கலாம். இப்படி போராடினால் இந்த நடிகர்களும், விநியோகஸ்தர்களும் நஷ்டமடைவார்கள் அதை இந்த நடிகர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இவர்கள் பணம் சேர்ப்பதற்கு கர்நாடகா மக்களும், அங்கிருக்கும் தமிழர்களும் தேவை ஆனால் மின்சாரம் மட்டும் தரமாட்டோம் என எந்த உரிமையில் இவர்கள் போராடினார்கள்? மின்சாரத்தை இவர்கள் நிறுத்துவதாக வைத்துக்கொண்டால் அங்கிருக்கும் தமிழர்களும் அல்லவா பாதிக்கப்படுகிறார்கள்? அந்த தமிழர்களின் வீடுகளும் அல்லவா இருட்டால் பாதிக்கப்பட்டிருக்கும்? பக்கத்து மாநில தமிழர்களையே பாதுகாக்க மறுக்கும் இவர்களின் மனம் எப்படி இலங்கை தமிழர்களை பற்றி வாய் கூசாமல் பேசுகிறது? இப்ப்டி எல்லாம் போராட்டம் நடத்திய விஜயகாந்த்தால் எப்படி வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கவேண்டும் என வீர வசனம் பேச முடிகிறது? இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சரத்குமார் எப்படி முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவிற்காக கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிந்தது? பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், நலிந்த கலைஞர்களுக்கும் ஸ்டார் ஷோ நடத்தி நிதி திரட்ட முன் வந்த விஜயகாந்த், இந்த போராட்டத்திற்கு பதிலாய் அந்த ஒரு நாளில் தமிழக விவசாயிகளுக்காக ஸ்டார் ஷோ நடத்த முன் வந்திருந்தால் சூப்பர் ஸ்டார் முழு மனதோடு மகிழ்ச்சிபொங்க கலந்துகொண்டிருப்பார். சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கை எப்படியாவது தட்டி பறித்துவிடலாம் என்ற நோக்கோடு இருந்த விஜயகாந்த்திற்கும், பாரதிராஜாவிற்கும் முடிவில் மிஞ்சியது ஏமாற்றமே. கூட்டமாய் இவர்கள் நடத்திய அநீதி போராட்டத்தை காட்டிலும் தனி மனிதனாய் நீதி வேண்டி போராடிய சூப்பர் ஸ்டாரின் போராட்டமே வென்றது. எல்லாவற்றிற்கும் மேலாக முன்னாள் கர்நாடகா முதல்வர் கிருஷ்ணா அவர்கள், ரஜினிகாந்த்தின் அகிம்சை போராட்டத்தால் மழை பொழிய ஆரம்பித்துவிட்டது, இது காவிரி பிரச்சனையை தீர்க்கும் என கூறியது சூப்பர் ஸ்டாரின் உண்ணாவிரத போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிகளுள் ஒன்று. உச்ச நீதி மன்ற தீர்ப்பை மதித்து அகிம்சையாய் போராடிய நம் தலைவரின் போராட்டம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் மனதில் பீதியை ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டாரை எதிர்க்கும் எவரும் வென்றதில்லை என்பது மட்டும் உறுதி. பாமக வென்றதும் கூட கூட்டணி கட்சிகளால்தான். அதிலும் பாமகவின் வாக்குகள் சிதறிக்கப்பட்டுள்ளதை பாமகவே ஒப்புக்கொண்டுள்ளது. சூப்பர் ஸ்டாரை நல்ல மனிதன் என கலைஞரும், ராமதாசும், அன்புமணியும் தேர்தல் பயத்தில் உண்மையாய் ஒப்புக்கொண்டது மறக்க முடியாதது. ரஜினி எனும் சக்தி முழுதாய் வெளிப்படும்போது, மக்களை ஏமாற்றும் அரசியல் தடங்கள் அழிக்கப்படுவது நிச்சயம்.

மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

ரஜினி மனசாட்சி வென்றிருக்கின்றது!

சூப்பர் ஸ்டார் எதனால் அதிமுக-விற்கு வாக்களித்தார் என்பது பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்திவிட்டது. இவர் வாக்களித்தது சரியா, இல்லையா என பட்டிமன்றம் கூட ஆரம்பித்துவிடும் போலிருக்கிறது. மீண்டும் ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பற்ற முடியாது என சொன்ன சூப்பர் ஸ்டார் இப்போது எதனால் அதிமுக-விற்கு வாக்களித்தார்? உண்மையாக சொல்ல வேண்டுமெனில் ரஜினி வழி, தனி வழி தான். இப்போது நாட்டு நடப்பை பார்க்கும்போது ஆளும் கட்சிக்கு எதிராகவே மக்கள் வாக்களிக்கிறார்கள். ஐந்து வருடம் ஒரு கட்சிக்கு, அடுத்த ஐந்து வருடம் வேறு கட்சிக்கு என மக்கள் மாறி வாக்களிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். நடந்து முடிந்த தேர்தலில் தமிழக மக்கள் வாக்களித்தது பிரதமரை தேர்ந்தெடுக்க அல்ல என்பது மட்டும் புரிந்தது. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு இருந்தால் தமிழக மக்கள் நிச்சயம் பாஜக-விற்கு பரிசாய் தந்த பெரிய தோல்வியை காங்கிரசுக்கும் தந்திருப்பார்கள். பாரளுமன்ற தேர்தலில் மக்கள் மாநில அரசை, மாநில கட்சிகளை கருத்தில் கொண்டு வாக்களிக்கும் முறை மாற வேண்டும். அதிமுக அரசின் மேல் இருந்த அதிருப்தியை மக்கள் சட்டசபை தேர்தலில் காட்டுவதை விட்டு, பாரளுமன்ற தேர்தலில் காட்டியது வருந்த வேண்டிய ஒன்று.பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அதிமுக-வையும், திமுக-வையும் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் முறையிலிருந்து மக்கள் மாறுபட வேண்டும். திமுக செய்வது எல்லாம் சரியே என ஆதரிப்பவர் சூப்பர் ஸ்டார் இல்லை. இந்த தேர்தலை பொறுத்தவரை வாஜ்பாயா, சோனியாவா என முடிவு செய்த தேர்தல். இதை கருத்தில் கொண்டே சூப்பர் ஸ்டார் பாஜக கூட்டணியான அதிமுக-விற்கு வாக்களிக்க நேர்ந்தது. திமுக திடீரென மதவாத கட்சி பாஜக என குற்றம் சாட்டி உறவை முறித்துக்கொண்டு, இங்கே ஜாதிக்கட்சியான பாமக-வுடன் உறவை வலுப்படுத்தியது ரஜினிக்கு மட்டும் அல்ல, ரஜினி ரசிகர்களுக்கும் திமுக-வின் மேல் வெறுப்பை காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. திமுக-விற்கு ஆதரவாக 96 தேர்தலில் கடுமையாய் உழைத்த ரஜினி ரசிகர்களின் உழைப்பை கலைஞர் அவர்கள் மறந்து போனாலும், சூப்பர் ஸ்டார் கலைஞரை பற்றி தவறாய் கருத்து கூறாதது அவரது பெருந்தன்மையை காட்டியது. அரசிலில் சூப்பர் ஸ்டார் ஈடுபட்டாலும் அரசியல்வாதிகள் போல் இல்லாமல் ஒரு நல்ல மனிதனாய் திகழ்கிறார். நதி நீர் இணைப்பு பற்றி எப்போதோ பேச்சு எழுந்து இருக்கலாம் ஆனால் சமீப காலமாக இந்தியா முழுதும் இதைப்பற்றி பேச காரணமாய் இருந்தவர் சூப்பர் ஸ்டார். கனவிலும் நடக்காத விசயத்தை சூப்பர் ஸ்டார் பேசுவதாக பாமக குறை கூறியது. இன்று எல்லா அரசியல் தலைவர்களும் நதி நீர் இணைப்பு பற்றி பேசினால்தான் ஓட்டு விழும் என நினைத்து இதைப்பற்றி பேசாத நாள் இல்லை. இந்தியாவில் வறுமை ஒழிய வேண்டும், நதிகள் இணைய வேண்டும் என்கின்ற சூப்பர் ஸ்டாரின் ஆசையை நிறைவேற்றுவதாக வாஜ்பாய் அவர்கள் சொன்னதும் அவர் பாஜக கூட்டணியான அதிமுக-விற்கு வாக்களிக்க ஒரு காரணமாக அமைந்தது. அதிமுக-விற்கு வாக்களித்தேன் என சூப்பர் ஸ்டார் வெளிப்படையாய் சொன்ன போது அவரின் துணிச்சலையும், சொல்வதைத்தான் செய்வேன் செய்வதைத்தான் சொல்வேன் எனும் அவரின் வார்த்தையின் அர்த்தத்தையும் உணர்த்தியது. சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பாமக-வினரால் தாக்கப்பட்டதுதான் அவரின் மனதை அதிகமாய் பாதிப்படையச் செய்து அவர் மனம் திறப்பதற்கு வழிக்காட்டாக அமைந்தது. பாமக-வின் வன்முறை, திமுக-வின் நன்றியின்மை, வாஜ்பாய் தந்த உறுதிமொழி இவ்வாறான காரணங்களால் மட்டுமே அவர் அதிமுக-விற்கு வாக்களிக்க நேர்ந்தது. அவரின் அந்த ஓட்டு அவர் உயிருக்கு உயிராய் மதிக்கும் ரசிகர்களுக்காகவும், தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் விவசாயிகளுக்காகவும், உயிரை விலை பேசிக்கொண்டிருக்கும் வன்முறைக்கு எதிராகவும் அளித்த லட்சிய ஓட்டு. அவர் வாக்களித்த கட்சி தோற்றுப் போயிருக்கலாம் ஆனால் அவர் மனசாட்சி வென்றிருக்கின்றது.
மா. இரவிசங்கர்
on behalf of www.rajinifans.com

25.8.04

ஏன் ரஜினிக்கு உலகம் முழுவதும் இப்படி தீவிர ரசிகர்கள்?

மதிப்பிற்குறிய பத்ரி அவர்களுக்கு,

உங்களின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன், காரணம் நீங்கள் குறிப்பிட்ட லு}ஸ் ரசிகனில் நானும் ஒருவனாக இருப்பதால். ஏன் எங்களுக்குள் இப்படி ஒரு வெறி? ஏன் ரஜினிக்கு உலகம் முழுவதும் இப்படி தீவிர ரசிகர்கள்? உங்கள் மனதில் இவ்வாறு கேள்விகள் ஓடிக்கொண்டிருப்பது புரிகிறது. நாங்கள் நடிப்புக்காகமட்டும் ரசிகர்கள் இல்லை என்பதுதான் உண்மை. க~;டப்பட்டு தன் உழைப்பால் மேலோங்கி நிற்கும் ஒரு மாமனிதனை பார்க்கிறோம். நடிப்பு என்பது தொழிலில் மட்டுமே, வாழ்க்கையில் இல்லை என்று உணர்த்தும் உத்தமனை பார்க்கிறோம். உழைத்தால் உயரலாம் என்பதற்கு உதாரணமாய் தெரியும் உழைப்பாளியை பார்க்கிறோம். புகழின் உச்சியில் இருந்தாலும் எல்லோரையும் மதிக்க தெரிந்த தலைவனை பார்க்கிறோம். மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் திகழும் ஒரு மாமனிதனின் ரசிகர்கள் உங்கள் கண்ணுக்கு வேறுபாடாய் தெரிவது, உங்களின் கண்ணோட்டத்தின் குற்றத்தை தெளிவுப்படுத்துகின்றது. ஜப்பானியர்கள் தமிழ் கற்றுக்கொண்டுத ஒன்றுதான் சந்தோசம் எனக்கூறிய நீங்கள் அவர்கள் தமிழ் கற்றதன் காரணம் அறியாதிருப்பதுதான் வேதனை.வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கே இன்று தமிழ் எழுத, படிக்க மறந்து போயிருக்கும் இந்நிலையில் ஜப்பானியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள து}ண்டுதலாய் இருந்த எங்கள் தலைவனை வாழ்த்த வார்த்தைகள் இல்லை.தமிழ் கலாச்சாரத்தில் விருந்தோம்பல் என்பது ஒப்பற்ற ஒன்று. ராம்கியின் ஆட்டம், பாட்டம் எல்லாம் வந்தவர்களை குதுகுலப்படுத்திய விருந்தோம்பல்தான். ஆடிப்பாடிய ராம்கியின் சமுதாய சிந்தனைகள் உங்களுக்கு தெரியாததல்ல.உலகின் ஏதோ ஒரு மூலையில் வாழும் இவர்கள் நம் மண்ணை மதிக்கிறார்கள், நம் மண்ணின் மைந்தனை மதிக்கிறார்கள். இதுவல்லவா இந்திய நாட்டிற்கு பெருமை! கலாச்சார சீரழிவுகள் நம்மை அழித்துக்கொண்டிருந்தாலும், நம் கலாச்சாரத்தை இவர்கள் நேசிப்பது வியக்கத்தக்க ஒன்றுதான்! ரஜினி ரசிகர்கள் அன்னப்பறவை போன்றவர்கள். பாலையும், தண்ணீரையும் பிரிக்கத்தெரிந்தவர்கள். ஜாதி, மதம், மொழிகளால் வேறுபாடு இல்லாதவதர்கள்.

ரஜினி படத்தில் என்ன வேண்டும்? ரஜினி போதாதா? ஆனால்; ஒன்று மட்டும் இல்லை. அது ஆபாசம்.

இன்று நல்லவைகள் நம்மால் எட்டுத்திக்கும் செல்கின்றது.இதற்கு சான்று ஜப்பானியர்கள்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிப்பாடும், சூப்பர் ஸ்டார் வீட்டு நாய்க்குட்டிக்கும் எல்லோரையும் நேசிக்க தெரியும். இதனால்தான் பத்திரிக்கைகள் எழுதுகின்றன.

நீங்கள் சொல்லப்பட்டிருக்கும் குறைகளில் நிறைய நிறைகளும் ஒளிந்திருக்கின்றது. ரஜினியின் புகழை குற்றம்சாட்டி புகழ்ந்ததற்கு நன்றி. ஆண்டவன் ஒரு நல்ல மனிதனை படைக்கம்போதே, அம்மனிதனை நேசிக்க கோடான கோடி மனிதர்களையும் சேர்த்து படைக்கிறான். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட எங்கள் தலைவருக்கும் இது பொருந்தும்.

நல்ல மனிதனை மதிப்போம்! நல் வழிச்செல்வோம்!

அன்புடன்
இரவிசங்கா
on behalf of www.rajinifans.com

'இன்னொரு ரஜினிகாந்த்' - ஞாநியின் கட்டுரைக்கான எதிர்வினை

மதிப்பிற்குரிய ஞாநிக்கு,

புதிதாக விஜயகாந்த் ரசிகர் மன்றத்தில் சேர்ந்து அரசியல் பணியையும் ஆற்ற தொடங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள். இதை எப்போதோ எதிர்பார்த்திருந்தோம். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமல் எப்போதும் குறைகளையே அடுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் கொள்கைகள் ஒத்துப் போய் ஒரு அரசியல் அலைவரிசை ஆனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

விஜயகாந்தை பற்றி மட்டுமல்ல விக்டோரியா மகாராணியை பற்றி பேசும்போதும் கூட ரஜினியை பற்றி பேசாமலிருக்க முடியாது என்கிற நிலையில் விஜயகாந்தின் அரசியல் நிலைப்பாட்டையும் எதிர்பார்த்தது போலவே ரஜினியோடு ஒப்பிட்டுத்தான் ஆரம்பித்திருக்கிறீர்கள்! 'அரசியலுக்கு நுழைய முயற்சித்து தோற்றுப் போன ரஜினி' என்கிற முதல் வரி, தீம்தரிகிடவின் சர்க்குலேஷனை குறைந்த பட்சம் பத்து பிரதிகளாவது உயர்த்தியிருக்கும் என்கிற உண்மை தங்களின் மனசாட்சிக்கு தெரியாததல்ல.

நல்லவேளை அதிகமா சினிமா விமர்சனங்கள் எதையும் நீங்கள் எழுதிவிடவில்லை! ஊமை விழிகள் படத்தில் அப்போதே எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும் நினைவுபடுத்தும் கேரக்டர்கள் அமைந்ததற்கு காரணம், விஜயகாந்த்க்கு அப்போதே எம்.ஜி.ஆரையும் கருணாநிதியையும் எதிர்க்கும் வல்லமை உண்டு என்பதை நிரூபிப்பதற்காகவா? மட்டமான சினிமா படங்களிலிருந்தும் அருமையான சிந்தாந்தங்களையும், அரசியல் பார்வைகளையும் உங்களால் மட்டுமே எப்படி எடுத்துக் கொள்ள முடிகிறது என்பதுதான் ஆச்சரியம்.

பாமகவின் வன்முறைக்கு பயந்து விஜயகாந்த் ரசிகர்கள் பதில் தாக்குதல் தொடுத்ததை பெருமிதத்துடன் சொல்லியிருப்பதிலிருந்தே நீங்கள் வைத்திருக்கும் அரசியல் செல்வாக்கின் அளவுகோல் எதுவென்பது தௌ¤வாக தெரிந்து விடுகிறது.

ரஜினியின் ரசிகர் மன்றங்கள், சத்தியநாராயணா மூலமே இயக்கப்படுகிறது என்கிற தங்களின் கண்டுபிடிப்பு, ரஜினிக்கும் சத்தியநாரயணாவுக்கும் சம்பந்தமேயில்லை என்கிற அர்த்தத்தில் இருப்பதாக சொல்ல முடியாது. ஆனாலும், ரஜினி தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டிருப்பதில்லை என்கிற உண்மையை மறைமுகமா உளறித் தொலைத்துவிட்டீர்களோ என்று நினைக்கத் தோன்றியது. தனது சுயநலத்துக்காக ரஜினி, தனது ரசிகர்களை தூண்டிவிடுகிறார் என்கிற தங்களின் பழைய வாதம் அவ்வளவு சீக்கிரம் காமெடியாகிவிடக் கூடாது என்கிற கவலைதான்!

ரஜினி பத்திரிக்கையாளர்களுக்கு பணம் வைத்து கவர் கொடுத்ததை மறைக்காமல் நேர்மையாக எழுதிய நீங்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பைக் கூட ரஜினி ஒழுங்காக நடத்தியதில்லை என்று சொல்லியிருப்பதில் என்ன விதமான எதிர்பார்ப்போ?

தமிழுணர்வுகளை வெளிப்படுத்தி திராவிடக் கட்சிகளுக்கு துதிபாடுவதுதான் வோட்டு பெட்டியை நிரப்பும் என்கிற அதே வறட்டு சிந்தாந்தம் தமிழகத்தில் எப்போதும் எடுபடும் என்கிற தங்களின் அதீத நம்பிக்கையை தகர்க்க முடியாததற்கு ஓட்டுப்போடாத 42 சதவீத மக்கள்தான் காரணம். புதிதாக ஓட்டு வங்கி எதையும் உருவாக்காமல் கூட்டத்தோடு கூட்டமாக இருந்துவிட்டு போய்விடலாம் என்கிற தங்களின் ஆலோசனையை கேட்கும் பட்சத்தில் விஜயகாந்த் நிச்சயம் இன்னொரு டி.ராஜேந்தர்தான்.

தலித் அமைப்புகளெல்லாம் அரசியல் கட்சிகள் அல்ல என்கிற உங்களின் சமுதாய பார்வையும் இடதுசாரிக் கட்சிகளெல்லாம்தான் ஜனநாயகத்தை வாழ வைக்கின்றன என்கிற தங்களின் வாதமும் தமிழக அரசியலில் இன்னமும் அனாதைகளாகவே இருப்பவர்களுக்கு விஜயகாந்த் மூலமாக ஒரு அங்கீகாரம் கிடைக்கச் செய்யும் முயற்சிகளாகத்தான் எங்களால் பார்க்க முடிகிறது.

விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து கட்சியை வளர்க்க வேண்டும் என்கிற தங்களின் கோரிக்கையிலிருந்து காங்கிரஸ் கட்சியின் மீது உங்களுக்கு கடும் கோபம் இருப்பதாக சொல்ல முடியாது. இருந்தாலும் 1996ல் 'வாழ்விக்க வந்த காந்தி' என்று ரஜினியை மூப்பனார் நினைப்பதாக விமர்சித்த உங்களால் 'மறுபடியும்' காங்கிரஸ்காரர்களை குறை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ள முடியாது. காரணம் சம்பந்தப்பட்டிருப்பவர் தமிழுணர்வுள்ள விஜயகாந்த்தானே தவிர கன்னட ரஜினிகாந்த் அல்லவே!

மூன்றாவது அணிக்கு தலைமையேற்க அதாவது கம்யூனிஸ, தமிழ் ஆதரவாளர்களுக்கு கை கொடுக்க விஜயகாந்த் வந்துவிட்டபோது, அவரது படங்களின் பெண்ணடிமைத்தனமான, பிற்போக்கான, நிலவுடமை கருத்துக்களைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படுவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க முடியாது.

விஜயகாந்தின் வித்தியாசமான படமாக, லஞ்ச ஒழிப்பை பற்றிச் சொன்ன ரமணாவை சிலாகிக்கும் நீங்கள் தமிழகம் தோறும் காசு கொடுத்து விஜயகாந்த் மன்றத்திற்கு ஆள் சேர்க்கும் பணியை லஞ்சக் கணக்கில் சேர்க்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறோம்.

அண்ணா காலத்து எம்.ஜி.ஆர் போல காங்கிரஸ§க்கு விஜயகாந்த் இருப்பார் என்கிற ஆரூடம் புதிதாக பிழைக்க வந்திருக்கும் விஜயகாந்த் ரசிகர்களை மிரள வைத்திருக்கும். கருணாநிதியிடம் ஆட்சியை ஒப்படைத்த பின்னர் ஓரங்கட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் நிலைமை விஜயகாந்துக்கு ஏற்படும் என்றால் கவலைப்படாமல் என்ன செய்வது? அப்படிப்பட்ட சமயத்திலும் சினிமாக்காரர்களை காட்டமாகவும் அவர்களது ரசிகர்களை படுமுட்டாளாகவும் புத்திசாலித்தனமாக விமர்சித்துவிட்டு விஜய், தனுஷ் ரசிகர் மன்றங்களின் செயல்பாடுகளை அலசி ஆராய உங்களால் மட்டுமே முடியும்!

என்றும் அன்புடன்,
ஜெ. ரஜினி ராம்கி
on behalf of www.rajinifans.com

22.7.04

நதிநீர் இணைப்பு - இப்படிப் பார்த்தால் என்ன?

சமீப ஆண்டுகளாக நதிநீர் இணைப்பு பற்றி இந்தியாவில் நிறைய பேச ஆரம்பித்திருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும், பருவ காலங்களை நம்பி ஏற்படும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொண்டு சிரமப்பட்டு, நிரந்தரத் தீர்வு என்று ஒன்றைக் காண முடியுமா என்ற ஆதங்கத்தில் யோசிக்கப்படும் தீர்வுகளில் இதுவும் ஒன்று. அதுவும் இந்தியா என்ற பரந்த நிலப்பரப்பில், பலவிதமான பருவநிலைகள், உறுதியற்ற காலமுறையில் சுழலும் போது, பிரச்சினையின் தீவிரம் அதிகமாகிறது.
ஒருபக்கம், வற்றாத ஜீவநதிகள். மற்றொருபுறம், மழை அதிகம் பெய்யும் பகுதிகள். இன்னொரு புறமோ, 4, 5 ஆண்டுகளாக மழையே காணாத பஞ்சப் பகுதிகள். ஆழ்துளைக் கிணறுகள் போட்டு, கடல்நீரையே அள்ளி விடும் அளவுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு. விவசாயம் மழைநீரையோ, நிலத்தடி நீரையோ நம்பியே இருப்பதனால், பல இடங்களில் ஒருவித சமனற்றதன்மை உருவாகியுள்ளது. பொருளியல் ரீதியாக உருவாகி வரும் இத்தகைய சமனற்ற தன்மை, மக்களின் மனநிலையையும் வாழ்நிலையையும் பெருமளவில் பாதித்து வருகின்றது.
விவசாயம் இல்லாமல், பல கிராமங்கள், நகரங்களை நோக்கி வேலைதேடிப் படையெடுப்பது அண்மைக் காலங்களில் மிகவும் அதிகரித்திருக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில், கட்டடக் கூலிகளாக வேலை செய்யும் பல குடும்பங்கள், பிழைப்பு தேடி சென்னை சேர்ந்த குடும்பங்களே. நிலமிருக்கிறது, ஆனால் விவசாயமில்லை. நீரைப் பெறச் செய்யப்படவேண்டிய செலவு, எந்த வகையிலும் திரும்ப ஈட்டக்கூடியதாகவே இல்லை. அதிகம் தண்ணீர் தேவைப்படாத பயிர்கள் செய்து பார்த்து, அதுவும் ஒரு எல்லையைத் தொட்டுவிடும் நிலையை எட்டியிருக்கிறது.
கிராமப் பொருளாதாரம் என்பது எப்போதும் விவசாயம் சார்ந்தே உருவாகி வருவது. ஆனால், தண்ணீரைப் பெறச் செய்யப்படவேண்டிய செலவு மிகக் கூடுதலாக ஆகிவருகின்ற வேளையில், விவசாயத்துக்கான முனைப்பே குறைந்து வருவது கண்கூடு.
மற்றொருபுறம், சிறுநகரங்கள், பெருநகரங்கள். நகரவாழ்வின் முக்கிய தேவை, தண்ணீர். இடப்பெயர்ச்சியின் காரணமாகவும், பல ஆண்டுகளாக நிர்வாக, தொழில் வளர்ச்சியின் காரணமாகவும் அபரிதமான வேகத்தில் வளர்ந்து வரும் நகரங்களின் தண்ணீர்த் தேவை, மிக அதிகமாக அதிகரித்துள்ளது. மக்கள், இந்த நகரங்களில் இருந்தாக வேண்டும். அப்போதுதான், தொழில் வளர்ச்சி சாத்தியம். அதேநேரம் அவர்களது தேவையான தண்ணீரும் நிறைவு செய்யப்படவேண்டும்.
கிராமங்களைப் போல், நகர்களிலும் தண்ணீர், மக்களின் பொருளியலையே நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. மனநிலையையே நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாகவும் மாறிவிட்டது.
இன்றைக்கு, இதற்கெல்லாம் நிரந்தரத் தீர்வாகக் கருதப்படுவது, நதிநீர் இணைப்பு. இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைப்பது ஒரு திட்டம். குறைந்தபட்சம், தென்னக நதிகளை இணைப்பது மற்றொரு திட்டம்.
சென்ற வாஜ்பாயி அரசில், நதிநீர் இணைப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற பேச்சு எழுந்தவுடனேயே, மாற்றுக் கருத்துடையோரின் கட்டுரைகள், எண்ணங்கள், பத்திரிகைகளை அலங்கரிக்கத் தொடங்கிவிட்டன. நதிநீர் இணைப்பின் சாத்தியமற்ற தன்மையை விளக்கி, அதில் உள்ள பல்வேறு சிக்கல்கள் மற்றும் குறைபாடுகளை விளக்கி ஆய்வுபூர்வமான கட்டுரைகள் பல இதழ்களில் படிக்கக் கிடைத்தன.
நதிநீர் இணைப்புக்கு மாற்றாக முன்வைக்கப்படும் திட்டங்களும் இருக்கின்றன. முக்கியமாக மழைநீர் சேகரிப்பு. தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இந்த மழைநீர் சேகரிப்பின் பலன்களை சென்னைவாசிகள் இப்போது அனுபவித்துக் கொண்டிருப்பது உண்மை. பல இடங்களில் இந்த கடுமையான ஜூன் - ஜூலை மாதங்களில் கூட, நிலத்தடி நீரின் இருப்பு, போதுமான அளவு இருப்பதைக் காண்கிறோம்.
ஆனால், கேள்வி, இது எவ்வளவு மாதங்கள் தாங்கும் என்பதுதான். அடுத்த பருவமழை வழக்கம்போல், போதிய அளவு பெய்யாமலோ, அல்லது தொடங்கவே தொடங்காமல் போகுமானால் (ஆந்திராவில் ஏற்பட்ட கடும் வறட்சிக்குக் காரணம், கடந்த 5 ஆண்டுகளாக மழை பெய்யாமல் போனதனாலேயே. நாயுடு அரசு தோற்றதற்கு அதுவே முக்கிய காரணம்) நிலைமை என்ன?
ஒருவகையில் மாற்றுக் கருத்துடையோரின் கட்டுரைகள், நிஜத்தை விளம்பும் தன்மை கொண்டிருக்கின்றன. போகும் வழியில் உள்ள சிக்கல்களை, அபாயங்களை, இழப்புகளை வரிசைப்படுத்தியே இவை காட்டுகின்றன.
1. சூழலியல் ரீதியாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் 2. மக்களின் இடப்பெயர்ச்சி 3. திட்டத்துக்குத் தேவைப்படும் ஏராளமான நிதி.
இவையெல்லாம், இந்தியா போன்ற ஒரு ஏழை நாட்டால் தாங்க முடியுமா என்பதுதான் கேள்வி. மேலும் சர்வதேச கடனை அதிகப்படுத்தும், மேலும் இயற்கை வாழ்நிலையைப் பாதிக்கும் என்றெல்லாம் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. இதில் உண்மையில்லாமல் இல்லை. இவை அபாயங்கள்.
ஆனால், நிஜம் அதைவிட அபாயமாக இருக்கிறது. மாறிவரும் பருவநிலைகள் காரணமாக, மேன் மேலும், தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகரிக்குமோ என்ற ஐயம் ஏற்படாமலில்லை. ஏதோ ஒரு வகையில், அந்த அபாயத்தை எதிர்கொள்ளவும், நம்மாலான குறைந்தபட்ச மாற்று நடவடிக்கைகளை எடுத்து, பிரச்சினைக்குத் தீர்வு காணவுமே நாம் விரும்புகிறோம்.
அந்த வகையில், இன்றைக்குக் கண்ணில் தெரியக்கூடிய தீர்வு, நதிநீர் இணைப்புத்தான். இதன் குறைகளைக் களைந்து, அபாயங்களை உள்வாங்கிக்கொண்டு, அதற்கான மாற்றுகளை உருவாக்கிக்கொண்டு, திட்டத்தை முன்னேற்றுவதில் கவனம் செலுத்துவது பொருத்தமாக இருக்கும்.
மாறாக, முளையிலேயே, இந்த எண்ணத்தைக் கிள்ள நினைப்பது ஆரோக்கியமானதாகத் தோன்றவில்லை. இதில் இருந்து, ஒரு நல்ல வாழ்வு கிடைக்கும் என்ற முகாந்திரம் இருக்குமானால், அதைச் செய்து பார்ப்பதில் தவறில்லையே. 

Courtesy :  Sify Venkatesh  (The author is well known writer in Tamil, working as Business Manager in Sify, Chennai)

22.6.04

நடக்கும் என்பார் நடக்காது ?!

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் - ஏ. வைத்தியநாதன்


ஏ. வைத்தியநாதன் (1931) சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்புப் பேராசிரியராக விளங்குகிறார். அமெரிக்க கார்னெல் பல்கலைக்கழகத்தில் பிஎச். டி. பட்டம் பெற்றவர். உலக வங்கயில் பணியாற்றியதோடு, மையத் திட்டக்குழுவிலும் உறுப்பினராகச் செயல்பட்டிருக்கிறார். நீர் மேலாண்மையில் உலக அளவில் மதிகப்படும் அறிஞர்.

நதிகள் இணைப்புத் திட்டம் குறித்து நடைமுறை சார்ந்த விசாரணை

நதிகள் இணைப்புத் திட்டம் என்பது புதிதல்ல. விஸ்வேஸ்வரய்யாதான் கங்கை -காவிரி இணைப்பைப் பற்றி முதýல் பேசியதாகச் சொல்வார்கள். கே. எல். ராவ் மத்திய அமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டத்தைப் பரிந்துரைத்திருக்கிறார். அதன் பிறகு தாஸ்தூர் நாட்டின் பெரிய நதிகளை இணைக்கும் மாலைக் கால்வாய்த் (எஹழ்ப்ஹய்க் இஹய்ங்ப்) திட்டத்தை முன்வைத்தார். சில நதிகளில் தண்ணீர் அபரிமிதமாகப் பாய்கிறது; அது வீணாகக் கடýல் கலப்பதற்கு பதில் தென்பக்கமாகத் திருப்பிவிட்டால் நீர்வரத்து குறைவாக இருக்கும் நதிகளும் அந்நதிகள் பாயும் பகுதிகளும் பயன்படும் என்ற நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட திட்டம் இது. இதற்குத் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் நிறைய விமர் சனங்கள் வந்தன. வழியில் உள்ள மலை, மடு, ஆகியவற்றையெல்லாம் தாண்டி வர வேண்டும் என்றால் அதில் நிறையப் பிரச்சினைகள் உள்ளன; செலவும் அதிகம் ஆகும் என்று விமர்சனம் வந்தது. திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

அடுத்தடுத்துப் பஞ்சம் வந்தபோது மறுபடியும் இது பற்றிய பேச்சு எழுந்தது. அரசாங்கம் தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையத்தை உருவாக்கியது. இந்த ஆணையம் முப்பது ஆண்டுகளாக ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறது.

இப்போது செயல்படுத்தவிருப்பதாகச் சொல்லப்படும் திட்டமே இந்த ஆய்விýருந்து உருவானதுதான் என்றும் சொல்கிறார்கள். சமீபகாலம் வரை நதிகள் இணைப்புத் திட்டத்தை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடந்த ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ரஞ்சித்குமார் என்பவர் தொடுத்த பொதுநல வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு தான் இவ்விஷயத்தில் தீவிரமான கவனத்தை எழுப்பியது. எல்லோருக்கும் குடிநீர் கிடைக்கச் செய்ய வேண்டும்; அது மக்களின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நாட்டின் பெரிய நதிகளை இணைக்கும் திட்டம் ஒன்றை உருவாக்கி, 2015இற்குள் முடிக்குமாறு மத்திய அரசுக்கு அது உத்தரவிட்டது. அரசு நீதிமன்ற உத்தரவின்படி செயல் படும் என்று அன்றைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அறிவித்தார். சுரேஷ் பிரபுவின் தலைமையில் இதற்காகச் சிறப்புப் பணிக்குழு ஒன்றை உருவாக்கினார்.

இந்திய நதிகளை இணைப்பது என்று சொல்லும்போது கங்கை - காவிரி இணைப்பு என்ற கருத்துதான் மேலெழும்பி வருகிறது. ஆனால் பங்களாதேஷ், பூட்டான், சீனா, நேபாளம் முதலான நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் கங்கை, பிரம்மபுத்திரா நதிகளில் பெரிதாக எதுவும் செய்ய முடியாது. கங்கை, பிரம்மபுத்திராவில் கைவைப்பது சர்வதேச விவகாரம். எனவே மகாநதியிýருந்து தொடங்கித் தெற்கே உள்ள நதிகளை இணைப்பது பற்றித்தான் தீவிரமாகப் பேசி வருகிறார்கள். தேசிய நதிகள் இணைப்பு என்பது நடைமுறையில் தென்னிந்திய நதிகள் இணைப்புதான்.

இந்தத் திட்டத்திற்குத் தேவையான ஆய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது இதன் அடிப்படையான கோளாறுகளில் ஒன்று. சமீபகாலம்வரை மேலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றுதான் கூறிவந்தார்கள். உச்ச நீதிமன்ற உத்தரவு வந்ததும் திட்டம் தொடங்கப்பட்டுவிடும் என்று அறிவித்துவிட்டார்கள். அதற்குள் ஆய்வை எப்படி முடித்தார்கள் என்று தெரியவில்லை.

மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது நதிகளிýருந்து எக்கச்சக்கமான அளவு தண்ணீர் வீணாகக் கடýல் கலக்கிறது என்றும் இந்தத் தண்ணீரைப் பற்றாக்குறை நிலவும் இடங்களுக்குத் திருப்பிவிட்டால் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கும் என்றும் பரவலான ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்தத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது. இத்திட்டம் தேசிய ஒருமைப் பாட்டை வளர்க்கவும் நாட்டின் இயற்கையான நீர்வளத்தை அனைவரும் நியாயமாகப் பங்கிட்டுக்கொள்ளவும் வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது. இவையெல்லாமே மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட அனுமானங்கள். நதிகளை இணைப்பதன் மூலம் பாசனம் பெருகுமா அல்லது மக்களிடையே தகராறுகள் அதிகரிக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது பற்றிப் பரிசீýக்கும் முன்பு இது நடைமுறை சாத்தியமானதுதானா விரும்பத்தக்கதுதானா தாக்குப் பிடிக்குமா என்பன போன்ற முக்கியமான கேள்விகளுக்குப் பதில் கண்டாக வேண்டும்.

தண்ணீரை ஒரு நதியிýருந்து இன்னொரு நதிக்குள் கொண்டு வர முடியுமா என்ற கேள்வி இருக்கட்டும். அப்படியே கொண்டுவந்தாலும் அதை எப்படிச் சேமித்துவைக்க முடியும்? சேமித்துவைக்க வேண்டுமென்றால் பெரிய பெரிய நீர்த்தேக்கங்களைக் கட்ட வேண்டும். நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்வது? 8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் வந்தால்கூடப் பெருத்த அழிவு ஏற்படும். வருமா என்று கேட்டால், கட்டாயம் வரும்; ஆனால் எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்கிறார்கள். நிலநடுக்கம் வந்து அவ்வளவு பெரிய அணை உடைந்தால் என்ன ஆகும்? இதைச் சமாளிக்கத் தொழில்நுட்பம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். பாதுகாப்பான உயரத்தில் அணை கட்ட வேண்டும் என்கிறார்கள். சரி, இதையெல்லாம் எந்த அளவு நம்ப முடியும்? இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும்? இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்தார்களா?

இரண்டு மூன்று விஷயங்களை முதýலேயே தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று இது அரசின் ஐந்தாண்டுத் திட்டத்தில் இல்லவேயில்லை. சிறப்புப் பணிக்குழுவை நியமித்து இவ்வளவு பெரிய திட்டத் தைச் செய் என்று சொன்னால் எப்படிச் செய்ய முடியும்? இதில் எவ்வளவு கட்டங்கள் உள்ளன? எவ்வளவு பெரிய திட்டம்? சம்பந்தப்பட்டவர்கள் எல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டாமா? இதற்கான செயல் திட்டம் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா? கிணற்றிலோ அணையிலோ தேக்கி வைத்துத்தான் குடிநீர் வழங்க முடியும். மொத்த நீரில் 5 சதவீதம்தான் வீட்டு உபயோகத்திற்கானது. பாசனத்திற்கு 80 சதவீதமும் தொழில்துறைக்கு 15 சதவீதமும் செலவாகப்போகிறது. குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இவ்வளவு நீரை அங்கேயிருந்து ஏன் கொண்டு வர வேண்டும்?

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்க் கலாம். அரசு வெளியிட்டிருக்கும் வரைபடத்தைப் பார்த்தால், மகாநதியிýருந்து கோதாவரி, கோதாவரியிýருந்து கிருஷ்ணா, அதிýருந்து பெண்ணாறு, பெண்ணாற்றிýருந்து பாலாறு இப்படி வருகிறது தண்ணீர். நான் முதýலேயே சொன்னபடி கங்கை -காவிரி இணைப்பெல்லாம் ஐதீகம் மாதிரிதான். மிகச் சிறிய அளவில் கங்கையிýருந்தும் பிரம்மபுத்திராவிýருந்தும் மகாநதிக்குத் தண்ணீர் வருவதாகக் காட்டப்பட்டிருக்கிறது. மற்றபடி இப்போதைய திட்டம் தென்னக நதிகள் தொடர்பானதுதான். சில நதிப்படுகைகளில் உபரி நீர் இருக்கிறது; அதைப் பற்றாக்குறை நிலவும் பகுதிகளுக்குத் திருப்பிவிட்டால் நெருக்கடி தீர்ந்துவிடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்த யோசனை முன்வைக்கப்படுகிறது. உபரி நீரை எந்த அடிப்படையில் யார் தீர்மானிப்பது? வெள்ளப்பெருக்கின்போது இருக்கும் நீரின் அளவை உபரியை அளப்பதற்கான அளவுகோலாகக் கொள்வது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும். வெள்ளம் வரும் பகுதிகள் உபரி நீர் கொண்டவை என்ற கருத்தும் தவறு. மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும் பகுதிகள் கோடைக்காலத்தில் நீரின்றித் தவிக்கக்கூடும். உபரிநீர் குறித்த தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் போன்ற மத்திய அமைப்புகளின் மதிப்பீட்டினை மாநில அரசுகள் வன்மையாக மறுக்கின்றன. நான் மத்தியத் திட்டக்குழுவில் இருந்தபோது பார்த்திருக்கிறேன். தங்களுக்கு உபரி நீர் இருப்பதாக எந்த மாநிலமும் ஒப்புக்கொள்ளாது.

முதýல் ஒவ்வொரு நதிப்படுகையிலும் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். நிலத்தடி நீர், மேற்பரப்பில் ஓடும் நீர் ஆகிய இரண்டு விதமான இருப்புகளில் ஒவ்வொரு ஆறுக்கும் நிலத்தடி நீர் மற்றும் மேற்பரப்பு நீர் எவ்வளவு என்பதைக் கணக்கிட ஒரு வழிமுறை இருக்கிறது. அப்பகுதியில் பொழியும் சராசரி மழை, நதிகளில் சென்று கலக்கும் மழையின் அளவு, வெள்ளமாக வழிந்தோடும் நீரின் அளவு ஆகியவற்றையெல்லாம் கணக்கிட்டு, மொத்தம் எவ்வளவு உபரி இருக்கிறது என்று கணக்கிடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மழை ஒரே மாதிரி இருப்பதில்லை. எனவே, சராசரியாக எவ்வளவு நீர் வருகிறது என்று கணக்கிடப்படும். இதில் இரண்டாண்டுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் கணக்கைச் சராசரி (ம்ங்ஹய்) மழை அளவு என்றும் நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் எந்த அளவு நீர் கட்டாயம் கிடைக்கும் என்ற அடிப்படையில் போடும் கணக்கை "75 சதவீதம் நம்பக்கூடிய' அளவு என்றும் (75% க்ங்ல்ங்ய்க்ஹக்ஷண்ப்ண்ற்ஹ்) சொல்வார்கள். இரண்டாண்டுச் சராசரியைவிட, "75 சதவீதம் நம்பக்கூடிய' அளவு குறைவாக இருக்கும். உபரியைக் கணக்கிடும்போது குறிப்பிட்ட ஓர் ஆண்டின் மழைப் பொழிவையோ இரண்டாண்டுகளுக்கான சராசரி மழைப் பொழிவையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், "75 சதவீதம் நம்பக்கூடிய' அளவைத்தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். ஏனென்றால், இந்த ஆண்டு பெய்யும் மழை அடுத்தடுத்த ஆண்டுகளில் பெய்யாமல் போகலாம். எனவே ஒரு குறிப்பிட்ட நதிப்படுகையில் நான்கு ஆண்டுகளில் மூன்று ஆண்டுகள் குறைந்தபட்சம் எதிர்பார்க்கக்கூடிய மழை அளவின் அடிப்படையில் உபரி நீரைக் கணக்கிட வேண்டும். இப்படிப் பார்க்கும்போது "உபரி' நீர் அளவு மிகவும் குறைந்துவிடும். ஆனால் அரசின் திட்டமே இதை மிகையாக மதிப்பிடுகிறது.

ஐந்து படுகைகளிலும் சேர்த்து மொத்தம் 65 பில்ýயன் கன அடி நீர் அனுப்பப்படும் என்று ஆணையம் மதிப்பிட்டுள்ளது. வழியில் வீணாகும் நீரைக் கழித்துவிட்டால் (2.7 பில்ýயன்) சுமார் 62 பில்ýயன் மிஞ்சும். இதில் பெரும் அளவிலான நீர் ஒரு படுகையிýருந்து அடுத்த படுகைக்கு அனுப்பப்படுகிறது. இதில் பெரும்பகுதி (20 பில்ýயன்) நீர் செல்லும் வழியில் நடக்கும் பாசனத்திற்காகச் செலவாகும். இதில் ஒரு பகுதி மகாநதி, கோதாவரி நதிப்படுகைகளுக்கு இடையிலான கால்வாய்களை ஒட்டியிருக்கும் பகுதிகளுக்கும் கோதாவரி - கிருஷ்ணா நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளுக்கும் பலன் தரும். இதெல்லாம் போக 16-17 பில்ýயன் கனஅடி நீர் மீதியுள்ள மூன்று நதிகளுக்குக் கிடைக்கும். தற்போது இங்குக் கிடைக்கும் அளவைவிட இது 25 சதவீதம் அதிகம். வழியில் பயன்படுத்தப்படும் நீர் சமமாகப் பிரிக்கப்படுகிறது என்று அனுமானித்துக்கொண்டால் கிருஷ்ணாவில் 2 சதவீதமும் பெண்ணாற்றில் இப்போது உள்ளதைப் போல இரண்டு மடங்கும் காவிரியில் 25 சதவீதமும் நீர் இருப்பு அதிகரிக்கும்.

அனுப்பப்படும் நீரின் மொத்த அளவு என்பது பொருளற்ற ஒரு தொடர். ஒவ்வொரு நதியிýருந்தும் அதற்கு அடுத்த நதிக்கு எவ்வளவு நீர், எப்போது, எவ்வளவு காலத்திற்குள் அனுப்பப்படுகிறது; நீரைப் பெறும் பகுதிகளின் பாசனத் தேவையை அது பூர்த்திசெய்கிறதா என்பதையெல்லாம் துல்ýயமாகக் கணக்கிட வேண்டும். எல்லாப் படுகைகளிலும் ஒரே சீரான அளவு விவசாயம் நடப்பதாக அரசு தரும் அட்டவணை கூறுகிறது. வழியில் 3 முதல் 10 சதவீதம்வரை வீணாகும் என்றும், 110 -250 நாள்களுக்குள் தண்ணீர் அனுப்பப்பட்டுவிடும் என்றும் அது கூறுகிறது. கால்வாய்களின் நீளம் 170 முதல் 930 கி. மீவரை இருக்கும். இத்தனை தூரம் பயணம் செய்யும் நிலையில் ஆணையம் கூறுவதைவிட அதிகமாகவே நீர் வீணாகும். கால்வாய்கள் செல்லும் வழியில் பாசனம் அதிகரிக்க வழி இருக்கிறது என்றாலும் "உபரி' நீர் கொண்ட நதிப் பகுதிகளின் பாசனம் அதிகரிக்க வழியில்லை. எந்தப் பகுதிகளுக்குப் பாசனம் அதிகரிக்க வேண்டும் என்பது அரசியல் சார்ந்த பிரச்சினையாக உருவெடுக்கும்.

இத்திட்டத்தின் நோக்கமே நீர்ப் பற்றாக் குறை நிலவும் இடங்களில் நீர்வரத்தைப் பெருக்கி அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதுதான். ஆனால் ஆணையம் தரும் மதிப்பீடுகளையே ஆராய்ந்து பார்த்தால்கூட நீர்வரத்து பெரிதாக ஒன்றும் அதிகரித்துவிடாது என்பது தெரிகிறது.

இதற்கான பணத்தை எங்கிருந்து திரட்டுவது என்பது ஒரு முக்கியமான கேள்வி. சந்தையிýருந்து திரட்டலாம் என்பது கவைக்குதவாத பேச்சு. அரசு கடனைத் திரும்பத் தரும் என்ற உத்தரவாதம் இல்லாமல் யாரும் கடன் தரமாட்டார்கள். இதனால் பயன் பெறும் மக்களிடமிருந்தும் பணத்தை வாங்க முடியாது.

உபரி நீரை எப்படி மற்ற இடங்களுக்குக் கொண்டு செல்வது என்பது மற்றொரு பிரச்சினை. கடற்கரையை ஒட்டியே மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா ஆகிய நதிகளுக்குக் கொண்டு செல்வதாகத் திட்டம். அதன் பிறகு பெண்ணாற்றுக்குச் செல்ல மேல்நோக்கிச் செலுத்த வேண்டும். இங்கே ஒரு கேள்வி. எல்லா நதிகளிலும் எப்போது வெள்ளம் பெருக்கெடுக்கிறது? இந்தப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை ஒரே சமயத்தில்தான் பெய்யும். ஆகஸ்ட் -அக்டோபர் காலகட்டத்தில் தென்னக நதிகளில் மழையின் காரணமாக அதிக நீர்ப்பெருக்கும் வெள்ளமும் ஏற்படும். இந்தக் காலகட்டத்தில் நீர்த் தேக்கங்கள் நிரம்பியிருக்கும். மகாநதி, கோதாவரியில் உபரியாகப் பாயும் நீரைத் தெற்கே கொண்டுவரலாம் என்றால் இந்த நதிகளில் நீர்வரத்து உபரியாக இருக்கும் சமயத்தில் மற்ற நதிகளும் நிறைந்திருக்கும். அப்படியென்றால், நீரை எடுத்துவந்து எங்கே விடுவது? வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் நீரைத் தேக்கிவைத்து வறண்ட காலத்தில் பயன்படுத்த வேண்டும் என்றால் கூடுதல் நீர்த்தேக்கங்கள் வேண்டும். நீர்த்தேக்கங்களைக் கட்டாமல் நீரைக் கொண்டுவந்தால் பேரழிவுதான் ஏற்படும். நீர்த்தேக்கங்கள் கட்டுவதானால் அதற்கான இடம், அங்குள்ள மக்களை இடம்பெயரச் செய்தல், காடுகளை அழித்தல் என்று சங்கிýத் தொடராகப் பல பிரச்சினைகள் உருவாகும். இதையெல்லாம் எப்படிச் செய்வது, பின்விளைவுகளை எப்படிச் சமாளிப்பது என்ற கேள்விகளையெல்லாம் இத்திட்டம் எழுப்பவே இல்லை.

சரி, வடக்கிýருந்து தெற்கு நோக்கித் தண்ணீரைத் திருப்பி விடுவதாக வைத்துக்கொள்வோம். பெண்ணாற்றிýருந்து காவிரிக்கு 9 பில்ýயன் கனஅடி நீர் வரும் என்பது திட்டம். இந்தத் தண்ணீர் வரும் வழியில் இருக்கும் விவசாயிகளும் தொழிலதிபர்களும் சும்மா இருப்பார்களா? வழிநெடுகிலும் திருடு போகும் நீர் போக எவ்வளவு மிஞ்சும்? கண்டலேறுக்கு வர வேண்டிய தண்ணீர் ராயலசீமாவில் பயன்படுவது நமக்குத் தெரியும். பஞ்ச காலத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகரிக்கும். அதற்கு என்ன செய்யப் போகிறார்கள்? அதிகம் நீர் தேவைப்படும் பணப் பயிர்களை வரும் வழியில் விவசாயிகள் விளைவித்தால் கூடுதலாக நீர் வீணாகும். இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது "உபரி' என்பது எவ்வளவு குறைவு நீர் என்பது தெரியும்.

தண்ணீரின் தேவையைக் கணக்கிடும்போது, பாசனம், தொழில் துறை, வீட்டு உபயோகம் ஆகியவற்றுக்கான தேவைகளைக் கணக்கிட வேண்டும். இதில் பாசனம் தவிர மற்ற இரு வழிகளிலும் செலவாகும் நீரின் பெரும்பகுதி நமக்குத் திரும்பக் கிடைக்கும். ஆனால் இதைச் சுத்திகரிக்காமல் பயன்படுத்த முடியாது. இந்த மூன்றில் பாசனத்திற்கான தேவையே அதிகம். ஓர் இடத்தில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் விளையும் பயிர்கள் எவ்வளவு, அதற்குத் தேவையான தண்ணீர் எவ்வளவு என்பதன் அடிப்படையில் "நிகரப் பாசனத் தேவை' கணக்கிடப்படுகிறது. ஆனால் இதைத் துல்ýயமாகக் கணக்கிட முடியாது என்பதே உண்மை. எங்கெல்லாம் நிலத்தடி நீர் (கிணறு, குட்டை போன்றவை) அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ அங்கு வீணாகும் தண்ணீர் மிகவும் குறைவு. கால்வாய் மூலம் வரும் தண்ணீரில் வீணாகும் அளவு அதிகம். ஆக, எதை வைத்து "நிகரப் பாசனத் தேவை'யைக் கணக்கிடுவது?

இப்போது நடைமுறையில் உள்ள வழிகளில் நிறையத் தண்ணீர் வீணாகிறது. இது எல்லோருக்கும் தெரியும். இதைக் குறைப்பதற்கான வழிமுறைகளை ஏன் ஆராய்வதில்லை? பாசனத் திறனை அதிகரிக்க அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது?

நீருக்கான தேவை வேகமாக அதிகரித்துவருகிறது. ஆனால் நதிகளை இணைப்பது இதற்கான தீர்வாக இருக்க முடியாது. நாடு தழுவிய, மையப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்காக இத்தனை லட்சம் கோடி செலவு செய்யும் விபரீத முயற்சிக்குப் பதிலாக நாடு முழுவதும் ஆங்காங்கே மழை நீர்ச் சேகரிப்பு, ஏரி, குளம் போன்ற மரபு சார்ந்த நீர்ப்பிடிப்பு முறைகளைப் புதுப்பித்தல் ஆகியவற்றில் ஈடுபடலாம். மிகக் குறைந்த செலவில் அதிகப் பலன்களைப் பெறலாம். உண்மையில் தண்ணீர்ப் பற்றாக்குறை பெரிய பிரச்சினை அல்ல. இருக்கும் நீரை ஒழுங்காக நிர்வகிக்காமல் இருப்பதுதான் பிரச்சினை. தஞ்சையில் போன ஆண்டில் போதிய மழை இல்லாமல் வறட்சி நிலவியது. ஆனால் பாசனம் அதிகரித்தது. இது எப்படி நடந்தது? கைவசம் உள்ள நீரைத் திறமையாகப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டாலே பிரச்சினையைச் சமாளிக்கமுடியும்.

எந்த நதி எந்த நதியோடு, எந்த வழியில் இணைக்கப்படும் என்பதை அரசின் வரைபடம் காட்டுகிறது. ஆனால் வெவ்வேறு இணைப்புக் கால்வாய்களில் எந்த அளவு தண்ணீர் எடுத்துச் செல்லப்படும், எந்த இடங்கள் அதனால் பயனுறும் என்பது பற்றிய தகவல்கள் இல்லை. இந்த வரைபடத்தின்படி பார்த்தால் உபரி நீர்ப்பெருக்கு கங்கை, பிரம்மபுத்திரா, மகாநதி ஆகிய ஆறுகளின் வழியே சென்று வங்கக் கடýல் கலப்பதற்குப் பதிலாகக் கிருஷ்ணா, கோதாவரி, பெண்ணாறு ஆகிய ஆறுகளின் வழியே சென்று வங்கக் கடýல் தஞ்சமடையும். இதுதான் இந்த மாபெரும் திட்டம் ஏற்படுத்தக்கூடிய பலன்!

இந்தத் திட்டத்தால் மக்களுக்கும் இயற்கைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றிய அலட்சியம் அரசுத் தரப்பில் நிலவுகிறது. "வளர்ச்சி'யின் தவிர்க்க இயலாத பின்விளைவுகளாக இவற்றைப் பார்க்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இடம்பெயர வைக்கப்படும் மக்கள் நடத்தப்படும் விதம், தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்துவதால் நிலத்திற்கு ஏற்படும் சீரழிவு, நீர்நிலைகளில் ஏற்படும் மாசுபாடு ஆகியவற்றை அவ்வளவு சுலபமாக அலட்சியப்படுத்தி விட முடியாது. பின்விளைவுகளைப் பற்றிய போதிய புரிதலோ அக்கறையோ இல்லாமல் பெருமளவு நீரைக் கொண்டுவருவதன் தீயவிளைவுகளுக்கான உதாரணமாக இராஜஸ்தானின் இந்திரா காந்தி கால்வாய் அனுபவம் இருக்கிறது.

இந்தத் திட்டம் சாத்தியம்தானா என்பதற்கான பூர்வாங்க ஆய்வுகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. தவிர, மக்களை இடம்பெயரச் செய்வது, காடுகளையும் ஊர்களையும் மூழ்கடிப்பது, சுற்றுச் சூழýல் ஏற்படக்கூடிய தாக்கங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்யப்படவில்லை. இதையெல்லாம் நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்து வதற்கான சிறப்புப் பணிக் குழுவின் தலைவர் சுரேஷ் பிரபுவே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட அனைவரது கவலைகளும் திருப்திகரமான விதத்தில் கவனிக்கப்பட்ட பிறகே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தேசிய நீர்வள மேம்பாட்டு ஆணையம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்த விரிவான ஆய்வின் அடிப்படையில் இந்தத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமான குழுக்களும் பல்வேறு நிபுணர்களும் இந்த ஆய்வையும் திட்டங்களையும் பரிசீலனை செய்து அங்கீகரித்திருப்பதாக இந்த ஆணையம் கூறிக்கொள்கிறது. பரிசீலனை செய்தவர்கள் யார், எந்த ஆய்வு முறையியலை அவர்கள் பின்பற்றினார்கள், அவர்களது முடிவுகள் என்ன என்பதெல்லாம் பரம ரகசியமாகப் பாது காக்கப்படுகின்றன. பல தனியார் அமைப்புகளும் வல்லுநகர்களும் பல முறை கோரியும் இது தொடர்பான ஆவணங்கள் பொதுவில் முன்வைக்கப்படவில்லை. சிறப்புப் பணிக்குழு, தனது இணையதளத்தில் எல்லாத் தகவல்களும் ஆவணங்களும் கிடைக்கும் என்கிறது. ஆனால் கிடைப்பதெல்லாம் பொத்தாம் பொதுவான தகவல்கள் மட்டுமே.

சர்தார் சரோவர், பக்ரா நங்கல் ஆகிய அணைக் கட்டுத் திட்டங்களை வடிவமைப்பதற்கு முன் பல ஆண்டுக்கால விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. அப்படியும் அவற்றில் ஆயிரத்தெட்டுப் பிரச்சினைகள் முளைக்கின்றன. தேசிய நதி இணைப்புத் திட்டம் போன்ற மிகச் சிக்கலான திட்டத்தை வடிவமைப்பதற்கான ஆய்வுகளும் முன் தயாரிப்புகளும் அதைவிடப் பல மடங்கு மேற்கொள்ளப்பட வேண்டும். இப்போது செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகள், மிக மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. போதிய ஆய்வுகளும் முன் தயாரிப்புகளும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என்று அரசு சொல்லுமேயானால், இத்திட்டம் தொடர்பான ஆவணங்களை முழுமையாக அது வெளியிட வேண்டும். அனைத்துத் தகவல்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.

இத்திட்டத்தின் அடிப்படைக் கருத்தியல், வழி முறை, சுற்றுச்சூழல், பொருளாதாரம், அதன் பலாபலன்கள் குறித்த மதிப்பீடுகள் ஆகிய அனைத்தும் சுயேச்சையான நிபுணர் குழுவினரால் மிகக் கவனமாகவும் விரிவாகவும் விருப்பு வெறுப்பற்ற நிலையிலும் ஆய்வு செய்யப்பட வேண்டும். திட்டம் குறித்த வெளிப்படையான விவாதம் நடைபெற வேண்டும். திட்டத்தின் அனைத்து அம்சங்களும் நிபுணத்துவம் வாய்ந்த அமைப்புகளால் ஆய்வு செய்யப்பட்ட பிறகே செயல்படுத்தப்படும் என்று சுரேஷ் பிரபு உறுதியளித்துள்ளார். இதுவரவேற்கத்தக்க வாக்குறுதிதான். ஆனால் இந்த ஆய்வின் வரையறைகள், வழிமுறைகள் ஆகியவற்றைத் தெளிவுபடுத்தி, ஆய்வு முறையாக மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்வரை இந்த வாக்குறுதி எந்த நம்பகத்தன்மையும் பெற முடியாது.

வளம் பெருக்கும் நீர்வழிச் சாலைகள்
அரசு அறிவித்துள்ள திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

தேசிய நெடுஞ்சாலைகள் நாட்டின் ஒரு பகுதியை இன்னொரு பகுதியுடன் இணைப்பதுபோல தேசிய நீர்வழிச் சாலைகள் தேசத்தின் அனைத்து நதிகளையும் இணைக்கும். இதற்காக 1500 கி.மீ. நீளமுள்ள தேசிய நீர்வழிச்சாலை உருவாக்கப்படும். இது 1500 கி.மீ. நீளமுள்ள நீர்த் தேக்கமாகச் செயல்படும். இதன் மூலம் பாசனப் பகுதிகள் கணிசமாக அதிகரிக்கும். எப்போது வேண்டுமானாலும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். நாட்டின் எந்தப் பகுதியிலும் பாசனத்திற்கோ குடிநீருக்கோ பற்றாக்குறை இருக்கவே இருக்காது.

வெள்ளப் பெருக்கெடுத்துக் கடýல் சென்று கலக்கும் தண்ணீர்தான் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இமய மலைப் பகுதிகளில் இந்த நீர்வழிச் சாலை 500 மீட்டர் உயரம் கொண்டதாகவும் மத்திய நீர் வழிச் சாலை 300 மீட்டர் உயரம் கொண்டதாகவும் தென்னக நீர்வழிச்சாலை 10 மீட்டர் உயரம் கொண்டதாகவும் இருக்கும். இதன் மூலம் அபரிமிதமான மின்சாரத்தையும் உற்பத்தி செய்ய முடியும். கங்கையிýருந்து காவிரிக்கும் காவிரியிýருந்து கங்கைக்கும் நீர் செல்ல முடியும். பிரம்மபுத்திராவில் நீர் அதிகமாகவும் கங்கையில் குறைவாகவும் இருக்கும்போது பிரம்மபுத்திராவிýருந்து கங்கைக்கு நீர் செல்ல முடியும். கங்கையிýருந்து யமுனையிலும் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது பிரம்மபுத்திராவுக்கு நீர் போகும். வெள்ள நீரானது நீர்வழிச் சாலைகளில் சேமித்து வைக்கப்பட்டு ஆண்டு முழுவதும் கிடைப் பதற்கான ஏற்பாடு செய்யப்படும். இதன் இதர சிறப்பம்சங்கள்:

250 மில்ýயன் வேலைவாய்ப்புகள்.
வெள்ளம் பெருமளவில் கட்டுப்படுத்தப்படும்.
வறட்சிப் பகுதிகளில் பாசனத்திற்கும் குடிப்பதற்கும் நீர் கிடைக்கும்
வெள்ளத்தின் பேரழிவுகளை இது கட்டுப்படுத்தும்.
நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் நீர்த் தட்டுப்பாடே இருக்காது.
விவசாய உற்பத்தி 2050இல் நமக்குத் தேவையான அளவுக்கு அதிகரிக்கும்.
நிலத்தடி நீர் அதிகரிக்கும்
தேசிய நீர்வழிச் சாலையின் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வசூýக்கப்படும்.
நீர் வழிச் சாலைகளை ஒட்டி, மாசுபாடற்ற புனல் மின்நிலையங்களின் மூலம் ஆண்டுக்கு 60,000 மெகாவாட்ஸ் மின்சாரம் தயாரிக்கப்படும்.

(ஆதாரம்: "இரண்டாவது விடுதலை' என்ற பெயரில் தேசிய நீர்வழி மேம்பாட்டு கவுன்சில் வெளியிட்ட பிரசுரம்.)


Courtesy : Kalachuvadu - June 2004
(The views expressed here are personal and need not necessarily reflect the entire views of www.rajinifans.com)